Tuesday 27 September 2011

தரமான சிகிச்சை எப்போது?

எழுதியவர் ஆர்.ஹரிஹரன்

உலக நாடுகளுக்கு இணையாக நமது நாட்டு விஞ்ஞானிகள், தாமே தயாரித்த செயற்கை கோள்களைப் பறக்க விடுகிறார்கள். கம்ப்யூட்டர் நிறுவனங்கள், தபால் துறை, வங்கி போன்றவை உலக நாடுகளைவிட மேம்பட்ட நிலையில் இருக்கின்றன. 88 கோடி இந்தியர்கள் செல்போன் பயன்படுத்துவதாக வியப்பான செய்தி தருகிறார்கள். ஆனால், மருத்துவத்தில் நம் நாடு எந்த இடத்தில் இருக்கிறது என்பது புரியாத புதிராக இருக்கிறது.

நவீன வசதிகள் கொண்ட மருத்துவமனைகளும், தலை சிறந்த மருத்துவர்களும், புதிய தொழில்நுட்பங்களும் இருப்பதாகச் சொல்கிறார்கள். ஆனால் திரைப்பட நட்சத்திரங்கள் தொடங்கி அரசியல் தலைவர்கள் வரை உடல் சரியில்லை என்றால் உடனே அந்நிய தேசத்துக்குப் படை எடுக்கிறார்கள். இதைப் பார்த்தால் இந்தியா இன்னமும் மருத்துவத்தில் மிகவும் பின்தங்கிய நிலையில்தான் இருக்கிறதோ என்ற சந்தேகம் எழுகிறது.

சூப்பர் ஸ்டார் ரஜினி தொடங்கி நம் நாட்டை வழி நடத்திச் செல்லும் சோனியா காந்தி வரை வெளிநாடுகளில்தான் சிகிச்சை பெறுகிறார்கள். இவர்கள் பணம் படைத்தவர்கள் என்பதால் வெளிநாடுகளுக்குச் சென்று உடம்பைக் கவனித்துக் கொள்கிறார்கள். இந்த ஏழை இந்திய நாட்டில் பிறந்த மற்ற குடிமக்கள் என்ன செய்வது?

உடல்நிலை சரியில்லாத அனைத்து இந்தியர்களையும் அரசு செலவிலேயே வெளிநாட்டு சிகிச்சைக்கு அனுப்ப வேண்டும், அது சாத்தியம் இல்லை என்றால் இங்கே தரமான சிகிச்சைக்கு உத்தரவாதம் தரவேண்டும்.


எழுதியவர் ஆர்.ஹரிஹரன்

Monday 26 September 2011

இந்தியாவால் உருவாக்கப்பட்டுள்ள முதலாவது web browser



இந்தியாவால் உருவாக்கப்பட்டுள்ள முதலாவது web browser epic . (Hidden Reflex)   என்னும் நிறுவனம் இந்த பிரவுசரை உருவாக்கி யூலை 14 அன்று வெளியிட்டு உள்ளது.இந்த பிரவுசர் fire fox ஐ தழுவி உருவாக்கப்பட்டுள்ளது.இதில் தமிழ் உட்பட 12 பிற மொழிகளை நாம் பயன் படுத்தலாம்.

அத்தோடு இதன் சிறப்பு அம்சம் என்னவெனில்,இந்த பிரவுசருடன் இணைக்கப்பட்டுள்ள அன்டி வைரஸ் ஆகும். நாம் எந்த file ஐ  download செய்தாலும் பிரவுசரில் உள்ள அன்டி வைரஸில் scan செய்த பிறகே நம் கணனியில் ஏற்றப்படும்.  மற்றும்  இந்த பிரவுசரில் 1500 இறக்கும் மேற்ப்பட்ட wallpaper உள்ளது. நாம் இந்த பிரவுசரை  install பண்ணிய பிறகு எமக்கு பிடித்தது போல அழகுபடுத்துகொள்ளலாம். அத்தோடு இதன் இடது பக்கத்தில் ஓரமாக உள்ள கட்டத்தில் பல்வேறு வசதிகள் ஏற்படுத்தி தரப்பட்டுள்ளன. face book ,twitter ,writer ,gmail ,yahoo ,games மற்றும் பல (கிரிக்கெட் score கூட online இல் பார்க்கலாம்).  இந்த பிரவுசரிலேயே ஒரு சிறிய விண்டோவில் யு–ட்யூப் தளத்தினை இயக்கி வீடியோ கிளிப்களைப் பார்க்கலாம். இன்னும் பல வசதிகள் உள்ளது. 

 நம் தாய் மொழியாம் தமிழ் மொழியில் எழுத வசதியுள்ளது என்ற காரணத்துக்காகவே இதை பாவிக்கலாம் என்பது என்னுடைய கருத்து.http://www.epicbrowser.com/                 

update checker என்னும் ஒரு மென்பொருள்

இன்றைய தொழில் நுட்ப்ப உலகில்  புதுமையை புகுத்துவது என்பது சாதாரணமாக நடைபெறும் ஒரு நிகழ்வாகிவிட்டது.கணணியை இயக்குவதற்கான மென்பொருட்களுக்கு இது இன்றியமையாததாகிவிட்டது. நீங்கள் உங்கள் கணனியில் அத்தியாவசியமான மென் பொருட்க்களையும் உங்களுக்கு அவசியம் எனக்கருதும் மென் பொருட்க்களையும் நிறுவி இருப்பிர்கள்.

அதே போல இந்த மென் பொருட்களை உருவாக்கிய நிறுவனங்கள் தங்கள் மென் பொருட்க்களை இன்னமும் மெருகூட்டும் வகையிலும் புதுமைகளை புகுத்தி புதிய பதிப்புக்களாக வெளியிட்டுக்கொண்டே இருக்கும்.எனினும் உங்கள் கணனியில் நீங்கள் நிறுவிய மென்பொருளுக்கு புதிய பதிப்பு ஒன்று வெளியிடப்பட்டிருந்தால் அனேகமாக உங்களுக்கு அந்த தகவல் கிடைக்காமல் இருக்கலாம்.இந்த குறைபாட்டை நீக்கும் பொருட்டே வெளியான   update cheacker  என்னும் ஒரு சிறிய  மென்பொருள்.


          

இதன் சிறப்பு அம்சம் என்னவெனில்  உங்கள் கணனியில் உள்ள எனையே மென் பொருட்களுக்கு  புதிய பதிப்புக்கள் வெளியிடப்பட்டிருந்தால் உடனுக்குடன் இது அறியத்தரும்.  இந்த மென்பொருளை நிறுவி வைப்பதற்கு உங்கள் கணனியில்  அதிக அளவு இடம் பிடிக்க போவதும் இல்லை  (247kp ). தரவிறக்க
 /http://www.filehippo.com/  (இந்த தளம் நீங்கள் உங்களுக்கு தேவையான வேறு மென் பொருட்க்களை download செய்ய சிறந்ததாகவும் பாதுகாப்பானதாகவும் காணப்படுகிறது)

 

free registry cleaner


நமது கணிணியில் நாமோ அல்லது நம் வீட்டு சிறுவர்களோ விளையாட Game சாப்ட்வேர் இன்ஸ்டால் செய்திருப்போம் இதனை கணிணி software Registery ல் அப்டேட் செய்து விடும் நாம் இந்த game விளையாட தொடங்கும் போது புதிய சில Instructions மூலம் இயங்க வைக்கும் சிலநாட்களில் அதனை Delete செய்து அடுத்த Game விளையாடுவோம் .

நாம் அதனை remove செய்தாலும் அந்த instructions நமது கணினியிலேயே தங்கிவிடும்.

ஒவ்வொரு முறை கணிணியை இயக்கும்போதும் கணிணி இந்த instructions ஐ செயல்படுத்த முயற்சிக்கும் நாம் அந்த Software ஐ ஏற்கனவே delete செய்துவிட்டோம் எனவே அதனை கண்டுபிடிக்க முடியாது இதற்க்கு registry error என்று பெயர் . இவ்வாறு பல software நாம் பயன்படுத்தி நீக்கியிருந்தால் நமது கணிணி மேற்கூறிய செயல்களால் மெதுவாக செயல்பட தொடங்கும் .இதனை கண்டறிந்து நீக்கினாலே மீண்டும் அந்த வேகத்தை பெற்றுவிடமுடியும் . இதனை எவ்வாறு கண்டறிவது, இதனை கண்டறிந்து நீக்க எனப்படும் software உள்ளது. இதனை நிறுவி அவற்றை முழுமையாக நீக்கலாம். தரவிறக்க
 
Free Registry Cleaner 4.20.9 freeware download

ஒரே தளத்தில் பத்து தேடுபொறி இயந்திரங்கள்

நாம் எமக்கு தேவையான தகவல்களை இலகுவான முறையியல் தேடி பெற பெரும் உதவியாக இருப்பது தேடுபொறி இயந்திரங்கள்.தேடு பொறி இயந்திரம் என்றால் நம்  கண்முன்னே வந்து நிர்ப்பது கூகுளே.யாஹூ மற்றும் பிங் என்பவையும் பிரபல்யமானவை என்ற போதும் கூகுளே அளவுக்கு இல்லை.




