Saturday 29 December 2012

அம்மாவுக்கான உணவு



“அம்மா!” எனும் மொழி தரும் அங்கீகாரமும் அன்பும் உலகின் எந்த சொல்லுக்கும் இல்லை. அன்னை காட்டும் அன்பும், கூடுதல் அக்கறையும் தர உலகில் வேறு எந்த உறவும் கிடையாது. இணையான உள்ளமும் கிடையாது.  “பிறந்த குழந்தையை பிரசவித்த மறுகணம் தாயின் வயிற்றில் வைத்தால், அது தாயின் மார்பைப் பற்றி தன் முதல் சீம்பாலினை உறிஞ்சத் துவங்கும். யாரும் அதனை வழிகாட்ட வேண்டியதில்லை என்ற செய்தி தரும் கவித்துவமும், வியப்பும் ஏராளம். அந்த கணம் முதல், “ நீ சாப்பிடியாப்பா? சாகப்போற போற வயசில் எனக்கெதுக்குப்பா இதெல்லாம்?.. நீ முதல்ல சாப்பிடு”-என்று வயோதிகத்தில் கேட்கும் கரிசனமும் தான் அன்னை. கடைசி மூச்சு வரை உணவூட்டும் அந்த அன்னைக்கு என்ன உணவூட்டலாம்?

தாய் எனும் சொல்லுக்கு தயாரான அந்த பிரசவித்த கணம் முதல் கூடுதல் ஊட்ட உணவு முக்கியம். தாய்ப்பாலின் மகத்துவம் பரவலாக ஓரளவு தெரிந்ததில்,  “தாய்ப்பால் கொடு கொடு! என ஊக்குவிக்கும் கணவன் அதைச் சீராக சுரக்கும் தாய்க்கு கொடுக்கும் அக்கறை சில நேரத்தில் கொஞ்சம் குறைவு தான். ஊட்டமான உணவும் உள்ளமும் மட்டும்தான், பாலை சுரப்பித்திட, அந்த அன்னை ஊக்கமாய் சோர்வின்றி இருந்திட உதவும். “பச்சை உடம்புக்காரிஎன நம் பாரம்பரியம் அந்த புது அன்னையை பராமரித்த விதம் அலாதியானது; அறிவியல் மெச்சக்கூடியது. முதல் ஓரிரு மாதங்கள் பத்தியமாய்ச் சாப்பிடச் சொன்னது, தாய்ப்பாலின் குணத்தைக் கூட்ட மட்டுமல்ல, அதை சுரக்கும் அன்னை ஊட்டமாய் இருந்திடவும் தான். அதிக எண்ணெய் ப்லகாரம், முந்தைய நாள் சமைத்த உணவு, சீரணிக்க சிரமப்படும் பலகாரங்களைத் தவிர்ப்பது முக்கியம்.
0-6 மாத குழந்தைக்கு பாலூட்டும் தாய்க்கு 550 க்லோரியும்; 6-12 மாத குழந்தைக்கு பாலூட்டும் தாய்க்கு 400க்லோரியும் கூடுதலாக தேவை என்கிறது இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம்.  ‘அட! ஏற்கனவே, மகவை சுமக்கும் போது 10கிலோ வெயிட் போட்டாச்சு..இன்னும் சாப்பிடவா?.. நான் வெயிட் குறைக்க டயட் செய்யலாமா? என கேட்கும் புது அம்மாக்கள் இன்று அதிகம். புது அன்னை டயட்டிங்கில் போகவே கூடாது. தாய்ப்பால் கொடுக்கும் பருவத்தில், பல மகளிர் இயல்பாக எடை குறைவது நடக்கும். பிரசவித்த வயிறு தொளதொளவென தொப்பையாகத் தொங்கி தங்கிவிடாமலிருக்க, நல்ல யோகாசனப்பயிற்சி, பட்டி கட்டுதல் எனும் பழக்கம் நிச்சயம் உதவிடும். அருகாமை சித்தமருத்துவரை அணுகி அதற்கென ஆலோசியுங்கள். 6-7 மாசம் விட்டுவிட்டு, அப்புறமாய்ச் சிற்றிடை கனவில் சிலாகிக்க முடியாது..(எப்போதுமே சிசேரியன் செய்யாத ஆண்களின் தொப்பை வேறு விஷயம்!)
கால்சியமும், விட்டமின் சத்தும், இரும்புச் சத்தும், புரதமும் கொஞ்சம் கொழுப்புச் சத்தும் தாயப்பால் கொடுக்கும் காலத்தில் கூடுதலாய் அன்னைக்கு அவசியம் தேவை. காலையும் மாலையும் பால், காலைஉணவுடன் அத்திப்பழம்-2; கொஞ்சம் சத்துமாவு கஞ்சி சாப்பிடுவது அவசியம். பஜ்ரா(கம்பு) ரொட்டியுடன் முருங்கைக்கீரை பொறியல் இரும்ப்ச்சத்து குறைவான அம்மாவுக்கு அத்தியும், கம்பும் அவசியம் வேண்டும்.  “ஸ்கூல் பிள்ளைங்களையே கம்பை காட்டக் கூடாது. அடிக்க கூடாதுங்கிறோம்..பிள்ளை தாச்சிக்கு போய் கம்பு அது இதுன்னு மிரட்றீங்களே!னு அடிக்க வர வேண்டாம். இது தானிய வகை கம்புங்க..அதிக இரும்புச் சத்துள்ள இந்த கம்பை வாரம் ஒரிரு நாள் சோறாகவோ அடையாகவோ செய்து சாப்பிட மலசிக்கல் மூலம் தராமல் இரும்புச்சத்து ஏறும். பல அன்னைக்கு பிரசவம் போது மூலனோய் வந்து இரத்தக் கசிவு இருப்பது உண்டு. அத்தியும், முருங்கையும் மலத்தினை இளக்கி மூலத்தையும் போக்கும். இன்னும் பால்சுரப்பைக் கூட்டும் சுறாமீன் புட்டு, பாலளவைக் கூட்டும் சம்பா கோதுமை, கால்சியம் சத்து நிறைந்த ராகி, விட்டமின் சத்து நிறந்த பழங்களும், காய்கறிகளும் நிரைவாக சாப்பிடுவது மிக மிக அவசியம். சதாவரி கிழங்கில் செய்த லேகியம் அன்னைக்கு சித்த மருத்துவம் தந்த வரப்பிரசாதம். உலகளவில் இன்று ஏற்றுக் கொள்ளப்பட்ட இந்த மூலிகை galactogogue- இன் முக்கியத்துவம் புரிந்து புது அன்னை ஒவ்வொருவரும் முதல் 8 மாதம் சாப்பிடுவது அவர்களையும், அவரது செல்ல மகவையும் போற்றிப் பாதுக்கும். தாய்ப்பால் தரும் அன்னைக்கு தண்ணீர் ரொம்ப முக்கியமான உணவு. நீர் கூடுதலாக 1½ லிட்டர் குடிக்க வேண்டும்.
பிரசவித்த அன்னைக்கு, மகிழ்வின் உச்சத்திலுள்ள கணவனும், மாமியாரும், அன்னையும் இயல்பாய் கூடுதல் அக்கறை காட்டுவது இந்த ஆணாதிக்கச் சமூகத்தில் இயல்பு. அவள்தம் மகப்பேற்றில் அங்கீகரிக்கப்படுபவர் அவர்களுமல்லவா? அதனால் இயல்பாகவே கரிசனம் கூடுதலாய்த்தான் இருக்கும். ஆனால் அதன்பின் என்னைப்பொறுத்த மட்டில், மெனோபாஸ் சமயத்தில் நிற்கும் அம்மாதான்   அநேகமாக அதிகம் நிராகரிக்கப்படும் அம்மா. கொஞ்சம்  ‘பிடித்தம் குறைந்து போன கணவன், தனக்குள் நிகழும் எரிந்து விழ வைக்கும் ஹார்மோன் மாற்றம், டீன் துள்ளலில் எதற்கெடுத்தாலும் ‘நண்பேண்டா! என வீட்டை மறந்து திரியும் பிள்ளைகள், இவற்றுடன், பஸ் ரயிலேறி அலுவலகத்திற்கு வந்தால் புன்னகைக்க கூட மறுக்கும் சக ஊழியர்கள் என மெனோபாஸ் அன்னைக்கு சவால்களும்  சங்கடங்களும் அதிகம்
40க்கு மேல் வரும் இந்த நாட்களில் அந்த அன்னைக்கு ஈஸ்ட்ரோஜன் சத்து நிறைந்த உளுந்து, சோயா, ஓட்ஸ் உணவும் கூடுதல் கால்சியம் உள்ள ராகி, முருங்கை, முட்டை, பால், பச்சைப்பட்டாணி, அவரை, மீன், விட்டமின் ப் நிறைந்த அவரை, விட்டமின் சி நிறைந்த பெரிய நெல்லி அவசியம் வேண்டும். இப்போது அதிக அவசியம் என அறியப்படும் ஒமேகா 3 சத்து நிறைந்த ஃப்லேக்ஸ் விதைகள், மீன் எண்ணெய் மிக அவசியம். ஃப்ளேக்ஸ் விதைகளை பொடி செய்து 1ஸ்பூன் அளவு மோரில் தினசரி சாப்பிடலாம்.மாதவிடாய் முடியும் சமயத்தில் மருத்துவ பரிசோதனை செய்து , குறிப்பாய் ஆஸ்டியோபோரோசிஸ், மார்பு புற்று, கருப்பை கழத்து புற்று இருக்கிறதா எனத் தெரிந்து கொள்வது இப்போது மிக மிக அவசியம். சமீபத்திய புள்ளி விவரங்கள் எல்லாம் மிரட்டுவது பெண்ணில் இவ்வயதில் கிடுகிடுவென பெருகி வரும் புற்றைப்பற்றித்தான்.
அடுத்து முதுமையான அன்னைக்கு; அவள் உங்கள் குழந்தை. சில நேரங்களில் அந்த முதுமையான அன்னை காட்டும் பிடிவாதம், உங்களுக்கு எரிச்சல் தரக் கூடாது. மலம் சிறுநீர் கழிக்க உங்கள் உதவி தேவைப்படும் போது சிரமமாய் நினைக்க்க் கூடாது. விட்ல பிள்ளைங்களுக்கு வாங்கி வச்ச நொறுவல வயசு காலத்துல சாப்பிட்டுடு இப்ப சங்கடப்படறாது யாரு?ன்னு, சொல்லிக்காட்டக் கூடாது. டயப்பர் இல்லாத காலத்தில் உங்களை பஸ்சில் தூக்கிக் கொண்டு போகும் போது இடுப்போடு நீங்கள் இருந்த மலத்தை அவள் அசிங்கமாக நினைக்காமல், அணைத்து தூக்கிவந்து பார்த்ததை மறந்துவிடக் கூடாது. முதுமையான அன்னைக்கு, உணவுத் தேவை அளவில் குறையும். அளவில் குறைந்த அந்த உணவு கால்சியம், விட்டமின் சத்து நிறைந்ததாக லோ கிளைசிமிக் தன்மையுடன் இருக்க வேண்டும். நெய் போடாத பொங்கல், கீரை கூட்டுடன் சப்பாத்தி, புதினா, மல்லி சட்னியுடன் இட்லி, நீர்க் காய்கறிகளின் கூட்டு, கூழாக பிசைந்த புழுங்கலரிசி சாதம், மாலையில்  நன்கு ஊற வைத்த சிகப்பரிசி அவல், இரவில் எளிதில் செரிக்க வைக்கும் இட்லி அல்லது அரிசிக்கஞ்சி, சிறு வாழைப்பழம் அவர்களுக்கான உணவு. மோர் குடிப்பது பாலைக் காட்டிலும் அவர்களுக்கு நல்லது.
அன்னை உணவூட்டுவது மரபு. அன்னையின் நலம் கருத்தில் கொண்டு, சான்றோன் என உலகம் நம்மைச் சொல்ல, அவள்  நமக்குச் செய்த தியாகங்களை கொஞ்சம் நினைவில் கொண்டு, சின்னதாய் ஒரு கவளம் அவள்தம் முதுமையில் ஊட்டிவிடுங்கள். அவள் தன் வாழ்வில் பெறும் உச்சகட்ட வசந்தம் அது!

Tuesday 25 December 2012

Tamil Nadu: Dalit priest driven to suicide


Where the Tamil Nadu is going? Friends as you know most of the dalits has converted to christian because to escape from the traditional caste system in the bledy varnashrama system. But in the Christianity the same varnashrama system has been adopted among the christian priests. It is quite shame in the the Christianity particularly in Roman Catholic(RC). There are lot of bitter experience and evidence are available as a case study among christian. So this system must be destroyed and  now peoples are seeking alternatives to end this discrimination.  The below incident is highly condemnable! we don't know, what the particular christian authority is doing? But this culprits are speaking about the great activist Jesus Christ! What a shame in the system?.The caste system in every where in India is the threat to justice everywhere in India.
G. MOORTHY 

Residents block the road at T. Kallipatti in Theni district demanding the arrest of persons responsible for the suicide of the Dalit priest.
A PALL of gloom has descended on T. Kallipatti, a predominantly Dalit village in Tamil Nadu’s Theni district, where a 22-year-old Dalit priest committed suicide on December 7 after he was allegedly subjected to a witch-hunt by caste Hindus.
The Dalits of T. Kallipatti and several other villages in the district are agitated over the suicide of S. Nagamuthu, who played a major role in the renovation and maintenance of a local temple.
Demonstrations and road roko agitations were held in the area, seeking police intervention to bring all those behind the tragedy to book. Posters have appeared in some villages flaying the “casteists” who drove the youth to death.
Nagamuthu was the son of a farmhand. A suicide note purportedly written by him blamed seven persons, including three caste Hindus, for his death. Among them are some politically influential persons. Accusing the police of not providing security to him and his family, the youth said that he was ending his life to ensure the safety of his family.
Local residents felt Nagamuthu must have taken this extreme step as he was systematically sidelined by casteist elements, who debarred him from entering the Kailasanathar temple, built several years ago on a hillock near the village. It was Nagamuthu who took the initiative seven years ago to renovate the temple, which was in a bad shape. Apart from assisting a priest in conducting pujas, he himself shouldered the responsibility in the absence of the former.
However, shortly after the hill shrine was renovated a couple of years ago and devotees started visiting it, the temple administration members dropped Nagamuthu like a hot potato. They even advised him to keep off, particularly on auspicious occasions, as caste Hindus would be reluctant to visit the temple when a Dalit was present during ceremonies, the victim’s father, N. Subburaj, alleged.
Nagamuthu ignored the advice, and he was assaulted by some persons on May 5. The local police did not register a first information report though he lodged a complaint with them. Some caste Hindus, in “connivance” with the police, brought pressure on Nagamuthu and his family to withdraw the complaint.
However, Nagamuthu, with the help of the Madurai-based NGO Evidence, moved the Madurai Bench of the Madras High Court. Following a court directive on August 31, the Thenkarai police registered a case on September 2 under Sections 294(b), 323, 506(1) of the Indian Penal Code and Section 3(1)(x) of the Scheduled Castes and Scheduled Tribes (Prevention of Atrocities) Act, 1989. But the threats and intimidation continued. There was even a bid on his life, Subburaj alleged.
According to M. Andiappan, Oor Thalaivar (community leader), the village has a sizeable number of educated persons belonging to the oppressed caste. Several of them are traders, contractors or government employees, though farm workers form the major chunk of the population. As awareness among the Dalits has been rising steadily, they are no longer prepared to put up with the discrimination and insults.
As a mark of protest, Nagamuthu’s parents and relatives did not receive his body for five days. He was buried in T. Kallipatti village on December 12. The police have registered a case of abetment to suicide and arrested one person. Another accused has surrendered before a Madurai court.
S. Dorairaj Thanks to 
Frontline


Wednesday 5 December 2012

கடைசியில் வந்தாலும்..கலக்கும் பெருங்காயம்!




மனதை உணவின் பால் வசீகரீக்கச் செய்யும் மணமூட்டிகள், உடலில் பல விந்தைகளையும் செய்து நம்மை நோயின்றி காப்பது ஒரு ஆச்சரியமான விஷயம் என்றால், அதன் பயன் தெரிந்து அன்றாட உணவில் அதை அளவாய் சேர்க்கச் செய்த நம் முன்னோர்களின் அறிவாற்றலை, நுண்ணறிவை என்ன சொல்வது?  “ நீர் கருக்கி, மோர் பெருக்கி நெய்யுருக்கி உண்போர் தம் பேர் உரைக்கிற் போமே பிணி,”-என்று நீரையும், மோரையும், நெய்யையும் எப்படிச் சாப்பிட்டால் நோய் வராது என்று சொன்ன நம் சித்தர்கள், மணமூட்டிகளை பயன்படுத்திய விதமும், அளவும் இன்று பல மேற்கத்திய மருத்துவ ஆய்வகங்களின் மூளையை கசக்கிக் கொண்டிருக்கிறது. சர்க்கரையை நோயை வெல்ல இலவங்கப்பட்டை; புற்றை வெல்ல மஞ்சள்; இதய நோயை வெல்ல வெந்தயம்; இரத்தக் கொதிப்பை வெல்ல வெள்ளைப்பூண்டும் என நீளூம் இந்த பட்டியலில் இன்று நாம் பார்க்கப் போவது பெருங்காயத்தைப் பற்றி.

மிக நுண்ணிய அளவில், பல நேரங்களில், “அடடா! போட மறந்துட்டோமே! என்று நினைக்க வைக்கும் இந்த மூக்கைத்துளைக்கும் மணம் கொண்ட பெருங்காயம், காயத்திற்கு(உடலுக்கு) செய்யும் மருத்துவ நன்மை பெரிதினும் பெரிது. இதன் மூக்கைத் துளைக்கும் தீவிர மணத்தின் அருமை தெரியாத மேற்கத்தியர் ஆரம்பத்தில் இதற்கு வைத்த பெயர் “ நாற்றம்பிடித்த பிசின்/பிசாசின் மலம்”(devil’s dung /stinking gum).கழுதைக்குத் தெரியுமா கற்பூர வாசனை என்பது 1918-இல் பெருங்காய விஷயத்தில் ஊர்ஜிதமானது. கிட்டத்தட்ட வாரம் ஒன்றுக்கு 10,000 அமெரிக்கர்களை பலிவாங்கிய ஸ்பானிஷ் விஷ ஜுரத்தின் (SPANISH FLU) போது, மற்ற மருந்துகள் எல்லாம் பொய்த்துப் போன போது பெருங்காயம் தான் கடைசியில் ஒட்டுமொத்த அமெரிக்கரையும் காப்பாற்றியது. இன்று உலகின் அத்தனை மருந்துகளையும் தர கட்டுப்பாடு செய்து உலகெங்கும் மருத்துவ விற்பனையை ஒழுங்குபடுத்தும்(?) அமெரிக்காவின் FDA  அமைப்பு பெருங்காயம் Spanish flu-ற்கு பயனளிக்கும் என்று அங்கீகரித்து பயன்படுத்த அறிவுறுத்தியது. ’பிசாசு மலம்-ஐய்யயே!’- என்று ஏளனம் செய்தவரெல்லாம்- உருத்திராட்சம் போடுவது போல், பெருங்காயக் கட்டியை கழுத்தில் போட்டு தம்மைக் காப்பாற்றிக் கொண்டதை வரலாறு வர்ணிக்கிறது. அதன்பின் 2009-இல் பறவைக்காய்ச்சல் உலகெங்கும் பயமுறுத்திய போது, அதே அமெரிக்க, ஐரோப்பிய விஞ்ஞானிகள் பெருங்காயம் HINI VIRUS-க்கு எதிராக ஆய்வகத்தில் செயல் புரிவதை மீண்டும் நிரூபித்தனர்.