   சரி விடயத்துக்கு வருவோம்.அநேகமானோர் ஒன்றுக்கும் மேற்ப்பட்ட தேடு பொறி இயந்திரங்களை ஒரே தளத்தில் பார்த்திருக்க மாட்டீர்கள்.அப்படி ஒரே தளத்தில் இருந்தால் நமக்கு எந்த அளவுக்கு அது பயனுள்ளதாக இருக்கும்? இங்கே ஒரு தளத்தில் பத்து தேடு தேடு பொறி இயந்திரங்கள்  உள்ளது.நீங்கள் பெற விரும்பும் தகவல்களை மிக இலகுவாக தேடுவதற்கு வசதியாக இருக்கும். நீங்கள்  தேடுஇயந்திரங்கள் மூலம் பெற்ற தகவல்களை ஒப்பீட்டு பார்க்கவும் அதிகமான தகவல்களை பெறவும்இந்த தளம் உங்களுக்கு உதவியாக இருக்கும். இது தான் அந்த தளம்.

                                          

வலைப்பதிவுகளை சேமித்து வைத்துக்கொள்ள.

வணக்கம் நண்பர்களே!
என்ன தான் நாம் பல காலமாக பிளாக்கரை பயன்படுத்தி வந்தாலும், அதிலே அங்கொன்றும் இங்கொன்றுமாக இருக்கும் சில வசதிகளை பெரும்பாலும் அறிந்திருக்கமாட்டோம். அந்த வகையில் அநேகர் அறிந்த, சிலர் அறியாத ஒரு சிறு தகவலை தரலாம் என்று நினைக்கிறேன். நிகழ்வுகள் தளத்தில் திருடியது

எவ்வளவோ கஸ்ரப்பட்டு, தேடல்களுடன்(என்னை சொல்லல) எழுதி எம் வலைத்தளத்தில் வெளியிட்ட வலைப்பதிவுகளை நாம் சேமித்து வைத்துக்கொள்ளவே  விரும்புவோம். காரணம்,  நம் பிளாக்கர் எதிர்காலத்தில் முடங்கினாலோ, இல்லை நாமாக  தவறுதலாக அழித்தலோ மீண்டும்  நம் பதிவுகளை  ஆரம்பத்தில்  இருந்தது போல் கொண்டுவர, இல்லை புதிதாக ஒரு தளம் ஆரம்பித்து அதிலே நம் முன்னைய பதிவுகளை தரவேற்றிக்கொள்ள   அது தான் ஒரே வழி. நிகழ்வுகள் தளத்தில் திருடியது

இவ்வாறு என் வலைப்பதிவுகளை சேமித்து கொள்வதற்கு blogger backup utility என்ற சிறிய ஒரு மென்பொருளை தான் நான் பாவித்து வந்தேன். ஆனால் அதை விட மிக எளிய வழி ஒன்று பிளாக்கர் தளத்திலே இருப்பது சிறிது நாட்களுக்கு முன்னர் தான் கண்டு கொண்டேன்.

செய்ய வேண்டியது- 
முதலில் உங்கள் ஒட்டுமொத்த பதிவுகளையும் (பின்னூட்டங்கள் உட்ப்பட) தரவிறக்கி கொள்ள- நிகழ்வுகள் தளத்தில் திருடியது
setting> basic> Export blog  அதன் பின் தோன்றும் ' download ' ஐ அழுத்துங்கள்.


நீங்கள் தரவிறக்கும் போது, அது நாள் வரை உங்கள் வலை தளத்தில் பப்பிளிஷ் பண்ணிய அத்தனை பதிவுகளும் (பின்னூட்டங்கள் உட்பட) ஒரேயடியாக  XML  கோப்பு வடிவில் உங்கள் கணனியில் தரவிறங்கிக்கொள்ளும். ஒவ்வொரு பதிவு எழுதி வெளியிட்ட பின்னும் இம்முறை மூலம் உங்கள் ஒட்டுமொத்த பதிவுகளையும் தரவிறக்கி கொள்வது நல்லது. நிகழ்வுகள் தளத்தில் திருடியது 

தரவிறக்கிய எம்பதிவுகளை மீண்டும்   தரவேற்றிக்கொள்ள வேண்டிய தேவை ஏற்படின்-
setting> basic> import blog கீழே   உள்ள  படத்தில்  உள்ளவாறு ,ஏற்கனவே XML வடிவில் சேமித்து வைத்துள்ள கோப்பை கொடுங்கள்.


உங்கள் வலைத்தளத்தை முற்றாக செயல் இழக்க வைக்க வேண்டிய தேவை ஏற்பட்டால்-
setting>basic>delete blog  (இதில் உள்ள அனுகூலம் 90 நாட்களுக்கு உள்ளே என்றால் அழித்த வலைப்பூவை மீட்டெடுக்க முடியும். கீழே உள்ள படத்தில் உள்ளவாறு ...,நிகழ்வுகள் தளத்தில் திருடியது


யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்;-)

Saturday 24 September 2011

"சாதி அமைப்பு சரியானதே'' மகாத்மா காந்


(‘அரிஜன்' இதழில் வெளிவந்த கட்டுரைகளின் மறுபதிப்பு)

கடந்த மே மாதம் லாகூர் ஜாத் பட் தோடக் மண்டலின் ஆண்டிறுதி கருத்தரங்கில், டாக்டர் அம்பேத்கர் அவர்கள் தலைமை தாங்கி இருக்க வேண்டும் என்பது வாசகர்களுக்கு நினைவிருக்கும். ஆனால், டாக்டர் அம்பேத்கரின் உரை ஏற்கத் தகுந்ததாக இல்லை என்று வரவேற்புக் குழு கருதியதால் கருத்தரங்கே ரத்து செய்யப்பட்டு விட்டது. வரவேற்புக் குழு தன் விருப்பத்துக்கு ஏற்ப, ஒரு தலைவரைத் தேர்ந்தெடுக்கிறது. பின்னர் அந்தத் தலைவரின் உரை ஆட்சேபிக்கத்தக்கது என்று காரணம் காட்டி, அந்தத் தலைவரையே ஏற்க மறுக்கிறது. வரவேற்புக் குழுவின் இந்தப் போக்கு, எந்த அளவுக்கு நியாயம் என்பது கேள்விக்குரியதே.

சாதி பற்றியும் இந்து மத சாஸ்திரங்களைப் பற்றியும் டாக்டர் அம்பேத்கர் கொண்டுள்ள கருத்துகள் என்ன என்பதை, வரவேற்புக் குழு அறிந்தே இருக்கிறது. இந்து மதத்தைவிட்டு வெளியேறப் போவதாக திட்டவட்டமாக அவர் அறிவித்து விட்டார் என்பதுகூட, வரவேற்புக் குழுவுக்கு மிக நன்றாகவே தெரியும். இப்படிப்பட்ட ஓர் உரையைத் தவிர, வேறு எதையும் டாக்டர் அம்பேத்கரிடமிருந்து எதிர்பார்க்க முடியாது என்பதும் அவர்களுக்குத் தெரியும். சமூகத்தில் தனக்கென ஒரு நிலையை உருவாக்கிக் கொண்ட ஒரு மனிதரின் கருத்துகளை, நேரடியாகக் கேட்கிற வாய்ப்பை - பொதுமக்களுக்குக் கிட்டாமல் செய்துவிட்டது வரவேற்புக் குழு. எதிர்காலத்தில் தான் எந்த முகாமில் இருந்தாலும், மற்றவர்கள் தன்னை மறந்து விடுவதை அனுமதிக்கிறவர் அல்லர் டாக்டர் அம்பேத்கர்.

டாக்டர் அம்பேத்கர், இந்து மதத்திற்கு ஒரு சவால்

வரவேற்புக் குழுவால் டாக்டர் அம்பேத்கரைத் தோற்கடிக்க முடியாது. அவர் தன் சொந்தச் செலவில் தன் உரையை அச்சிட்டு, அதன் மூலம் வரவேற்புக் குழுவின் புறக்கணிப்புக்குத் தக்க பதிலடி தந்திருக்கிறார். அந்த உரையின் விலை எட்டணா. அதை 2 அல்லது 4 அணாவாகக் குறைக்க வேண்டும் என்று யோசனை கூற விரும்புகிறேன். சீர்திருத்தவாதி எவரும் அந்த உரையை அலட்சியப் படுத்திவிட முடியாது. வைதீகர்கள் அதைப் படித்தால் பயனடைவார்கள். இவ்வாறு கூறுவதால் உரை, மறுப்புக்கு இடமற்றதாக ஆகிவிடாது. கடும் ஆட்சேபனைக்கு உரியது என்ற ஒரே காரணத்துக்காகத்தான் அதைப் படித்தாக வேண்டும்.