பறவைக்காய்ச்சல் பன்றிக்காய்ச்சல், கன்னுக்குட்டி காய்ச்சல்... என  இனி வருஷத்துக்கு நான்கு காய்ச்சல் வரக்கூடும். இயற்கையில் அவை வருகிறதா? அல்லது ஏதும் மருந்து கம்பெனி உருவாக்கி உலக சந்தையில் ஓட்டி விடுகிறதா என்பது தெரியவில்லை. இருந்தாலும் எந்த விஷ சுரத்திற்கும், நம்மைக்க் காத்துக் கொள்ள ஒரு சிட்டிகை பெருங்காயம், மோரிலோ/சாம்பாரிலோ/ரசத்திலோ தினம் சேர்ப்பதே பலனளிக்கக் கூடும்..  (எனக்குத் தெரிந்து இந்த மாதிரி நல்ல விஷயங்கள் பர்கர்/பிட்சா போன்ற வெளி நாட்டு குப்பை உணவுகளில் சேர்ப்பது கிடையாது..)

அருந்தியது அற்றது போற்றி உணின்..என்ற வள்ளுவர் வரிகள் மிக மிக ஆழமான அர்த்தம் பொருந்தியவை..சாப்பிட்ட உணவு முழுமையாய் சீரணித்து, உட்கிரகிக்கப்பட்டு, பின் உணவை சாப்பிடுவோருக்கு மருந்தென வேண்டாவாம் - என்ற பொருள் தரும் அந்த குறள். அத்தகைய முழுமையான சீரணம் தர உதவுவது பெருங்காயம். நெஞ்சக் கரித்து, வயிறு உப்பி, எதுக்களித்து சிரமப்படும், GERD/PEPTIC ULCERS நோயாளிகளுக்கு பெருங்காயம் கை கண்ட மருந்து. குறிப்பாய் எந்த வாயு தரும் உணவை சமைக்கும் போதும் (வாழைக்காய்/கொண்டைக்கடலை/முட்டைகோஸ்). கடைசியில் துளி பெருங்காயம் போடுவது சீரணித்தை துரிதப்படுத்தி, வாயுவை விலக்கும். வாயுவால் மூட்டுவலி வருவதைத் தடுக்கும். குடல் தசைகளை இலகுவாக்கி, வாயு தங்காமல் இருப்பதை நிரூபித்த ஐரோப்பிய ஆய்வாளர்கள் IRRITABLE BOWEL SYNDROME  எனும் குடல் அழற்சியுடன் அடிக்கடி சாப்பிட்டவுடன் மலம் கழிக்க தூண்டும் நோயிலும் இதன் பயனை அறிந்தனர்.

சீரணம் மட்டுமல்ல. புற்று நோயிலும் கூட இந்த தாவர ரெசின் பயனளிப்பது கண்டறியப்பட்டுள்ளது. நுரையீரல், மார்பகம், குடல் புற்று நோய் செல் வளர்ச்சியை 50% க்கும் மேலாக கட்டுப்படுத்துவதை ஆரம்ப கட்ட ஆய்வுகள் உறுதிப்படுத்தியுள்ளன. அதற்காக நுரையீரல் புற்றுக்கு மருந்து வேண்டாம்; ஒரு கிளாஸ் மோரில் பெருங்காயம் போட்டு சாப்பிடுங்க என சொல்ல வரவில்லை.. தொடர்ச்சியாக உணவில் அதை சேர்க்கும் போது இப்புற்று வகைகள் கட்டுப்படுத்தப்படும்; தவிர்க்கப்படுவதற்கான வாய்ப்புகள் இருப்பது திண்ணம்..

பசி உண்டாக்குவதில் பெருங்காயம் செய்யும் பணி மகத்தானது. உங்கள் வீட்டுக் குழந்தைகள் சாப்பிட மறுக்கிறதா?.அவர்கள் பிடிக்கும் அடத்தில் உங்களுக்கு டென்ஷன் தலைக்கு ஏறுகிறதா? சுக்கு, மிளகு, திப்பிலி, ஓமம், சீரகம், கறிவேப்பிலை, இந்துப்பு ஒவ்வொன்றும் 30 கிராம் எடுத்துக் கொள்ளுங்கள். 15 கிராம் பெருங்காயத் தூள் (வறுத்தது) எடுத்து, ஒன்றாக வருத்து, இடித்து மையாக பொடித்து சலித்து கலந்து வைத்துக் கொள்ளுங்கள். ஒவ்வொரு முறை உணவு சாப்பிடுகையிலும்  ஒரு கவளம் முதல் உருண்டையை இந்த பொடி போட்டு உருட்டி சப்பிட செய்யுங்கள். பசி, சீரணம் நிச்சயம் கிடைக்கும். அதனால் தான் மலம் எளிதில் கழிய வைக்க, வயிற்றுப்புண் போக்க, செய்யும் பல சித்த மருந்துகளில் காயம் கட்டாயம்!

மகளிருக்கு காயம் ஒரு சிறந்த மருந்து. ஆனால் கர்ப்பிணிப்பெண்கள் அதிகம் சேர்க்கக் கூடாது. மாதவிடாய் சரியாக வராதவர், அதிக இரத்தப்போக்கு இல்லாமல் லேசாக வந்து செல்லும் மகளிக்கு காயம் அதனை சீர்படுத்தும். உடலில் வெப்பத்தை தூண்டி, நரம்பை தூண்டும் இந்த மூலிகை, ஆண்களின் காம இச்சையையும் அதிகரிக்கக் கூடியது என்கிறது சித்த மருத்துவம்.

பெருங்காயம் வெளிறிய மஞ்சள் பழுப்பு நிறத்தில் இருக்க வேண்டும். கருத்திருந்தால் வாங்க வேண்டாம். அதே போல் அதன் மணம் எளிதில் போய் விடுமாதலால், நல்ல காற்றுப்புகாத கண்ணாடி குவளையில் போட்டு வைத்திருப்பது அதன் மணத்தையும் மருத்துவ குணத்தையும் பாதுகாக்கும்.

வயதானாலும் அழகாய், பொலிவாய் இருக்கணுமா? இத கொஞ்சம் படிங்க...


அழகாய் இருத்தலுக்கும் பொலிவாய் தெரிதலுக்கும் ஆசைப்படாதோர் இவ்வுலகில் இப்போது இல்லை. வயது ஏறும் போது ஏற்படும் வயோதிக உடல் மாற்றத்தை ஒத்துக் கொள்ள முடியாத மனமும் வாழ்வும் ஒட்டிக் கொண்ட உலகம் இது. நரை, திரை மூப்பில் நம்பிக்கையில்லாமல் அழகு சாதனங்களை அள்ளிக் குவித்தாவது, இளமையை இன்ஸ்டன்டாக பெற முயற்சிக்கும் நம்மில் பலருக்கு உணவு ஒரு மார்க்கண்டேய மந்திரம் என்பது தெரியாது. ஒரு பவுண்டேஷன் கிரீம், அதன் மேல் சிகப்பழகு கிரீம், அதன் மேல் ஒரு சன் ஸ்கிரீனர், கொஞ்சமாய்  ‘ஆன்ட்டி ஏஜிங் ஃபார்முலா, என தேய்த்து பிட்சா கார்னருக்கு கிளம்பும் பல ஆன்ட்டிகளுக்கு , FINGER FRIES WITH PIZZA சாப்பிட்டால் சீக்கிரம் வயசாகும் என்பது தெரியவில்லை..  ‘ஸ்கின் ட்ரை ஆகுதுப்பா.. நீ என்ன கிரீம் யூஸ் பண்ற? என குளிர்பானத்தை உறிஞ்சுக் கொண்டே கேட்கும் யுவதிக்கு, தான் உறிஞ்சும் குளிர்பானமே தன் வயதை உறிஞ்சும் என்பது தெரியவில்லை.

காலையில் சாப்பாட்டுக்கு முன்னாடி - 1 மாலையில் சாப்பாட்டுக்கு அப்புறம் - 1 என யாராவது உங்கள் வயதைக் குறைக்கிறேன் –னு சொன்னால் நம்ப வேண்டாம். அக்மார்க் டுபாக்கூர் மாத்திரை வியாபாரம் மட்டுமே அது. மருந்து மாத்திரையால் வயதை குறைக்க முடியாது; வாலிபத்தை மீட்ட முடியாது. ஆனால் உணவால் முடியும். உணவால் இளமையை இழக்காமல் வைத்திருக்க முடியும். எப்படி?

முதலில் ஒரு சூப்பர் ரகசியம்..பத்து மலை தாண்டி பத்து கடல் தாண்டி கிடைக்கும் குலேபகாவலி மூலிகைக்கெல்லாம் போக வேண்டாம்..குழாய் தண்ணீர் சுடவைத்து ஆறவைத்து தினசை 4-5 லிட்டர் குடித்தாலே போதும். தோலின் ஈரத் தன்மை போகாது இருக்க அது உதவும். செல்லின் வளர்சிதை மாற்றத்தில், ஒவ்வொரு செல்லும் ஆரோக்கியத்துடன் உத்வேகத்துடன் திகழ போதுமான நீர்த்துவம் முதலில் அவசியம். ஆதலால் இளமையாய் இருக்க போதுமான தண்ணீர் குடியுங்கள்;

இளமையாய் இருக்க வேண்டும் என்றால்  நம் மனதின் ஒவ்வொரு சிந்தனை மட்டுமல்ல. நம் உடலின் ஒவ்வொரு செல்லும் ஆற்றலும், குதூகலமும் நிறைந்து இருக்க வேண்டும். அதிக கார்போகைட்ரேட் உணவானது எப்போதும், செல்லை சோர்வடையச் செய்யும். அதனால் தான் நேரடி இனிப்பு வேண்டாம் என்கிறோம். அதே சமயத்தில் போதிய அளவில் புத்திசாலி கார்போஹைட்ரேட்(smart carbohydrates) என்று நவீன உணவியலாளரால் அழைக்கப்படும் லோகிளைசிமிக் நிறைந்த கீரை நார்கள் மூலம் கிடைக்கும் இனிப்புச்சத்து அவசியம். ட்ரான்ஸ் ஃபாட் நிறைந்த எண்ணெய் பலகாரங்கள் அடிக்கடி சாப்பிடக் கூடாது. பாலும் தேவையில்லாதது.

அடுத்து தினசரி உணவு. பட்டை தீட்டாத பிரவுன் அரிசி(தவிட்டுடன் கூடியது) அதன் லோ கிளைசிமிக் தன்மையால் சர்க்கரையை இரத்த்தில் தடாலடியாக சேர்க்காது. எந்த ஒரு பொருள் இரத்த்திதில் சர்க்கரையை சீக்கிரமாக சேர்க்கிறதோ அது வயதை சீக்கிரமாக கொண்டு வரும். சாயந்திரம்  ‘மைசூர்பகோ அல்லது சந்திரகலாவோ இல்லாமல் காபி எப்படி சாப்பிடுவது?’, என்று சங்கடப்பட்டீர்கள் என்றால் வாழ்த்துக்கள்.. “பாவம்..வயசு காலத்தில.. நீங்க உட்காருங்க மேடம்! என பேருந்தில் எழுந்து இடம் கொடுத்து, உங்களுக்கு, சினியர் சிட்டிசன் உரிமைகள் நீங்கள் கேட்காமலே கிடைக்கும். தேவையா?

காலையில் நவதானியக் கஞ்சி, (ஓட்ஸ் இல்லாமல் எப்படி..எல்லாரும் சொல்ராளே!, என்றால் ஓட்ஸ்-உம் சேர்த்துக் கொள்ளலாம். தப்பில்லை), வரகரிசி பொங்கல், ராகி இட்லி என சிறுதானியம் நிறைந்த உணவு சாப்பிடுங்கள். மதியம் பிரவுன் ரைசில் சாம்பாரோ ரசமோ ஊற்றி சாப்பிடுங்கள். தயிர் வேண்டாம். மோர் கண்டிப்பாய் வேண்டும். இரவில் ஓசி டின்னர் என்றாலும், மனசுக்கு பிடித்தவ்ருடன் பெரிய ஓட்டலில் ஓரமாய் இருந்து சாப்பிடாலும், ஒரு கட்டு கட்டாமல் அளவாய் எண்ணெயின்றி சாப்பிடுங்கள். ஓவ்வொரு வேளை உணவிலும் சிறிய வெங்காயம், இஞ்சி, பூண்டு, வெந்தயம் இருக்க வேண்டியது கட்டாயம். இந்த சமாச்சாரமெல்லாம் வாசனை தருவது மட்டுமல்ல..வயசும் தரும். Anti oxidants இன்று மிக பிரபலமாகி வரும் மருத்துவ சொல். பருப்பில்லாமல் சாம்பாரா? என்கிற மாதிரி Anti oxidantsஇல்லாமல் பிரிஸ்கிரிப்ஷனா? என்று மருத்துவர்கள் இப்போது பக்கம் பக்கமாய் எழுதுவது இந்த Anti oxidants-ஐத் தான். ஆனால் நம்ம பெருங்காயத்தில் இருந்து, காய்ந்த திராட்சை, மஞ்சள், கிரீன் டீ, தக்காளித்தோல் என பல உணவில் இது நிறைந்திருப்பது பலருக்கும் தெரியாது. இனி தெரிந்து கொண்டு உணவில் அதனை மறக்க வேண்டாம். ஏனென்ரால் அந்த  Anti oxidants வயோதிக மாற்றத்தை தடுக்கும்.

வயதாவதைத் தடுக்கும் உணவில் முதலிடம் பழங்களுக்குத் தான்.அன்றைய உணமையான சாதுக்களில் இருந்து, இன்றைய பிரபல -போலி சாமியார்கள் வரை கொஞ்சம் இளமையாய் அவர்கள் தெரிவதற்கு அவர்களின் பழ உணவு ஒரு முக்கிய காரணம்.ஒவ்வைக்கு அதியமான் தந்த நெல்லிக்கனியை தமிழும் வரலாறும் எப்போதும் மறக்காது. தற்போது அறிவியலும் அதை மறக்காது. ஆம்.. நெல்லிக்கனி மீதான பல ஆய்வுகள் அதன் வயதை குறைக்கும் தன்மையை அறுதியிட்டு நிரூபித்து விட்டன. அதிலுள்ள பாலிஃபீனால்கள், விட்டமின் சி, இன்னும் சில நுண்ணிய துவர்ப்பிகள், வயோதிக மாற்றத்தை நெல்லி தடுப்பதை ஊர்ஜிதப்படுத்தியுள்ளன.

அதே போல், கொட்டையுள்ள திராட்சை(பன்னீர்), மாதுளை, சிகப்பு கொய்யா, அத்தி, அவகோடா, சிகப்பு ஆப்பிள் இவையெல்லாம் இளமைக்கு வித்திடும் உணவுகள். வயசாவதைக் காட்டிக் கொடுக்கும் முகச் சுருக்கம், கண்ணுக்கு கீழான கருவளையம், தோல் சுருக்கமும், வறட்சியும் நீங்க/ வராது தடுக்க..தினம் ஒரு வேளை பழம் மட்டுமே சாப்பிடுங்கள். பொலிவு பொங்கும். பிடித்தவர் காட்டும் அலட்சியம் மாறிப்போகும்.  “அட! வயசானாலும், நீ அழகு தான் போ! எனும் கொஞ்சல் துவங்கும்.

சாதிக்காய்



ஒரு சொட்டு கூட ஒழுகாமல், உச்சிப்பாறையில் 200கிலோ தேனை, தன்னுள் கொண்டுள்ள தேனைடையைப் பார்க்கும் போதும், சைபீரிய நாரை, 10,000 கிமீட்டர் பறந்துவந்து தன் வேடந்தாங்கல் வீட்டைத் தேடிவந்து முட்டையிடும் போதும், ஒரிசா கடற்கரையில் விட்டுச் சென்ற ஆமையின் முட்டையிலிருந்து வந்த குஞ்சுகள், மியான்மார் அந்தமான் வழியே கடலோடு சென்று தாய்லாந்தில் தன் குடும்பத்தோடு சேரும் செய்தியையும் படிக்கும் போதும் பார்க்கும் போதும், இயற்கையின் அறிவும் ஆற்றலும் திகைக்க வைக்கிறது. தேனீயும், நாரையும், ஆமையும் எந்த பல்கலைக்கழகமும் சென்று இதனை கற்று வரவில்லை. அதே போல்தாம் இயற்கை தரும் மணங்களும். மல்லிப்பூவோ செண்பகப்பூவோ, மஞ்சளோ, கிராம்போ எப்படி இந்த நறுமணத்தை சேற்றிலிருந்தும் செம்மண்ணிலிருந்தும் தயாரித்துத் தருகிறது என்பதை எண்ணும் போதும் வியக்க வைக்கிறது.

அப்படி ஒரு ஆச்சரியமூட்டும் மணத்தைத் தன்னுள் கொண்டு, உலகையே நேசிக்க வைத்த ஒரு தாவரப்பொருள்தாம் சாதிக்காய். வரலாற்றைப் புரட்டினால், அரபு சாதிக்காயின் ஏகோபத்திய வணிக வரவேற்பால், வணிகரும், மாலுமிகளும் சில பல நூறு ஆண்டுகளுக்கு, அதை எங்கிருந்து எடுத்து வருகிறோம் என்பதையே பெரும் ரகசியமாக வைத்திருந்தனர் என்பது தெரியும். இந்தோனேஷிய மலூக்கா தீவுகளில் இருந்து அவை முதலில் பெறப்பட்டாலும், இலங்கை, இந்திய மேற்குதொடர்ச்சி மலைகளிலும் பின்னர், ஐரோப்பா, மேற்கிந்தியத் தீவுகளிலும் சாதிக்காய் கோலோச்சியது. சாதிக்காயின் கனி ஊறுகாயாக பயன்படும். அதன் உள்லிருக்கும் விதை தான் சாதிக்காய். கனிக்கும் விதைக்கும் இடையே விதையைச் சூழ்ந்து இருக்கும் மெல்லிய தோல் போன்ற பகுதிதான் சாதிபத்திரி என்பது. இதில் சாதிக்காய் எனும் விதைக்கும், சாதிபத்திரி இதழுக்கும்தான் மணமும், மருத்துவ குணமும், மார்க்கெட் மவுசும் கூட கூடுதலாய் உண்டு

சாதாரணமாய் சாதிக்காய் அதிகம் பயன்படுவது, ஆண்களுக்கு காமம்பெருக்கிச் செய்கைக்காகவும், குழந்தைகளுக்கு வரும் வயிற்றுப்போக்கை நீக்கவும்தான். சித்த ஆயுர்வேத மருந்துகளில், குழந்தைப்பேறில்லாமல் வரும் தம்பதிக்குக் கொடுக்கும் மருந்துகளில் 100க்கு 90 சதவீதம் சாதிக்காயும் சாதிபத்திரியும் அங்கம் வகிக்கும். காம்ம் தூண்டும் மணத்தைக் கொண்டது இது என்று மட்டுமே நெடுங்காலம் இதனை நம்பிவந்த ஐரோப்பியருக்கு, இது உள்ளே வெளீயே இரண்டுபக்கமும் வேலை செய்யும் அற்புதமான மருந்து என்பது சமீபத்தில்தான் தெரிய வந்தது.BMC -Complementary and Alternative Medicine என்ற மருத்துவ ஆய்வுப்பத்திரிக்கை விலங்குகளிலும் இதில் ஆய்வு செய்து, யுனானி, ஆயுர்வேதம், சித்தா சொன்ன இதன் ஆண்மைப்பெருக்கி விஷயம் வேடிக்கையானது அல்ல. உடலுறவில் வேட்கையை (increasing the libido by aphrodiasic activity)அதிகரிக்கச் செய்யும் தன்மை இதற்கு உண்டென உறுதிப்படுத்தினர். சத்தியமாய் அவர்கள் வாரமொரு லாட்ஜில், ஒதுக்குப்புறமான அறையெடுத்து ஸ்பெஷல் லேகியம் விற்பனை செய்யும் வியாபாரிகளல்ல.. நம்பலாம்!