டாக்டர் அம்பேத்கர், இந்து மதத்துக்கு ஒரு சவால். இந்துவாக வளர்க்கப்பட்டு, இந்து பாதுகாவலர் ஒருவரின் தயவால் கல்வியறிவு பெற்றவர் அவர். சவர்ண இந்துக்கள் என்று சொல்லப்படுகிறவர்களால் - அவரும் அவரைச் சார்ந்த மக்களும் நடத்தப்பட்ட முறையின் காரணமாக, அவர்கள் மீது ஆழ்ந்த வெறுப்புக் குள்ளானார். இந்த வெறுப்பு எந்த அளவுக்குச் சென்று விட்டது? சவர்ண இந்துக்களை மட்டுமல்லாது, தனக்கும் சவர்ண இந்துக்களுக்கும் பொதுவான பாரம்பரியமாகிய மதத்தையே விட்டு விலகும்படி செய்து விட்டது. அந்த மதப்பண்டிதர்களில் ஒரு பகுதியினர் மீது தனக்கு ஏற்பட்ட வெறுப்பை, அந்த மதத்தின் மேல் உமிழ்ந்து இருக்கிறார் அவர்.

ஆனால், இதில் வியப்பு ஏதும் இல்லை. ஏனெனில், ஓர் அமைப்பையோ நிறுவனத்தையோ, அதன் பிரதிநிதிகள் நடந்து கொள்ளும் முறையைக் கொண்டுதான் மதிப்பிட முடியும். இதற்கு மேல் என்ன சொல்வது? சவர்ண இந்துக்களில் மிகப் பெரும்பான்மையினர் தங்கள் மதத்தைச் சேர்ந்த - தீண்டத்தகாதவர் என்று தங்களால் ஒதுக்கி வைக்கப்பட்ட மக்களிடம் - மனிதத் தன்மை இல்லாமல் நடந்து கொண்டார்கள். அது மட்டுமல்ல; தங்களின் அந்த நடத்தைக்கு மத நூல்களை ஆதாரமாக ஆக்கிக் கொண்டார்கள். அம்பேத்கர் அந்த நூல்களை அலசிப்பார்க்கிறார். தீண்டாமைக்கும் அதன் விளைவுகளுக்கும் ஆதரவான நம்பிக்கைக்கு, ஏராளமான ஆதாரங்களை அந்த நூல்களில் காண்கிறார்.

மிகத் தெளிவான கருத்தை முன் வைக்கும் உரமுள்ள அம்பேத்கர்

அம்பேத்கரின் உரையில் காணப்படும் குற்றச்சாட்டு, மூன்று அம்சங்களைக் கொண்டது: 1. மனிதத் தன்மை இல்லாத நடத்தை 2. மனிதத் தன்மை இல்லாத கொடியவர்கள், தங்களுடைய நடத்தைக்காக வெட்கித் தலைகுனியாமல் அந்த நடத்தைக்குக் கற்பிக்கிற நியாயங்கள் 3. இவ்வாறு கற்பிக்கப்படுகிற நியாயங்களுக்கு அதிகாரம் தந்திருப்பவை, மத நூல்களே என்ற கண்டுபிடிப்பு. இவையே அந்த மூன்று அம்சங்கள். தன் குற்றச்சாட்டு உண்மைதான் என்பதை உறுதிப்படுத்த, தனது உரை நெடுக மத நூல்களில் இருந்து உள்ளபடியே ஏராளமான மேற்கோள்களை அடுக்கிக் கொண்டே செல்கிறார்.

தன்னுடைய நம்பிக்கையை (மதத்தை) தன் உயிரைவிட மேலானதாக மதிக்கிற எந்த ஓர் இந்துவும், அவருடைய குற்றச்சாட்டின் முக்கியத்துவத்தைக் குறைத்து மதிப்பிட்டுவிட முடியாது. டாக்டர் அம்பேத்கர் மிகுந்த வெறுப்புடன் இருக்கிறார் என்பது மட்டுமல்ல; அதே வெறுப்புணர்வோடு இருக்கிற பலரிடையே தன் கருத்தைச் சிறிதும் விட்டுக் கொடுக்காமல் - மிகத் தெளிவாக விளக்கிச் சொல்லும் உரம் படைத்தவர் அவர். அத்தகைய மனிதர்களிலேயே அவர் மிகத் திறமையானவரும்கூட. நல்ல வேளையாக, முன்னணித் தலைவர்களின் வரிசையில் அவர் மட்டும் தன்னந்தனியராக நிற்கிறார். இந்த நிமிடம் வரை, ஒரு மிகச் சிறிய சிறுபான்மையினரின் பிரதிநிதியாகவே அவர் இருக்கிறார்.

ஆனால், ஒடுக்கப்பட்ட வகுப்புகளைச் சேர்ந்த பல தலைவர்கள் அவர் கூறுவதை, அவரைப் போலவே ஆவேசத்துடன் எதிரொலித்து வருகிறார்கள். அவர்களில் ராவ்பகதூர் எம்.சி.ராஜா, திவான்பகதூர் சீனிவாசன் போன்றவர்கள் எல்லாம் - இந்து மதத்தை விட்டு வெளியேறப் போவதாக மிரட்டுவதில்லை என்பதோடு, அரிஜனங்களில் மிகப்பெரும்பான்மையினர் ஆளாகியிருக்கிற வெட்கக் கேடான ஒடுக்குமுறைக்கு அதிலேயே மாற்று வழியும் கண்டு நிறைவடைகிறார்கள்.

சாதி இந்துக்கள் திருந்தட்டும்

இன்னும் பல தலைவர்கள், இந்து மதத்தில் தொடர்ந்து நீடிக்கிறார்கள் என்பதற்காக, டாக்டர் அம்பேத்கர் சொல்வதைப் புறக்கணித்துவிட முடியாது. சவர்ண இந்துக்கள் தங்கள் நம்பிக்கைகளையும் நடத்தையையும் திருத்திக் கொள்ள வேண்டும். எல்லாவற்றுக்கும் மேலாக, சவர்ண இந்துக்களில் கற்றறிந்த மேலோரும் செல்வாக்கு உடையவர்களுமாக இருப்பவர்கள், இந்து மத நூல்களைப் பற்றி சரியான விளக்கமளிக்க வேண்டும்.

டாக்டர் அம்பேத்கரின் குற்றச்சாட்டு மூன்று கேள்விகளை எழுப்புகிறது :

1. இந்துக்களின் மத நூல்கள் எவை?
2. இதுவரை வெளிவந்த உரை நூல்கள் அனைத்தையுமே ஏற்றுக் கொள்வதா அல்லது ஒரு சில நூல்களை அதிகாரப் பூர்வமற்றவை என ஒதுக்கிவிடுவதா?
3. தீண்டாமை, சாதி, சம நிலை, கலப்பு மணம், சமபந்தி என்பன பற்றி எழுப்பப்படுகிற கேள்விகளுக்கு அதிகாரப் பூர்வ நூல்களும், அதிகாரப் பூர்வமற்ற நூல்களும் தருகிற பதில் என்ன?

டாக்டர் அம்பேத்கர் தன் உரையில் இந்த மூன்றையும் ஆராய்ந்திருக்கிறார். அடுத்த இதழில், இந்தக் கேள்விகளுக்கு பதிலளிக்கிறேன். டாக்டர் அம்பேத்கரின் உரையில் உள்ள அப்பட்டமான குறைபாடுகளை விளக்குகிறேன்.

2

வேதங்கள், உபநிடதங்கள், ஸ்மிருதிகள், ராமாயணம், மகாபாரதம் உள்ளிட்ட புராணங்கள் ஆகியவை இந்து சாஸ்திரங்கள். இத்துடன் முடிந்து விடவில்லை. ஒவ்வொரு சகாப்தமும் அல்லது ஒவ்வொரு தலைமுறையும்கூட, புதிய மத நூல் ஒன்றைத் தந்துள்ளது. எனவே, அச்சில் ஏறிய எல்லாமே அல்லது சுவடிகளில் உள்ள எல்லாமே மத நூல்கள் ஆகிவிடாது என்பதை இதிலிருந்து புரிந்து கொள்ளலாம்.