வெறும் உடலுறவில் நாட்டம் மட்டுமல்ல, விந்தணுக்களின் எண்ணிக்கை பெருக இந்த சாதிக்காய் உதவிடும். சாதிக்காய் சேர்ந்த மூலிகை மருந்துகள் விந்தணுக்களின் எண்ணிக்கைக் குறைவினால்(Oligospermia) வரும் குழந்தைப்பேறின்மைக்கு சரியான மருந்து.

ஒருவித இனிப்புசுவையுடன் கூடிய தனித்துவ மனம் சாதிக்காயில் இருப்பதற்கு அதன் Myristicin சத்தே காரணம். இந்த சத்து சாதிக்காய் தவிர கேரட்டிலும் உண்டு. இருந்தாலும் சாதிக்காயில்தான் அதிகம்.சாதிக்காய் இரத்தக் கொழுப்பை குறைப்பதிலும் வெள்ளணுக்களில் ஏற்படும் இரத்தப் புற்று நோயைத் தடுப்பதிலும் கூட பணிபுரிகிறது என்கிறது, தாய்லாந்தில் நடைபெற்ற ஆய்வு முடிவுகள்.

முதுமையின் அடையாளம் தோல் சுருக்கம். தோலின் நீட்சித்தன்மைக்குறிய சத்து கொஞ்சம் கொஞ்சமாக குறையத்துவங்குவதால் இந்த தோல் சுருக்கம் நிகழ்கிறது. சாதிக்காயின் Myristicin சத்து அந்த சுருக்கத்தை ஏற்படுத்த விடாமல் தடுப்பதை அறிந்த அழகுக் கம்பெனியார்கள் சாதிக்கயை anti-ageing களிம்புகளில் அதிகம் சேர்க்கின்றனராம்.

சாதிக்காய் ஒரு அடிமைப்படுத்தும் போதைப்பொருளோ என்ற சந்தேகம் கூட இடையில் அறிவியலாளருக்கு வந்ததுண்டு. ஆனால் பல ஆய்வுகள் செய்து அது நரம்பு மண்டலத்தில் வேலை செய்தாலும்  “அது போதையூட்டும் வஸ்து அல்ல என்பதை அவர்கள் புரிந்து கொண்டனர். நரம்பு மண்டலத்தில் அது நற்பணி ஆற்றுவதால், மன அழுத்த நோய்க்கு, மனதை உற்சாகப்படுத்தவும்,  நினைவாற்றலைப் பெருக்கவும், மனதை பரபரப்பிலிருந்து விடுவிக்கவும் சாதிக்காயைப் பயன்படுத்தலாம் என்கிறது இன்றைய அறிவியல்.

இன்றைய காலம் துரித வாழ்வியலில் நாம் தொலைந்துபோன காலம். கை நிறைய சம்பாதித்து, பை நிறைய கடன் கட்டும் மகிழ்வில்லா வாழ்வில்தாம் நம்மில் பலர். எங்கும் எவரும் யாரையும் அரவணைக்கவோ, பாராட்டிடவோ, ஆற்றுப்படுத்தவோ, அறிவுருத்தவோ, நேரமில்லாமல் ஓடிக் கொண்டிருக்கும் இந்த வாழ்வில் மன அழுத்த நோய் பெருவாரியாகப் பெருகி வருகிறது. அதன் விளைவாய், குடும்பங்கள் பிரிதல், விவாகரத்து பெருகி வருகிறது. சாதிக்காய் தூள் ஒரு சிட்டிகை பசும்பாலில் இரவில் படுக்கும் போது சாப்பிடுவது இந்த மனஅழுத்தம் போக்கி, நிறைந்த நரம்புவன்மையும், சீரான தூக்கமும் தந்துவிடும்.

அடிக்கடி நிகழும் வயிற்றுப்போக்கிற்கு, சில நேரங்களில் சில வைரஸ் காரணமாக இருக்கும். பாக்டிரீயாக்களால் வரும் வயிற்றுப்போக்கிற்கு எதிர்நுண்ணுயிரி மருந்து கொடுத்து உடனே வயிற்றுப்போக்கை நிறுத்திட இயலும். வைரஸுக்கு அந்த பாச்சா பலிக்காது. ஆனால் சாதிக்காய்த்தூள் வைரஸினால் வரும் வயிற்றுப்போக்கையும் நிரூத்தி நம்மைக் காக்கும்.

ஒரு மணமூட்டிக்கு இப்படி ஒராயிரம் மருத்துவ குணம் உண்டு. இதனை முழுமையாய்ப் புரிவது கடினம். புரிந்ததை பார்த்து வியந்ததோடு மட்டுமல்லாமல், அதனை எவ்வித்திலும் சிதைத்திடாமல் காத்திடுவதும் கூட நம் கடமை.

Wednesday 14 November 2012

வெட்கித் தலைகுனிய வேண்டிய நிலை



Aadhavan Dheetchanya is one of the outstanding social thinkers reinforcing every initiative to empower the SC/ST fraternity through literary, media and community endeavors. தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர், கலைஞர்கள் சங்கத்தின் மாநில துணைப் பொதுச்செயலாளரும் புதுவிசை கலாசாரக் காலாண்டிதழின் சிறப்பாசிரியருமான ஆதவன் தீட்சண்யா அவர்களின் ஆக்கங்கள் மலையாளம்,ஆங்கிலம் ஆகிய மொழிகளில் மொழிபெயர்க்கப் பட்டுள்ளன. ஒடுக்குமுறை எந்த வடிவில் இருந்தாலும் அதை உக்கிரமான மொழியில் எதிர்கொள்ளும் ஆதவன், எழுதுவதோடு தன்னுடைய வேலை முடிந்தது என்றில்லாமல், போராட்டங்கள், பொதுக்கூட்டங்கள், கருத்தரங்குகள் என மாநிலம் முழுவதும் பிரயாணம் செய்தபடி இருக்கிறார்.

In his blogs, books, speeches and videos, there are practical views on social inequalities. ஆதவன் தீட்சண்யா அவர்கள் இயற்றி உள்ள "இப்பல்லாம் எவன்டா சாதி பாக்குரான்னு அப்பாவி போலவே கேட்கிறான்' எனும் இந்த அருமையான பாடல் தமிழகத்தில் சமூக நீதிக்கும், பகுத்தறிவுக்கும் எள்ளளவும் இடமில்லை என்பதைத் தெளிவாகக் காட்டுகிறது!


பாட்டின் நடுவில் வரும் "அம்பேத்கர் பெயரை பிள்ளைக்கு சூட்டி ஆனந்தம் கொள்பவர் எத்தனை பேர்?" என்ற கேள்விக்கு என்ன பதில் கூறலாம்? மிக முக்கியமான இந்த படலை அழகாகப் பாடியுள்ள வைகறை கோவிந்தன் குழுவினர் மிகவும் பாராட்டுதலுக்கு உரியவர்கள்! தமிழ் சமூகம் வெட்கித் தலைகுனிய வேண்டிய நிலையை இந்த பாடலின் வரிகள் படம் பிடித்துக் காட்டுகின்றன!

An inspiration to numerous youth belonging to the Scheduled Communities, Aadhavan Dheetchanya continues his dynamism in creativity for social change! Let us wish him all success!

Thanks Centre for Media and Public affairs (CMPA)Venkat Raj
.

கலப்புமண எதிர்ப்பு அரசியல் விவாதத்திற்கான சில அரசியல் குறிப்புகள்

கலப்புமண எதிர்ப்பு அரசியல்
விவாதத்திற்கான சில அரசியல் குறிப்புகள்

Author :ஸ்டாலின் ராஜாங்கம்

2003ஆம் ஆண்டு ஜூலை மாதம் கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகிலுள்ள புதுக்கூரைப்பேட்டை என்னும் கிராமத்தில் சாதிமீறிக் காதலித்த காரணத்திற்காகத் தலித்தான முருகேசன் வன்னியர் சாதியைச் சேர்ந்த கண்ணகி ஆகிய இருவரையும் ஊரின் ஆதிக்க சாதியினர் கொடூரமாகக் கொலைசெய்தனர். வன்னியர்களின் இக்கொடூரச் செயலுக்குப் பாட்டாளி மக்கள் கட்சியின் மறைமுகமான ஆதரவு இருந்ததாகச் சொல்லப்பட்டது. இக்கொடூரக் கொலையில் ஈடுபட்ட ஊர்க்காரர்களைச் சட்டத்தின் பிடியிலிருந்து காப்பாற்றுவதற்கு அக்கட்சி சட்டரீதியாக உதவியதாகவும் கூறப்பட்டது. புகாரை அந்தக் கட்சி இதுவரை மறுக்கவில்லை. ஆனால் கடந்த 2012 ஏப்ரல் மாதம் மாமல்லபுரத்தில் நடந்த வன்னியர் இளைஞர் மாநாட்டில் ராமதாஸ் முன்னிலையில் வன்னியர் பெண்களைப் பிற சாதி ஆண்கள் காதலிக்கவோ மணக்கவோ அனுமதிக்கக் கூடாது என அக்கட்சியின் முன்னணித் தலைவர்களில் ஒருவரான காடு வெட்டி குரு பேசிய சாதிமறுப்புத் திருமணம் குறித்த அக்கட்சியின் நிலைபாடு தெளிவாகிவிட்டது. புதுக்கூரைப்பேட்டைக் கிராமத்தில் நடந்த இரட்டைக்கொலை விவகாரத்தில் அக்கட்சியின் மௌனத்திற்கான காரணத்தையும் குரு இதன் மூலம் தெளிவுபடுத்திவிட்டார்.
 
அரசியல் மேடையொன்றில் சாதி மறுப்புத் திருமணத்திற்கு எதிராக இது வெளிப்படையாக விடுக்கப்பட்ட அறைகூவல். வடமாவட்டங்களில் அரசியல் ஆதரவோடும் சாதி வெறியோடும் ஆதிக்க சாதியினரால் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வரும் இப்படுகொலைகளைக் குறித்து இமையம் எழுதியுள்ள ‘பெத்தவன்’ என்ற தேர்ந்த சிறுகதையும் (உயிர்மை, செப்டம்பர் 2012) அண்மையில் வெளியாகியுள்ளது.
 
இதேபோலக் கடந்த சில வருடங்களாகக் கொங்கு மண்டலத்தின் ஆதிக்க சாதியான கொங்குவேளாளர் அமைப்புகளில் சில வெளிப்படையாகச் சாதி மறுப்புத் திரு மணத்திற்கு எதிராகப் பேசத் தொடங்கியுள்ளன. சாதி கடந்த காதல், திருமணங்களைக் கொலை உள்ளிட்ட கொடூரமான வழிமுறைகளின் மூலம் தடைசெய்துவரும் அச்சாதியினர் அரசியல்ரீதியில் தமக்குள்ள செல்வாக்கைப் பயன்படுத்திக்கொண்டு சாதிமறுப்புத் திருமணங்களுக்கெதிரான தம் சட்ட விரோதச் செயல்பாடுகளுக்கு அரசின் அங்கீகாரத்தை வெளிப்படையாகக் கோரத் தொடங்கியுள்ளனர். ஆதிக்க சாதியினரிடமிருந்து தலித்துகளைப் பாதுகாக்கும் தலித் வன் கொடுமைச் சட்டத்தை ரத்துசெய்யக் கோரி கடந்த பல வருடங்களாக அரசை வலியுறுத்திவரும் சில கொங்கு வேளாளர் அமைப்புகள் கடந்த அக்டோபர் 14ஆம் தேதி கோவையில் நடத்திய கூட்டமொன்றில் கலப்புத் திருமணச் சட்டத்தைத் தடைசெய்ய வேண்டுமென்னும் தீர்மானத்தை நிறைவேற்றியுள்ளன. கூட்டத்திற்கு வந்திருந்தவர்கள் கலப்புத் திருமணத்திற்கு எதிராக உறுதிமொழி எடுத்துக்கொண்டதாகச் செய்திகள் வந்தன. கலப்பு மணச் சட்டத்தை ரத்துசெய்யும்படி அரசைக் கோரியுள்ள இந்த அமைப்புகள் தமக்கென இணையதளம் ஒன்றையும் தொடங்கப்போவதாக அறிவித்திருக்கின்றன.
 
கொங்குப் பகுதியின் முதன்மை ஆதிக்க சாதியினரான கொங்கு வேளாளர்களை அரசியல்ரீதியில் ஒன்றிணைக்கவும் சாதி அடையாளத்தை ஓட்டுவங்கி அரசியலுக்குப் பயன்படுத்தவும் மேற்கொள்ளப்பட்டு வரும் முயற்சிகளின் தொடர்ச்சியே இது போன்ற நடவடிக்கைகள். சமூக மாற்றத்தின் காரணமாக இயல்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கும் காதல், கலப்பு மணங்களைக் கண்டு ஆதிக்கச் சாதிகள் பதற்றமடைந்திருப்பதன் அடையாளமாகவும் இதை எடுத்துக்கொள்ளலாம். எண்ணிக் கையில் பெரும்பான்மைச் சாதிகள் மட்டுமல்லாது எண்ணிக்கையில் சிறுபான்மை இந்து சாதி அமைப்புகளும் இதே கோரிக்கையை ஆங்காங்கு எழுப்பத் தொடங்கியுள்ளன. சாதி ஒதுக்கீடுகளும் பிரதிநிதித்துவமும் ‘சமூகநீதி’யாகிவிட்ட நம் சூழலில் தத்தம் நலன்களைப் பாதுகாத்துக்கொள்ள விரும்பும் ஒவ்வொரு சாதியும் தங்களின் எண்ணிக்கையைச் சிதறிவிடாமல் காக்க விரும்புகின்றன. கடந்த சில பத்தாண்டுகளில் பெரும் எழுச்சிபெற்றுவரும் ஒடுக்கப்பட்டோரின் அரசியல், ஆதிக்க சாதியினருக்குப் பெரும்பதற்றத்தை உருவாக்கியுள்ளது. காதல் திருமணங்கள் மூலம் சாதியமைப்பு சிதைவதைக் கண்டு சாதியமைப்புகள் வெளிப்படையாக இவ்வாறு பேசத் தொடங்கியுள்ளன. சாதி அமைப்பைப் பாதுகாப்பதற்கும் அதை மேலும் இறுக்கமானதாக மாற்றுவதற்குமான முயற்சிகளை ஆதிக்க சாதி அமைப்புகள் மேற்கொண்டு வருகின்றன. இவை போன்ற நடவடிக்கைகள் கிராமப்புறங்களில் வாழும் தலித்துகளுக்குப் பெரும் அச்சுறுத்தல் என்பதில் சந்தேகமில்லை. இது போன்றதொரு தீர்மானத்தை நிறைவேற்றியுள்ளதன் மூலம் அந்த அமைப்பு இந்திய அரசியல் சாசனத்தின் நோக்கங்களுக்கு வெளிப்படையாகச் சவால்விட்டிருக்கிறது என்றே சொல்ல வேண்டும். பிற்போக்கான, காட்டுமிராண்டித்தனமான இத்தீர்மானத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்க வேண்டிய அறிவு ஜீவிகளும் ஜனநாயக சக்திகளும் அரசியல் கட்சிகளும் மௌனம் காப்பது கடும் கண்டனத்திற்குரியது.
 
அம்பேத்கர் 1916ஆம் ஆண்டு கொலம்பியாப் பல்கலைக்கழகத்தின் மானுடவியல் கருத்தரங்கில் இந்தியாவில் சாதியின் அமைப்பியக்கம் பற்றிச் சமர்ப்பித்த கட்டுரையில் சாதி முறையின் தோற்றுவாய்க்கும் அது நீடித்திருப்பதற்குமான காரணங்களில் முக்கியமானதாக அகமணமுறையைக் குறிப்பிட்டார். ஒத்த குழுவில் ஆண் பெண் விகிதத்தில் நிகழும் வித்தியாசம் அதையொட்டிப் பெண்கள்மீது திணிக்கப்படும் விதவைக் கோலம், உடன்கட்டை ஏறுதல், ஆண்களின் துறவு, வயது குறைந்த பெண்ணை மணம் முடித்தல் போன்ற போக்குகளை இதன் தொடர்ச்சியாக விவரித்தார். 1936இல் சாதிஒழிப்பு என்ற தலைப்பில் தயாரித்த உரையொன்றில் சாதி யொழிப்புக்கு உண்மையான வழி கலப்புமணம்தான் என்னும் தான் நம்புவதாகக் குறிப்பிட்டார். இதைத் தவிர வேறெதுவும் சாதியைப் பலவீனப்படுத்த முடியாது என்றும் இதைப் புரிந்துகொள்வதே நோயின் மூலத்தைக் கண்டறிவதாகும் என்றும் அறிவித்தார்.
 
சமூகத்தை எதிர்த்து நிற்கும் சீர்திருத்தவாதி அரசாங்கத்தை எதிர்க்கும் அரசியல்வாதியைவிடத் தீரம்மிக்கவன். இச்சூழல் சார்ந்து ஏற்படும் சவாலான நிலையையும் அவர் குறிப்பிட்டார். ஆனால் சமூகத்தின் பொதுப் புத்தியாகிவிட்ட சாதியச் சூழலைச் சமரசமில்லாமல் எதிர்கொள்ளும் சீர்திருத்தவாதியென்று யாரையும் நம்மால் குறிப்பிட முடியவில்லை. அரசியல்வாதிகளிலிருந்து நூலிழை இடைவெளியிலேயே அறிவுலகமும் உலகமும் செயற்பட்டுவருகிறது.
 
பிராமணரல்லாதோரின் சாதியமைப்பு பற்றிய அறிவுத்துறை விவாதங்கள் சாதியமைப்பைப் பாதுகாப்பதில் அவற்றுக்குள்ள பங்களிப்பைக் குறித்து முறையாக விவாதிப்பதைத் தவிர்க்கின்றன. இந்த விஷயத்தில் எல்லோருமே மௌனம் காக்க விரும்புகிறார்கள். கலப்பு மணத்திற்கு எதிரான தற்போதைய சாதி இந்துக்களின் குரல்கள் அரசியல் தளத்தில் பேசப்பட்டு வந்த சாதி ஒழிப்பு அல்லது சாதி மறுப்பு என்னும் கருத்தியலை தீவிரமாக மறுபரிசீலனை செய்யக் கோருகிறது.
 