எடுத்துக்காட்டாக, கடவுளின் சொல்லாக ஒருபோதும் ஏற்க முடியாத கருத்துகள், ஸ்மிருதிகளில் ஏராளமாக உள்ளன. ஆக, டாக்டர் அம்பேத்கர் ஸ்மிருதிகளில் இருந்து மேற்கோளாக எடுத்துக்காட்டுகிற எத்தனையோ சூத்திரங்கள், அதிகாரப்பூர்வமானவை என்று ஏற்க முடியாதவையே. எக்காலத்துக்குமான செய்தியைப் பேசுபவை மட்டுமே சாஸ்திரங்கள். திறந்த மனதுடைய எல்லாருமே ஏற்றுக் கொள்ளக் கூடியவையாக இருப்பவையே சாஸ்திரங்கள்.

சாதியின் மூலம் எனக்குத் தெரியாது !

பகுத்தறிவினால் பரிசோதிக்க முடியாத எதையும் அல்லது ஆன்மீக ரீதியாக அனுபவிக்க முடியாத எதையும் - இறைவனின் சொல் என்று ஏற்றுக் கொள்ள முடியாது. விலக்கப்பட்ட மத நூல்கள் உங்களிடம் இருந்தாலும் கூட, சரியான விளக்கம் தந்தாக வேண்டுமே! அந்த நூல்களுக்கு விளக்கம் தருவதில் தலைசிறந்தவர்கள் யார்? நிச்சயமாகக் கற்றறிந்த மனிதர்கள் அல்ல. கல்விச் சிறப்பு தேவையானதே. ஆனால், மதம் கல்விச் சிறப்பால் இயங்கவில்லை. முனிவர்கள், முக்காலமும் உணர்ந்த ஞானிகள் ஆகியோரின் அனுபவங்களிலும், வாழ்க்கையிலும், சொற்களிலும் குடிகொண்டு இருப்பதுதான் மதம். மிகச் சிறந்த சாஸ்திர அறிஞர்கள் மறக்கப்பட்டு விடுகின்ற நிலையிலும், ஞானிகள், தவமுனிவர்கள் ஆகியோர் அடைந்துள்ள பேரனுபவங்கள் என்றென்றும் நிலைத்திருக்கும்; மக்களின் ஆன்மீக உணர்ச்சியைத் தூண்டிவிடும் பெரும் சக்தியாகத் தொடர்ந்து இருந்துவரும்.

சாதி, மதத்தோடு எந்த விதத்திலும் தொடர்பு இல்லாதது. சாதி ஒரு நடைமுறை வழக்கமே; சாதியின் மூலம் எது என்று எனக்குத் தெரியாது. என் ஆன்மீக வேட்கையைத் தணித்துக் கொள்ள, சாதியின் மூலத்தை நான் தெரிந்து கொள்ளவும் அவசியம் இல்லை.

ஆனால் சாதி, ஆன்மீக வளர்ச்சிக்கும், தேச வளர்ச்சிக்கும் கேடு விளைவிக்கக் கூடியது என்பது எனக்குத் தெரியும். வர்ணம், ஆஸ்ரமம் ஆகிய நிறுவனங்கள் சாதிகளோடு சிறிதும் தொடர்பு இல்லாதவை. வர்ணச் சட்டம் நமக்குக் கற்பிப்பது என்ன? பரம்பரைத் தொழிலை மேற்கொண்டே, தங்கள் வாழ்க்கையை ஒவ்வொருவரும் நடத்திக் கொள்ள வேண்டும் என்பது தானே. வர்ணச் சட்டம், நம் உரிமைகள் என்ன என்பதைக் கூறவில்லை. கடமை என்ன என்பதையே கூறுகிறது. மனித குலத்துக்கு நன்மை செய்வதற்கான தொழில்களைப் பற்றியே அது பேசுகிறது. வேறு எதையும் அல்ல. மிகவும் உயர்ந்த தொழில் அல்லது மிகவும் தாழ்ந்த தொழில் என்று எந்தத் தொழிலும் இல்லை என்பதும் இதனால் விளங்கும். எல்லா தொழில்களுமே நல்லவைதான்; சட்டத்துக்கு உட்பட்டவைதான்; எல்லா வகையிலும் சம நிலை கொண்டவைதான்.

‘பார்ப்பனர் தொழிலும், தோட்டி தொழிலும் சமமானதே'

ஆன்மீக குருவாக இருக்கும் பார்ப்பனரின் தொழிலும், தோட்டி ஒருவரின் தொழிலும் சமமானவையே; தத்தமக்குரிய கடமைகளை, பார்ப்பனரும் தோட்டியும் சரிவரச் செய்வது, கடவுளின் கண்களுக்கு சமமான சிறப்புடையதாகவே காட்சியளித்தது. ஒரு காலத்தில் மனிதனிடம் இருந்தும் ஒரே மாதிரியான ஊதியத்தையே பெற்றுவந்ததாக தெரிய வருகிறது. பார்ப்பனர் ஆனாலும் சரி, தோட்டியானாலும் சரி, வாழ்க்கைத் தேவைகளை நிறைவு செய்து கொள்வதற்காகவே - அவர்கள் அத்தொழில்களை மேற்கொண்டார்கள். வேறு எதற்காகவும் அல்ல.

இன்றும்கூட கிராமங்களில் இந்தச் சட்டம் சிறப்பான முறையில் செயல்பட்டு வருகிறது என்பதற்குரிய சில அடையாளங்கள் காணப்படுகின்றன. 600 பேரே உள்ள சீகன் என்ற ஊரில், பார்ப்பனர்கள் உள்ளிட்ட பல்வேறு தொழிலாளிகளின் ஊதியத்தில் பெரும் ஏற்றத் தாழ்வு எதுவும் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை. சீரழிந்த இந்தக் காலத்திலும், நான் சில உண்மையான பார்ப்பனர்களைப் பார்க்கிறேன். அந்தப் பார்ப்பனர்கள் அவர்களுக்குப் பிறர் மனமுவந்து இடும் பிச்சையால் உயிர் வாழ்ந்து வருகிறார்கள்; தங்களுடைய ஆன்மீக அறிவு, அனுபவம் என்கிற அரிய சொத்தை மனமுவந்து பிறருக்கு வழங்குகிறார்கள்.

தாங்கள் ஒரு குறிப்பிட்ட வர்ணத்தைச் சேர்ந்தவர்கள் எனக்கூறிக் கொண்டு, அதே நேரத்தில் அந்த வர்ணத்துக்குரிய ஒரே ஒரு செயல்பாட்டு விதியையும் - வெளிப்படையாக மீறி நடக்கிற மனிதர்களின் வாழ்க்கையில் காணப்படும் கேலிக் கூத்துகளைக் கொண்டு, வர்ணச் சட்டத்தை ஆராய முற்படுவது பிழையானது; முற்றிலும் முறையற்றது. மற்ற எந்த வர்ணத்தையும் விட, தங்கள் வர்ணமே உயர்ந்த அந்தஸ்து கொண்ட வர்ணம் என்று எந்த வர்ணத்தாரும் உரிமை கொண்டாடுதல் கூடாது. இவ்வாறு செய்வது, வர்ணச் சட்டத்தை மறுப்பதே ஆகும். தீண்டாமையை நம்பச் சொல்கிற எந்த அம்சமும் வர்ணச் சட்டத்தில் இல்லை (சத்தியமே கடவுள், அகிம்சையே மனித குலத்தின் சாரம் என்பதே இந்து மதத்தின் சாராம்சம்).

'எதிர் வாதத்தால் நான் மாறப்போவதில்லை'

டாக்டர் அம்பேத்கர் மட்டுமல்ல, இந்து மதம் பற்றி நான் தந்திருக்கிற இந்த விளக்கத்தை ஏற்க மறுத்து - இன்னும் பல தலைவர்கள் எதிர்வாதம் புரிவார்கள் என்பது, எனக்கு மிக நன்றாகவே தெரியும். இவர்களின் எதிர்வாதத்தால் என் நிலையில் மாற்றம் எதுவும் ஏற்பட்டு விடாது. இந்த விளக்கத்தின்படிதான் ஏறக்குறைய 50 ஆண்டுகளாக நான் வாழ்ந்து வருகிறேன். என்னால் முடிந்த அளவுக்கு என் வாழ்க்கையை, அந்த விளக்கத்துக்கு ஏற்ப ஒழுங்குபடுத்திக் கொள்ள முயன்று வருகிறேன்.

டாக்டர் அம்பேத்கர் தன் உரையில், சந்தேகத்துக்கு இடமான நூல்களில் இருந்தும், தம் மதத்துக்கு உண்மையுள்ள முன்மாதிரியாக வாழாமல், சீரழிந்து போன இந்துக்களின் வாசகங்களில் இருந்தும் எடுத்துக்காட்டுகள் தந்துள்ளார். இதுவே அவர் செய்துள்ள மிகப் பெரும் தவறு என்பது என் கருத்து. டாக்டர் அம்பேத்கர் கூறும் அளவுகோலை வைத்துப் பார்த்தால், இன்று நடப்பில் உள்ள எல்லா மதங்களுமே அதன் முன்னால் தோற்றுத்தான் போகும்.

தனது திறமையான உரையில் அறிவாளியான டாக்டர், தன் தரப்பு நியாயத்தை வரம்பை மீறியே நிரூபித்து உள்ளார். சைதன்யர், ஜயன்தேவ், துக்காராம், திருவள்ளுவர், ராமகிருஷ்ண பரமஹம்சர், ராஜாராம் மோகன் ராய், மகரிஷி தேவேந்திரநாத் தாகூர், விவேகானந்தர் இன்னும் எளிதில் பேர் சொல்லிவிடக் கூடிய ஏராளமானோரும் ஏற்றுக் கொண்ட ஒரு மதமானது, டாக்டர் அம்பேத்கர் தம் உரையில் சித்தரித்துக் காட்டி உள்ளபடி - முழுக்க முழுக்க தகுதி இல்லாதது ஆகிவிட முடியுமா? ஒரு மதத்தை, அதன் மோசமான எடுத்துக்காட்டுகளைக் கொண்டு மதிப்பிடக் கூடாது. அது உருவாக்கிய மிகச் சிறந்த எடுத்துக்காட்டுகளைக் கொண்டே மதிப்பிட வேண்டும். அவற்றை மட்டுமே பின்பற்றத்தக்க முன்மாதிரிகளாகப் பயன்படுத்த முடியும். அதற்கு மேலேயும் போக வேண்டும் என்பது வேறு செய்தி.
- ‘அரிஜன்', சூலை 18, 1936

3

வர்ணம் # சாதி

லாகூர் ஜாத்பட்தோடக் மண்டலைச் சேர்ந்த திரு. சான்ட் ராம்ஜி பின்வரும் கடிதத்தை நான் வெளியிட வேண்டும் என்று விரும்புகிறார் :

டாக்டர் அம்பேத்கரைப் பற்றியும் லாகூர் ஜாத் பட்தோடக் மண்டலைப் பற்றியும் நீங்கள் எழுதியுள்ள குறிப்புகளை வாசித்தேன். அது தொடர்பாகப் பின்வரும் விளக்கத்தை அளிக்கிறேன்.

"டாக்டர் அம்பேத்கர் தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர் என்பதற்காக, எங்கள் மாநாட்டுக்கு அவரைத் தலைமை தாங்க அழைக்கவில்லை. ஏனெனில், தீண்டத்தக்க இந்துவுக்கும் - தீண்டத்தகாத இந்துவுக்கும் இடையில் நாங்கள் பாகுபாடு காட்டுவதில்லை. இந்து சமூகத்தைப் பீடித்துள்ள கொள்ளை நோயைப் பற்றிய அவரது ஆய்வு, எங்களுடையதோடு ஒத்துப்போனதால்தான் நாங்கள் அவரை அழைத்தோம். அதாவது, இந்துக்களின் சீர்குலைவுக்கும் வீழ்ச்சிக்கும் அடிப்படைக் காரணம், சாதி அமைப்புதான் என்றே அவரும் கூறுவதால்தான் அவரை அழைத்தோம்.

டாக்டர் பட்டத்துக்கான அவரது ஆய்வுரை, சாதி அமைப்பைப் பற்றியதே ஆகும். அதில் சாதி அமைப்பை அவர் முழுமையாக ஆய்வு செய்துள்ளார். சாதிகளை ஒழிக்குமாறு இந்துக்களை வற்புறுத்துவதே - எங்கள் மாநாட்டின் நோக்கமாக இருந்தது. ஆனால், இந்து அல்லாத ஒருவர் சமூக, மதச் செயல்பாடுகளில் அறிவுரை கூறுவது என்பது, இந்துக்களிடம் எந்த மாறுதலையும் ஏற்படுத்தாது. தம் உரையின் இணைப்புப் பகுதியில் ஓர் இந்து என்ற முறையில், அதுவே தன் இறுதி உரையாக இருக்கும் என டாக்டர் அழுத்திக் கூறி இருக்கிறார். மாநாட்டின் நலன்களுக்கு இது பொருத்தமாக இல்லை என்பது மட்டுமல்ல, கெடுதல் செய்வதாகவும் இருந்தது. எனவே, அந்த வாசகத்தைத் தவிர்த்து விடுமாறும் வேறு ஒரு சந்தர்ப்பத்தில் அதை அவர் எளிதில் வெளியிட்டுக் கொள்ள முடியும் என்றும் கேட்டுக் கொண்டோம்.
;
ஆனால், அவர் மறுத்து விட்டார். நாங்களும் அதற்கு மேல் எங்கள் நிகழ்ச்சியை வெறும் ‘பந்தா' பண்ணிக் காட்டுவதில் எந்தப் பயனும் இருப்பதாகத் தெரியவில்லை. இதெல்லாம் இருந்தாலும் அவரது உரையை என்னால் பாராட்டாமல் இருக்க முடியவில்லை. நான் அறிந்தவரை, இது மிகவும் அறிவார்ந்த ஆய்வுøரயாகும். இந்திய மொழிகள் எல்லாவற்றிலும் மொழிபெயர்த்து வெளியிடத் தகுதியானதுமாகும்.

அடுத்து, சாதிக்கும் வர்ணத்துக்கும் இடையில் நீங்கள் காட்டும் தத்துவார்த்த வேறுபாடு, மிக நுணுக்கமானது என்பதை உங்கள் பார்வைக்குக் கொண்டு வர விரும்புகிறேன். பொதுமக்களால் அந்த வேறுபாட்டைப் புரிந்து கொள்ள முடியாது. ஏனென்றால், இந்து சமுதாயத்தின் ஒவ்வொரு நாள் வாழ்விலும் சாதியும் வர்ணமும் ஒன்றாகவே இருக்கிறது. ஏனெனில், இரண்டின் செயல்பாடுகளும் ஒன்றுதான். அதாவது, இரண்டுமே கலப்பு மணத்தையும் சமபந்தியையும் தடுக்கின்றன.

உங்கள் வர்ணக் கோட்பாட்டை, தற்காலத்தில் நடைமுறைப்படுத்துவது சாத்தியம் இல்லை. வருங்காலத்தில் அது புத்துயிர்ப்பு பெறும் என்பது போலவும் தெரியவில்லை. ஆனால், இந்துக்கள் சாதியடிமைகள். சாதியை ஒழிக்க அவர்கள் விரும்பவில்லை. எனவே, நீங்கள் உங்கள் கற்பனை லட்சியமான - வர்ணக் கோட்பாட்டை முன்வைக்கும்போது, அதில் அவர்கள் தத்தம் சாதியில் தொடர்ந்து ஒட்டிக் கொண்டு இருப்பதற்கு நியாயத்தைக் காண்கிறார்கள். ஆக, உங்கள் வர்ணப் பிரிவினையின் கற்பனையான பயன்பாட்டை அறிவுறுத்துவதன் மூலம், நீங்கள் சமுதாய சீர்திருத்தத்துக்குப் பெரும் கெடுதியையே ஏற்படுத்தி வருகிறீர்கள்.

ஏனென்றால், அது எங்கள் வழிக்குத் தடையாக இருக்கிறது. வர்ணக் கோட்பாட்டின் ஆணிவேரைத் தாக்காமல் - தீண்டாமையை நீக்கிவிட முயல்வது, நோயின் வெளி அடையாளங்களுக்கு சிகிச்சை செய்வது போன்றது; நீர்மேல் ஓவியம் வரைவது போன்றதாகும். ‘துவிஜர்'கள் (மேல்சாதி இந்துக்கள்) தங்கள் அடிமனதில் தீண்டத்தக்க - தகாத சூத்திரர் எனப்படுவோருக்கு ச மூக சமத்துவம் வழங்க விரும்புவதில்லை.

எனவே, அவர்கள் சாதியை உடைக்க மறுக்கிறார்கள். தீண்டாமையை அகற்ற அவர்கள் தாராள நிதி வழங்குவது, பிரச்சனையை ஓரம் கட்டவே செய்யும். தீண்டாமையையும் சாதியையும் அகற்ற சாஸ்திரங்களின் உதவியை நாடுவது, சேற்றை சேற்றால் கழுவப் பார்ப்பது போன்றதே ஆகும்.''