சாதி மறுப்புத் திருமணம் என்பது கிட்டதட்ட ஒரு நூற்றாண்டுக் காலத்துக்கும் மேலாகத் தமிழக அளவில் இயக்கரீதியிலேயே முன்னெடுக்கப்பட்டு வந்த ஒன்று. பிராமண ஆதிக்கத்திற்கெதிராகத் தமிழகத்தில் உருவான பிராமணரல்லாத இயக்கத்தின் அடையாளமாகவே இது இருந்து வந்தது. இப்போது அந்த அடையாளத்தின் எச்சங்கள்கூட இல்லை. சாதி மறுப்பு கைவிடப் பட்டுச் சடங்கு மறுப்பு என்பதாகச் சுய மரியாதைத் திருமணங்களின் சீர்திருத்த எல்லை சுருங்கிவிட்டது. தாலி மறுப்பு, சடங்கு மறுப்பு போன்ற சாதியக் கட்டுமானத்தில் எந்த விரிசலையும் ஏற்படுத்தாத சுயமரியாதைத் திருமணங்களைக் கண்டு ஆதிக்கசாதியினர் ஒருபோதும் பதற்றமடைவதில்லை. அத்தகைய திருமணங்கள் சமூகக் கட்டமைப்பில் எந்தவிதமான மாற்றத்தையும் ஏற்படுத்தாதவரை அவற்றை வரவேற்பதிலும் அவர்களுக்குப் பிரச்சினையில்லை. சாதி மறுப்புத் திருமணங்களுக்கு இருந்து வந்த சமூகப் பாதுகாப்பு பலவீனமடைந்ததற்குப் பின்னால் உள்ள அரசியல்ரீதியான காரணங்கள் தீவிரமாகப் பரிசீலிக்கப்பட வேண்டியவை.
 
ஆனால் சாதாரண மனிதர்களிடையே சாதி கடந்த காதல், கலப்பு மணங்கள் இயல்பான செயல்பாடுகளாக நீடித்துக்கொண்டுதான் இருக்கின்றன. இத்திருமணங்கள் பற்றிய பிரகடனங்கள் ஏதும் அவர்களிடம் இருப்பதுமில்லை. சாதி கடந்த காதல், கலப்புமணத்திற்கு எதிரான ஆதிக்க சாதியினரின் வன் முறை சாதியத்தின் ஒரு பகுதியாக எப்போதுமே இருந்துவந்திருக்கிறது. சாதிக்கட்டுமானத்தை மீறும் சொந்தக் குழந்தைகளைக் கொலைசெய்தாவது சாதியின் கௌரவத்தைக் காப்பாற்றிக்கொள்வதற்கு ஆதிக்க சாதியினர் தயங்குவதே இல்லை. அதைப் பற்றிய பெருமிதமும் சாதிய மனத்தின் ஒரு கூறு என்றே சொல்லலாம். நாகரிகச் சமுதாயம் சாதிய வன்முறைகளுக்கும் கௌரவக் கொலைகளுக்கும் எதிராக இருப்பதுதான் சாதியத்திற்குப் பெரிய சிக்கல். முன்புபோல அவற்றை எளிமையாகச் செய்ய முடியவில்லை. ஆகவேதான் அதற்குச் சட்ட அங்கீகாரத்தைக் கோருகிறார்கள். இதற்கு முதல் காரணம் சமூக அடிநிலைச் சக்திகளான தலித்துகளுக்குக் கல்விரீதியாகவும் அரசியல்ரீதியாகவும் ஏற்பட்டுள்ள விழிப்புணர்வு. நவீன வாழ்வு சார்ந்த மாற்றங்கள் மற்றொரு முக்கியக் காரணம். இதன் விளைவாகக் காதலும் கலப்பு மணங்களும் திட்டமிடப்படாத, இயல்பான போக்காக வளர்ந்து வரு கின்றன. காதல், திருமணம், குடும்பம் சார்ந்த மதிப்பீடுகளும் கருத்தியல்களும் வேகமாக மாறிவருகின்றன.
 
சாதி கடந்த திருமணங்களுக்கு ஆதரவாக இருந்துவந்த, முன்பு சாதி ஒழிப்பை ஒரு வேலைத்திட்டமாகக் கொண்டிருந்த திராவிடக் கட்சிகள் இவ்விசயத்தில் மேற்கொண்டு வரும் மௌனம் பரீசிலிக்கத்தக்கது.
 
சாதி ஆதிக்கத்தைப் பாதுகாக்கும் நோக்கில் எழுந்துள்ள இக்குரல்களில் தீவிர தலித் எதிர்ப்பு வேர்கொண்டுள்ளதையும் கவனிக்க வேண்டும். அதனால்தான் திராவிட இயக்க அமைப்புகளோ தமிழ்த் தேசிய அமைப்புகளோ சாதியமைப்புகளின் கலப்புமண எதிர்ப்பைத் தீவிரமாக எதிர்கொள்ளவில்லை. பெரியார் திராவிடர் கழகம் தவிர வேறு யாரும் இதற்கு எதிராகப் போராட்டம் நடத்தியதாகத் தெரியவில்லை. மேற்படி கூட்டம் நடந்த மண்டபத்துக்கு வெளியே அதைக் கண்டித்து அமைதியான முறையில் ஆர்ப்பாட்டம் நடத்த முயன்ற பெரியார் திராவிடர் கழகத் தொண்டர்களைத் தமிழகக் காவல் துறை கைது செய்திருப்பது கண்டனத்துக்குரியது. இதுபோன்ற பிரச்சினைகளின்போது அவற்றைக் கண்டனம் செய்வதன் மூலம் நாம் திருப்தியடைந்துவிடுகிறோம். கண்டனம் தெரிவிப்பதும் ஆர்ப்பாட்டம் நடத்துவதும் சடங்காக மாறிவிட்ட சூழலில் குறிப்பிட்ட பிரச்சினையின் கருத்தியல் பின்னணியையும் அது ஏற்படுத்தி வரும் மாற்றங்களையும் கணக்கிலெடுத்துக்கொள்வது அவசியம். இதற்கான விவாதங்களை அறிவுஜீவிகள் மட்டுமே உருவாக்க முடியும். மேற்கண்ட சாதியினர் சாதியமைப்பால் பயன்படுத்தப்படுகிறவர்கள் என்ற கருத்தைப் பரிசீலிக்க வேண்டியுள்ளது. இன்றைய சாதியமைப்பின் நலன்களைப் பாதுகாப்பதில் இவர் களுக்குப் பெரும்பங்கு இருக்கிறது. இந்நிலையில் பிராமணரல்லாத சாதிகளின் குரலாகச் செயல்பட்ட திராவிட இயக்கங்களின் கருத்தியல் பின்னணிகளைப் பேசுவதில் ஈடுபட்டு வந்த எஸ். வி. ராஜதுரை, அ. மார்க்ஸ் உள்ளிட்ட திராவிட சார்பு மற்றும் இடதுசாரி அறிவுஜீவிகள் தற்போதைய சூழலில் இயக்கக் கருத்தியல் குறுக்கீடுகளை நிகழ்த்த வேண்டியது அவசியம்.
 
ஒரு காலக்கட்டத்தில் திராவிட இயக்கத்தால் சாதி மறுப்புத் திருமணங்கள் கொள்கையளவில் வற்புறுத்தப்பட்டிருந்தாலும் அந்த இயக்கத்தின் மையச் சக்திகளாக விளங்கிய ஆதிக்க சாதிகள் அதை ஏற்கவில்லை. சாதியை ஒழிப்பதற்கான வழிமுறைகளில் முக்கியமானவையாகக் கருதப்பட்ட சமபந்தி போஜனம், கலப்புமணம் ஆகிய இரண்டு கொள்கைகளுக்கும் ஆதரவில்லாமல் இருப்பது ஏன் என்ற கேள்வியைத் தன்னுடைய சாதி ஒழிப்பு (1936) என்னும் நூலில் எழுப்பும் அம்பேத்கர் இவ்விரண்டு கொள்கைகளும் இந்துக்களின் புனிதமான நம்பிக்கைகளுக்கு எதிரானவையாக இருப்பதானாலேயே அவை நடைமுறைப்படுத்தப்படவில்லை என்கிறார். இங்கிருக்கும் ஒவ்வொரு சாதியினரும் தங்களை இந்துக்களாகக் கருதிக்கொள்கிறார்கள். இந்து மதத்தின் மொத்தப் பிரதிநிதியாகப் பிராமணர்கள் காட்டப்பட்டு எதிர்க்கப்பட்டாலும் பிற இந்து சாதிகளிடம் இந்து மனோபாவமே செயற்படுகிறது. ஓர் இந்துவுக்கு சாதியே முதல் அடையாளம். கலப்புமணம் பற்றிப் பேசும் அம்பேத்கர் சாதியைப் போற்றும் மதத்தைக் கற்பிக்கும் சாஸ்திரங்களை எதிர்க்க வேண்டும் என்கிறார்.
 