வர்ணத்தை மறுப்பவன் இந்துவாக இருக்க முடியாது

கடிதத்தின் பின்பகுதி, முன்பகுதிக்கு முரணாக உள்ளது. மண்டல்காரர்கள் சாஸ்திரங்களின் உதவியை நிராகரிப்பார்களானால், அவர்களும் டாக்டர் அம்பேத்கர் செய்த அதே செயலையே செய்கிறவர்கள் ஆகிறார்கள். அதாவது, இந்துக்கள் அல்லாமல் போகிறார்கள். பிறகு எப்படி அவர்கள் ‘இதுவே என் கடைசி உரையாக இருக்கும்' என்று சொன்னதற்காக அம்பேத்கரை ஆட்சேபிக்க முடியும்? எதன் சார்பாக திரு. சாண்ட்ராம் பேசுவதாக கூறிக் கொள்கிறாரோ, அந்த மண்டலே டாக்டர் அம்பேத்கரின் உரை முழுவதன் சாரமான வாதத்தைத் தூக்கிப்பிடிக்கிறபோது, நிலைமை முற்றிலும் ஏற்றுக் கொள்ள முடியாமல் போகிறது.

ஆனால், மண்டல், சாஸ்திரங்களை நிராகரிக்கிறது என்றால், வேறு எதை நம்புகிறது என்று கேட்பது ஏற்புடையதே ஆகும். குரானை மறுத்த பிறகு ஒருவர் எப்படி முஸ்லிமாக நீடிக்க முடியும்? பைபிளை மறுத்த பிறகு ஒருவர் எப்படி கிறித்துவராக நீடிக்க முடியும்? சாதியும் வர்ணமும் ஒன்றுதான் என்றால், இந்து மதத்தை வரையறுக்கிற சாஸ்திரங்களிலிருந்து பிரிக்க முடியாத பகுதியே வர்ணக்கோட்பாடு என்றால், சாதியை அதாவது வர்ணத்தை மறுக்கிற எவரும் - எப்படி தன்னை இந்து என்று அழைத்துக் கொள்ள முடியும் என்று எனக்குத் தெரியவில்லை.

திரு. சாண்ட்ராம், சாஸ்திரங்களைச் சேற்றுடன் ஒப்பிடுகிறார். எனக்குத் தெரிந்தவரை டாக்டர் அம்பேத்கர், சாஸ்திரங்களுக்கு இதுவரை இப்படிப்பட்ட சித்தரிப்பை வழங்கவில்லை. இன்று நிலவுகிற தீண்டாமையை சாஸ்திரங்கள் ஆதரிக்குமானால், நான் என்னை ஒரு இந்து என்று அழைப்பதை நிறுத்திக் கொள்வேன் என்று, நான் சொன்னது வெறும் பேச்சுக்கல்ல. அது போலவே, சாதியை இன்று நாம் அறிந்துள்ள அதன் எல்லா அசிங்கங்களோடும் சாஸ்திரங்கள் ஆதரிக்குமானால், நான் என்னை இந்து என்று சொல்லிக் கொள்ளவோ, இந்துவாக நீடிக்கவோ முடியாமல் போகலாம். ஏனெனில் கலப்பு மணத்தின் மீதோ, சமபந்தி மீதோ எனக்கு எவ்விதக் காழ்ப்பும் கிடையாது. சாஸ்திரங்கள் மற்றும் அவற்றில் உள்ள இடைச்செருகல்கள் குறித்த என் நிலைப்பாட்டை நான் திரும்பவும் கூறத் தேவையில்லை. இது மட்டுமே அறிவுப்பூர்வமாக சரியானதும் ஒழுக்கப் பூர்வமாக வலுவானதும் ஆன நிலைப்பாடு என்று திரு. சாண்ட்ராமுக்கு நான் துணிந்து சொல்லிக் கொள்கிறேன். இப்படிச் சொல்வதற்கு, இந்து மரபில் போதிய சாட்சியங்கள் உள்ளன.

- "அரிஜன்', ஆகஸ்டு 15, 1936

ஆரியர் ஏது? திராவிடர் ஏது? எல்லாம் ஒன்றாய்விட்டதே, எல்லாம் கலந்தாய்விட்டதே???


அதுசமயம் அவர்கள் "ஒருசிலர் ஆரியர் ஏதுதிராவிடர் ஏது?எல்லாம் ஒன்றாய்விட்டதேஎல்லாம் கலந்தாய்விட்டதே" என்று எடுத்துச் சொல்லி நமது திராவிட நாட்டுப் பிரிவினை முயற்சியைக் கெடுக்கப் பார்க்கிறார்கள். ஆரியர் திராவிடர் இவர்களுக்குள்ளே இந்தக் கலப்பு ஏற்பட்டுவிட்டதாகச் சொல்லி நம் இன உணர்ச்சியைத் தடை செய்யப்பார்க்கிறார்கள். இந்தக் கலப்பு ஏற்பட்டுவிட்டதென்றால் அது போதுமாஇன்னும் பழக்க வழக்கங்களில் பேதம் இருந்து வருகிறதே அது ஒழிய வேண்டாமா?அது ஒழிய வேண்டும் என்று உணர்ச்சியூட்ட ஓர் இயக்கம் வேண்டாமாஅப்படிப்பட்ட உணர்ச்சியூட்டத்தானேதிராவிடர் கழகம் இருந்து வருகிறது.
இரத்தக் கலப்பு ஏற்பட்டுவிட்டதென்பது உண்மையானால் தோழர்களேஇன்னும் ஏன் ஆரியர் எல்லோரும் பார்ப்பனர்களாக இருக்கதிராவிடர் எல்லோரும் சூத்திரர்களாக இருக்கிறார்கள்இன்னும் ஏன் பார்ப்பான் உச்சிக்குடுமி வைத்துக் கொண்டிருக்கிறான்இன்னும் ஏன் பார்ப்பான் பூணூல் மாட்டிக் கொண்டிருக்கிறான்இன்னும் ஏன்,பார்ப்பான் தொட்டால் சாகாத கடவுள்நாம் தொட்டால் செத்துப் போய்க் கொண்டிருக்கிறது?
இந்து மதம் ஒழிய வேண்டுமென்றால் என் மீது கோபித்துக் கொள்ளும் ஆரியத் தோழர்களைக் கேட்கிறேன். பார்ப்பனத் தோழர்களைக் கேட்கிறேன். இந்து மதத்தை ஒப்புக் கொண்டிருப்பதால்தானே நாங்கள் சூத்திரர்களாக ஆக்கப்பட்டிருக்கிறோம்இந்து மதத்தை ஒப்புக் கொண்டிருப்பதால்தானே நீங்கள் பார்ப்பனர்களாக - பிராமணர்களாக ஆக்கப்பட்டிருக்கிறீர்கள்இப்படி எங்களை இழிவுபடுத்தி வைத்திருக்கும் இந்து மதம் ஒழிய வேண்டுமென்றால் அது எப்படிக் குற்றமாகும்?
எங்களை வகுப்புவாதிகள்பிராமணத் துவேஷிகள்மக்களைப் பிரிக்கப் பார்க்கிறவர்கள் என்கிறீர்களேஉண்மையில் மக்களைப் பிரித்து வைப்பது நீங்களாநாங்களாஒருத்தன் பார்ப்பானாகவும்,ஒருத்தன் பஞ்சமனாகவும் இருக்க நீங்கள் காரணமாநாங்கள் காரணமாமக்களிடையே பிரிவினை கூடாது என்கின்ற எண்ணம் உங்களுக்கு உண்மையாகவே இருக்குமானால் நீங்களே விலக்கி விடலாமே, "இனி நாட்டிலுள்ள எல்லோருமே சமம் பார்ப்பானென்றும்பஞ்சமனென்றும் மேதமில்லை,பார்ப்பானென்றும் சூத்திரனென்றும் பேதமில்லை," என்று நீங்களே ஒழித்து விடலாமேஉங்கள் உச்சிக்குடுமியையும் பூணூலையும் நீங்களே கொடுத்து விடலாமேகோயில் சாவிகளை எங்களிடம் தந்துபூசை செய்யும் தட்டில் விழும் காசை எடுத்துக் கொள்ளவும் நீங்களே எங்களை அனுமதித்து விடலாமே. நீங்களே அழித்து விடலாமேபிறவியினால் பேதமும்இழிவும் கற்பிக்கும் சாஸ்திரப் புராண இதிகாச ஆதாரங்களை நீங்களே முன்வந்து விடலாமே எங்களோடு சம்பந்தம் வைத்துக் கொள்ள.
இதை எல்லாம் செய்ய மறுக்கிறீர்கள். இன்னும் கோயிலில் உங்களுக்குத் தனி இடம் வேண்டுமென்கிறீர்கள். நீங்களே பூஜை செய்ய வேண்டுமென்கிறீர்கள். நீங்களே தட்டில் விழும் காசை எடுத்துச் சொருகிக் கொள்கிறீர்கள். இன்றும் சாஸ்திரங்களும் புராணங்களும் இதிகாசங்களும் அப்படியே இருக்க வேண்டும் என்கிறீர்கள். சூத்திரன் படிக்கக்கூடாதுபடித்தால் நாட்டுக்குக் கேடு என்று எழுதி வைக்கப்பட்டிருக்கும் மனுநீதி சாஸ்திரமும் அப்படியே இருக்க வேண்டுமென்கிறீர்கள். இன்னும் நாங்கள் தொட்டால் உங்களுக்கு "தீட்டு" வந்துவிடுகிறது என்று சொல்லிக் கொண்டு எட்டி நின்று வருகிறீர்கள். பள்ளிகளிலும்,கல்லூரிகளிலும் உங்களுக்கே இடம் வேண்டும் என்கிறீர்கள். சகல உத்தியோகங்களும்உங்களுக்கே கொடுக்கப்பட வேண்டும் என்கிறீர்கள். எங்கள் விகிதாசாரம் கூட எங்களுக்குக் கிடைக்கக்கூடாது என்று சூழ்ச்சிகள் பல செய்து வருகிறீர்கள். இப்படி எல்லாமே நீங்களே எங்களுக்குத் தொல்லைக் கொடுத்துக் கொண்டு வந்தும்எங்களையே துவேஷிகள்பிரிவினை முயற்சிக்காரர்கள் என்று குற்றம் சாட்டி வருகிறீர்கள். இது ஒழுக்கமாகுமாநேர்மையாகுமாநீங்களே சிந்தித்துப் பார்த்துக் கொள்ளுங்கள்.
தோழர்களே நாங்கள் ஒன்றும் பார்ப்பான் ஒழிய வேண்டும் என்று சொல்லவில்லை. பார்ப்பனீயம் ஒழியட்டும்வர்ணாஸ்ரம தர்மம் ஒழியட்டும் என்று தான் கூறி வருகிறோம்.
சாதி மத பேதங்கள் ஒழியட்டும்எல்லோரும் ஒன்று படட்டும் என்றுதான் கூறிவருகிறோம். ஒன்றுபடாதவரை எங்களுக்குக் கிடைக்க வேண்டிய விகிதாசார பயனாவது எங்களுக்குக் கிடைக்கட்டும் என்று தான் நாங்கள் கூறி வருகிறோம்.
இப்பேதங்களால் இதுவரை வசதியும்சுகபோகமும் அனுபவித்து வந்த கூட்டத்திற்கு எங்களது இம்முயற்சி பெரிய சங்கடமாயிருப்பதால்எங்கள் முயற்சியில் மக்கள் ஈடுபடாமல் இருக்கநாங்கள் ஏதோ பிரிவினை செய்ய முயற்சிக்கிறோம் என்று அக்கூட்டத்தினர் கூச்சல்போட்டு வருகிறார்கள். பச்சைப் பார்ப்பனீய தந்திரம் இது. எனவே நீங்கள் இப்பொய்ப் பிரசாரத்தில் ஏமாந்து போய்விடாதீர்கள். ஏனப்பா நாங்கள் 'இழிசாதி மக்கள்என்றால் "கடவுள் அப்படி படைத்து விட்டார்அதற்கு நாங்களென்ன செய்யட்டும்" என்று சுலபமாய்க் கூறி விடுகிறார்கள் பார்ப்பனர்கள்.
கடவுளுக்கு வக்காலத்து வாங்கிப் பேச நீ யாரப்பா என்று தான் நாம் கேட்க விரும்புகிறோம். இந்த ஜாதி உயர்வு தாழ்வுக்கு கடவுள் காரணம் என்றால் அவரே வந்து சொல்லட்டுமேநான் தான் இப்படிப் படைத்தேன் என்று. அவர் சொல்லாததை நீ ஏனப்பா அவர் பேரால் சொல்கிறாய் என்றுதான் பார்ப்பானைக் கேட்கிறோம்.
அப்படிச் சொல்லுமா எந்தக் கடவுளாவதுசொன்னால் நீங்கள் தான் ஒப்புக் கொள்வீர்களா அந்தக் கடவுளைஅவனுக்குத் தான் தெரியும் அது பேசாத குழவிக்கல் என்று. அதனால் தானே கடவுளைச் சாட்சிக்கு அழைக்கப் பார்ப்பான் மறுத்து வருகிறான்.
நீங்கள்தான் குழவிக் கல்லுக்குக் கோயில் கட்டுவீர்கள். கும்பாபிஷேகம் செய்து வைப்பீர்கள். அதற்குப் பெண்டு பிள்ளையும் தேடி வைப்பீர்கள். பார்ப்பான் செய்ய மாட்டானேஇவ்வேலைகளை அவன் அடித்துக் கொள்ள மாட்டானே மொட்டை. அவன் தூக்கமாட்டானே காவடி. நீங்கள் தான் மடையர்கள்,மூடநம்பிக்கைக்காரர்கள்குழவிக் கல்லைச் சாமி என்று கட்டியழ.
எனவே தோழர்களே! தன்னைக் கடவுள் உயர்வாகப் படைத்து விட்டதென்றுபார்ப்பான் கூறிவருவதெல்லாம் வெறும் பித்தலாட்டம். அவனது கடவுள் சிருஷ்டியே வெறும் பித்தலாட்டம் நிறைந்தது. மற்ற நாட்டவரெல்லாம் ஒரே கடவுளைஅதுவும் உருவமில்லாத கடவுளைஅதுவும் ஒழுக்கமுள்ள கடவுளைச் சிருஷ்டித்துக் கொண்டிருக்கபார்ப்பான் மட்டும் பல கடவுள்களை,அதுவும் உருவமுள்ள கடவுள்களை ஒழுக்கத்திற்குக் கட்டுப்படாத கடவுள்களைச் சிருஷ்டித்துக் கொண்டிருக்கிறான் என்றால்,இதிலிருந்தே தெரியவில்லையா பர்ப்பானுடைய பித்தலாட்டம்.
தன்னை உயர்வென்று கூறிக் கொள்ள இவன் மட்டுமென்ன ஆகாயத்திலிருந்து குதித்து விட்டவனாஇவனும் நம்மைப் போல் ஒரு தாய் வயிற்றிலிருந்து பிறப்பவன் தானே! என்ன இவன் நம்மைக்காட்டிலும் ஒழுங்காக வாழ்வது?
ஜெயிலைப் பாருங்கள். அதிலும் இவர்கள் தம் விகிதத்திற்கு மேல் அதிகமாகத்தானே இருக்கிறார்கள். நம்மவர்களாவது கஞ்சிக்கில்லாமல் ஏதோ கத்திரிக்காய்பூசணிக்காய் திருடிவிட்டு வந்திருப்பார்கள். ரூ.100, ரூ.200 திருடியவர்களாக இருப்பார்கள். இவர்களோ 1000, 10000- திருடியவர்களாகபோர்ஜரி செய்தவர்களாகபெரிய பாங்கிகளையே மோசம் செய்தவர்களாக,லட்சக்கணக்கில் லஞ்சம் வாங்கியவர்களாக இருப்பார்களே.
ஆகவே எக்காரணம் பற்றியும் பார்ப்பனர்கள் தம்மை உயர்வென்று கூறிக் கொள்ளவோநம்மை இழிவானவர்கள் என்று கூறவோ உரிமையுடையவர்களல்ல. கடவுள் பேராலோமதத்தின் பேராலோ நம்மை இழிவுபடுத்த உரிமையுடையவர்களும் அல்லர். எனவே பார்ப்பனீயத்தின் பிடியிலிருந்து விடுபடுங்கள். பகுத்தறிவு வழிநட முன்வாருங்கள்."
திருவண்ணாமலையில் தந்தை பெரியார் அவர்கள். 16.11.1949-அன்று ஆற்றிய சொற்பொழிவு. ('விடுதலை' 18.11.1949)

 "இந்தியாவின் சிந்தனை வரலாற்றில் ஒரு விடுபட்ட தொடர்ச்சிதான் பெரியார்''



ஆசீவகம் ஒரு கூர்மையான வைதிக எதிர்ப்புச் சமயம் என்று சொல்லுகிறீர்கள். ஆனால், இன்றைக்கு வைதிகத்திற்கு மாற்றாக - இந்து மதத்திற்கு மாற்றாக, ஒரு மாற்று வாழ்வியல் நெறியாக பவுத்தம் முன்வைக்கப்படுகிறது. இச்சூழலில், ஆசீவகத்தை முன்னிறுத்துவதால் - பவுத்தமா? ஆசீவகமா? என்ற குழப்பம் ஏற்படாதா?