சாஸ்திரங்களைப் புறக்கணித்தால் மட்டும் போதாது, அவற்றின் அதிகாரத்தையே மறுக்க வேண்டும் என்றார். இங்குச் சாஸ்திரத்தின் குறியீடான பிராமணன் மட்டுமே புறக்கணிக்கப்பட்டான். மாறாக சாஸ்திரம் கற்பிக்கும் சாதி அதிகாரம் புறக்கணிக்கப்படவில்லை. ஒவ்வொரு சாதி இந்துவின் உளவியலிலும் சாதி என்னும் அதிகாரம் இவ்வாறுதான் குடிகொண்டிருக்கிறது. அதுதான் இன்றைய எதிர்ப்பின் கருத்தியல் அடிப்படை. இவ்விடத்தில் மற்றொன்றையும் கவனிக்க வேண்டும். தீண்டாமை வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தை நீக்கக் கோரும் கோரிக்கையைத் தொடர்ந்து எழுப்பி வந்த சாதி அமைப்புகளே இப்போது கலப்புமண எதிர்ப்பிலும் ஒருசேரக் குரலெழுப்புகின்றன. கலப்புமண எதிர்ப்பைக் கூர்மையாக்கும் கொங்கு வேளாளர் அமைப்பும் தலித் வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தை ரத்துசெய்யக் கோரிவரும் தேவரினப் பாதுகாப்புப் பேரவை போன்ற பிற சாதி அமைப்புகளும் அணிசேர்க்கத் தொடங்கியுள்ளதை இங்குக் கவனிக்க வேண்டும். மறுபுறம் தம் சாதி பற்றி இந்த அமைப்புகள் உருவாக்கிப் பரப்பிவரும் பிம்பங்கள் கூர்ந்து கவனக்கத்தக்கவை. தம்மை ஆண்ட பரம்பரையாகக் காட்டிக்கொள்ளும் முனைப்பு ஒவ்வொரு சாதிக்கும் இருக்கிறது. அதற்கான வரலாற்றுச் சான்றுகளை அவை தேடுகின்றன. ஆனால் இட ஒதுக்கீடு முதலான சலுகைகளைக் கோருவதற்காகத் தங்களை ஒடுக்கப்பட்டவர்களாகவும், வஞ்சிக்கப்பட்டவர்களாகவும் காட்டிக்கொள்ளவும் முற்படுகின்றன. தீரன் சின்னமலையைக் கொங்கு வேளாளர் சாதியைச் சேர்ந்தவர் என நிறுவுவதில் வெற்றி பெற்றுவிட்ட கொங்கு வேளாளர் அமைப்புகள் தம்மை மிகவும் பிற்பட்டோர் பட்டியலில் சேர்க்க வேண்டுமென நீண்ட காலமாகக் கோரி வருகின்றன. ஆதாயங்களுக்காகத் தம்மைத் தலித்துகளைவிட மோசமாக ஒடுக்கப்பட்டவர்களாகக் காட்டிக்கொள்வதற்கும் தயங்குவதில்லை. பலவேளைகளில் தாழ்த்தப்பட்டோருக்கு அளிக்கப்பட்டுள்ள சலுகைகளுக்கு இணையாகத் தங்களுக்கும் சலுகைகள் அளிக்கப்பட வேண்டுமெனக் கோருகின்றனர்.
 
பெரியாரியத்தைப் பின்பற்றுவதாகச் சொல்லிக்கொள்ளும் திமுக உள்ளிட்ட திராவிடக் கட்சிகள் சாதி கடந்த திருமணத்திற்கெதிரான இத்தகைய அமைப்புகளின் நடவடிக்கைகளைப் பற்றி எந்தக் கருத்தும் தெரிவிக்காமல் மௌனம் காப்பதற்குக் காரணமுண்டு. வாக்கு வங்கி அரசியல் முக்கியக் காரணம். சாதி ஆதிக்கத்தையும் தங்களுடைய நலனையும் ஒருசேரத் தக்கவைத்துக்கொண்ட இக்கட்சிகள் இச்சாதியினரையோ சாதி அமைப்புகளையோ பகைத்துக்கொண்டு அரசியல் நடத்த முடியாது. இந்நிலையை உருவாக்கியது இக்கட்சிகளே. அரசியல் பெரும்பான்மைக்காக எண்ணிக்கை சிதையாமல் காப்பது, சிறு சிறு குழுக்களை ஒன்றாக்குவது என்றெல்லாம் சாதிப் பெரும்பான்மை வாதம் கூர்மை பெற்று வருகிறது. தமிழகத்தில் மதச் சார்புடைய கட்சி செல்வாக்குப் பெறமுடியாமல் போகலாம். ஆனால் சாதியைப் பகைத்துக்கொள்ளும் எந்தக் கட்சியும் இங்கு ஆட்சிக்கு வர முடியாது என்பதே கசப்பான உண்மை.
 
 Thanks  நவம்பர் 2012 காலச்சுவடு இதழில் வெளியான கட்டுரை

Tuesday 30 October 2012

SOCIAL SCIENTIST SRI SRI SRI GADGE BABA


Saint Gadge Baba Maharaj
ST.GADGE BABA
Saint Gadge Baba Maharaj was the great hero of 19th century and known for his social services. He was a holy saint who worked for helpless and poor.
On 23rd of February 1876, Debuji (initial name of Gadge Baba) was born in a washerman's family of small village Shengaon of district Amravati, Maharashtra, India. He lived a life of poverty. Debuji was the only child of Zingraji and Sakhubai. After the death of Zingraji he and his mother went to live with his maternal uncle. Within years he became an excellent farmer, herdsman, singer and swimmer.
He was married to Kuntabai and had four children. A lover of animals, he opposed animal sacrifice since childhood. Even when his friends, relatives and the people of his caste forced him to sacrifice animals, he preferred to face their anger rather than kill the animals.
In starting days of his life he worked in his own field, when he lost his own land he worked as a wage labor. One day he was at a field and keeping birds away from grain. A sadhu who passes near by him, asked Gadge baba if he is the owner of the grains? This question turned Baba for realization.
After this comment of sadhu Gadge Baba knows the value of community-sharing and keeps it for his whole life time. Community-service become the base of his teachings of Baba. His teachings were -
   Give food to the hungry
   Give shelter to the needy
   Protect the environment
A public teacher, the Gadge Baba traveled from one place to another place wearing his food pan upturned on his head and carrying his trademark broom. When he entered a village, instantly start cleaning the gutters and roads of village. He also told the citizens of village that their congratulations would have to wait until his work was done. For this job, the peoples of village gave money to Baba. From this money Gadge Baba build educational institutions, dharmasalas, hospitals and animal shelters. He conducted his discourses in form of "Kirtans"(a form of discourse which includes devotional songs by Saints). In which he would emphasis on topics like service to humanity, compassion. During his kirtans he would educate people against blind faiths and rituals. He would use Dohas (couplets of a song) by Saint Kabir in his discourses.
Currently almost all organizations build by him are functioning well. On December 20th, 1956 the Great Saint left this mortal world. Even so many years have passed since his departure there is lot of following for him. Government of Maharashtra state also runs a village cleanliness programme named after him. University of Amravati was renamed as Sant Gadge Baba university.
Sant Gadge Baba Maharaj
Date of Birth:
23rd of February 1876
Date of Death:
20th December 1956
Place:
Shengaon, Amravati district, Maharastra, India

Sant Gadge Baba stamp Issued on 20th Dec 1998 to mark 42nd Death Anniversary
Debuji Zhingraji Janorkar (February 23, 1876 - December 20, 1956), popularly known asSant Gadge Maharaj or Gadge Baba (Hindi: गाडगे बाबा) was a saintly social reformer, a wandering mendicant who held weekly festivals with the help of his disciples across Maharashtra. His reforms and visions for villages in India is still a source of inspiration for various political parties and non-government organizations.
Maharaj was born in Shedgaon village in Anjangaon Surji Taluka in Amravati District of Maharashtra to a Dhobi family. A public teacher, he traveled from one place to another wearing his food pan upturned on his head and carrying his trademark broom. When he entered a village, he would instantly start cleaning the gutters and roads of the village. He also told the citizens of the village that their congratulations would have to wait until his work was done. In return the villagers gave him money. From this money Maharaj built educational institutions, dharmasalas, hospitals and animal shelters. He conducted his discourses in the form of "Kirtans" (a form of discourse which includes devotional songs by Saints) in which he would emphasize values like service to humanity and compassion. During his kirtans he would educate people against blind faiths and rituals. He would use Dohas (couplets of a song) by Saint Kabir in his discourses.
ST.GADGE BABA
He exhorted people to stop animal sacrifice as part of religious rituals and campaigned against vices such as alcohol abuse. He tried to embody the values that he preached: hard work, simple living and selfless service to the poor. He abandoned his family (wife and 3 children) to pursue this path.[1]
Death and Legacy


ST.GADGE BABA UNIVERSITY AT AMARAVATHI ,MAHARASTRA
Maharaj died on December 20, 1956 on his way to Amravati, on the banks of river Pedhi near Valgaon.
The Government of India has started a 'Sant Gadgebaba Swachata Abhiyan' in 2000-01 in his honour. This programme awards prizes to villagers, who maintain clean villages.
He was one of the great social reformers of Maharashtra. He was a saint who understood problems of his people and worked untiringly for upliftment of the poor and needy with focus on hygiene.
Govt Of India has announced National Award For sanitation and water in honour of him.Govt of Maharashtra also runs Sant gadge Baba Swachta abhiyan (Cleanliness Scheme).
THE AUTHORS RESEARCH NOTE ABOUT ST.GADGE BABA

  • THE MAHARASTRA STATE WHICH GIVE NOBLE PERSON LIKE AMBEDKAR . 

  • HE BORN BEFORE AMBEDKAR BUT HE WAS SUCH A WONDERFUL SOCIAL REFORMER ACCEPTED BY  DR.BR.AMBEDKAR AND ACHARYA ATRE. 

  • ST.GADGE BABA JE  IS THE ONLY PERSON IN 19TH CENTURY  WHO SPOKE ABUT HEALTH AND HYGIENE, ENVIRONMENTAL AND ANIMAL SLAUGHTER.

  • HE FORMED ANIMAL PROTECTION CENTRE IN VIDARBA. BUT HIS HISTORY AND SERVICES WERE HIDDEN PURPOSELY BY HISTORY

  • HE LIVED IN THE ERA OF AMBEDKAR, GANDHI, ACHARYA ATRE,BUT HIS FAME DOES NOT REACH  IN WHOLE INDIA 

  • ALL THE INSTITUTION WHICH WAS FORMED BY ST.GADGE BABA(VOOTU CHATTE SAMEYAR) IS STILL WORKING IN MAHARASTRA
I HAVE A PLAN TO WRITE SOMETHING FOR HIM

WITH LOVE 
AROCKIA RAJ, 9443596715