ஏற்படலாம் அல்லது ஏற்படாமலும் போகலாம். ஒரு காலத்தில் பவுத்தமும் ஆசீவகமும் இணைந்தே இருந்தன. அப்போது பவுத்தத்தைக் காட்டிலும் ஆசீவகம் செல்வாக்குப் பெற்றிருந்தது. அசோக மன்னர் ஆசீவகத் துறவிகளுக்கு கற்படுக்கைகளை வெட்டிக் கொடுக்கிறார். அதேபோல பாண்டிய மன்னர் பவுத்த சின்னங்களுக்கு அசோகர் காலத்தில் தமிழகத்தில் மரியாதை தந்தார். அந்த அளவிற்கு இரண்டு பேருமே அவர்கள் ஆசீவகத்தையும் இவர்கள் பவுத்த மதத்தையும் ஆதரித்து இருக்கிறார்கள். ஆசீவகத்தை தழுவிய இவர்கள், அதாவது தமிழ் மன்னர்கள் பவுத்தத்தை ஆதரித்து இருக்கிறார்கள். பவுத்தத்தை தழுவிய மவுரிய மன்னர்கள் ஆசீவகத்தை ஆதரித்து இருக்கிறார்கள். நட்புடனேயே இருந்திருக்கிறார்கள். ஒரு காலத்தில் ஜைன இலக்கியங்களில் ஆசீவகத் துறவிகளை பவுத்தர்களின் ஒரு பிரிவினராகச் சொல்லக்கூடிய அளவிற்கு நட்பு இரு பிரிவினரிடையேயும் இருந்திருக்கிறது. வைதிக எதிர்ப்பில் சாதி ஒழிப்பில் பவுத்தமும் ஆசீவகமும் இணைந்து நின்றன. எனினும், ஆசீவகம் தமிழ் மரபையும் தமிழ் மண்ணையும் சார்ந்த தமிழ் சமயம் என்பதே அதன் பெருமையும் சிறப்புமாகும். அதனால் தமிழகச் சூழலுக்கும் தமிழ் மரபிற்கும் ஏற்றதாக ஆசீவகமே உள்ளது. பவுத்தம் பிற மாநிலங்களுக்குப் பொருந்தலாம்.

இன்றைய காலகட்டத்தில் ஆசீவகம் என்பது மக்களை விட்டு மறைந்து போன கருத்தியலாகி விட்டது. இந்நிலையில், மீண்டும் ஆசீவகத்தை மக்களிடம் கொண்டுபோய் சேர்க்க முடியும் என்று நீங்கள் நினைக்கிறீர்களா? அது தேவை என்று கருதுகிறீர்களா?

ஆம். தேவைதான். தமிழர்களை ஒன்றுபடுத்த ஓர் அடையாளம் தேவை. பெரியார் ஒரு தலையாய அடையாளம். பெரியாரை ஒரு கடவுள் மறுப்பாளராகவே பார்க்கும் மக்கள், "கடவுள் இல்லை என்கிறாரே'' என்று நெருங்க மறுக்கிறார்கள். அந்த அடையாளத்தையும் கடந்த அடையாளமாக, தமிழ் மரபின் முழுமையான பாதுகாப்புப் பேழையாக நான் அய்யனாரைப் பார்க்கிறேன். அய்யனார் கோயில்கள் அறிவு வழிபாட்டின் குறியீடாகவும், வீர வழிபாட்டின் குறியீடாகவும் திகழ்கின்றன. இன்றைய காலத்தில் தமிழர்களுக்கு அறிவும் வீரமும் இரண்டுமே தேவையாக இருக்கின்றன. ஆசீவகர்கள் முழுமையான கடவுள் மறுப்பாளர்கள், வைதிக எதிர்ப்பாளர்கள், வர்ண சாதி மறுப்பாளர்கள். இதைவிட நமக்கு என்ன வேண்டும் நமது அடையாளத்திற்கு?

ஆனால், அவரையே நாம் கடவுளாக உருவகப்படுத்தி வழிபடுவது மீண்டும் நம்மை வழிபாட்டு முறைக்கே கொண்டு போவதாகாதா?

கொண்டு போகாது. கடவுள் என்று நீங்கள் ஏன் நினைக்கிறீர்கள்? புத்தரை கடவுளாக வழிபட்டாலும் அவரை ஓர் அறிவின் குறியீடாக, புரட்சியின் குறியீடாகத்தான் நாம் பார்க்கிறோம். அய்யனார் வரலாற்று நாயகன் என்று சொல்லும்போது, வரலாற்று நாயகன் என்னும் பெருமைதான் மிஞ்சுமே தவிர, கடவுள் என்பது இரண்டாம் இடத்துக்குப் போய்விடும் இல்லையா? கடவுள் என்ற தமிழ்ச் சொல் தொடக்கத்தில் முனிவர்களை, துறவிகளை மட்டுமே குறிக்கத்தானே பயன்பட்டது. இந்த வரலாற்று உண்மையையும் நாம் கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும்.

பெரியாரை கடவுள் மறுப்பாளர் என்ற குறுகிய வட்டத்துக்குள் சுருக்குகிறார்கள் என்று சொல்லுகிறீர்கள். அப்படிப் பார்த்தால், அய்யனாரும் கடவுள் மறுப்பாளர் தானே... அவரை மட்டும் எப்படி ஏற்றுக் கொள்வார்கள்?

பெரியாரை குறுகிய வட்டத்தில் சுருக்குகிறார்கள் என்று நான் சொல்லவில்லை. கடவுள் நம்பிக்கையாளர்கள் அவர் கடவுளில் கை வைக்கிறாரே என்று அஞ்சுகிறார்கள் என்றேன். அய்யனார் கடவுள் மறுப்பாளராக இருந்து வெற்றி பெற்றிருக்கிறார் அல்லவா? தமிழனை ஒன்றுபடுத்தக்கூடிய ஒரு மிகப் பெரிய ஆற்றல் படைத்த சக்தியாக அய்யனார் இருந்திருக்கிறார். கரிகாலச் சோழன் இமயத்தை வெல்ல முனைந்து படை எடுப்பை மேற்கொண்டபோது, அம்மன்னன் காஞ்சிபுரத்தில் இருந்த அய்யனார் ஆகிய மாசாத்தனின் செண்டை அதாவது சாட்டையை வாங்கிச் சென்றார் என்று இலக்கிய மரபில் அவ்வுண்மையைக் காணலாம். செண்டு என்பது ஒரு போர்க் கருவியாகும்.

ஒரு மாற்றாக அய்யனாரை நீங்கள் நிறுத்த முடியும் என்று நம்புகிறீர்களா?

நிச்சயமாக எனக்கு அந்த நம்பிக்கை இருக்கிறது. அய்யனார் உருவாக்கிய அந்த அறிவுப் புரட்சியினால்தான் பெரியாரின் கோட்பாடுகள் இங்கு வெற்றி பெற முடிந்தன. நிலைபெற முடிந்தது. மனிதனுடைய உயிரணுக்களைச் சோதனை செய்யும்போது, 50 ஆயிரம் 60 ஆயிரம் ஆண்டுகளாக மர பணுக்கள் அப்படியே இருக்கின்றன என்று சொல்கிறார்கள். அந்த அடையாளம் இருக்கும்போது 2500 ஆண்டிற்கு முந்திய அறிவிற்கான அடையாளம் நம்மிடையே இல்லாமல் போய்விடுமா? அவருடைய வீச்சு இல்லாமல் போய்விடுமா? நமது சமூகம் அறிவு வழிப்பட்ட சமூகமாக இருந்ததால்தான், பெரியாரின் கருத்துகளை எளிதாக உள்வாங்கிக் கொண்டிருக்கிறது. பெரியார் வெற்றி பெற முடிந்ததற்கு அதுதான் காரணம்.

ஆசீவகத்தின் தடயங்கள் அடையாளங்கள் சிதைக்கப்பட்டும் அதனுடைய கருத்துகள் இருட்டடிக்கப்பட்டும் இந்தியாவில் அதனுடைய அடையாளங்களே வெளியில் தெரியாமல் போய்விட்டன. இந்திய சமய வரலாற்றில் ஆராய்ச்சி செய்தவர்களில் ஏ.எல். பாஷம் தான் முழுமையாக ஆராய்ந்தவர். ஜெயிஸ்வால் முதலான அறிஞர்கள் எல்லாம் ஆசீவகத்தைப் பற்றிக் கட்டுரைகள் எழுதினார்கள். ஆனாலும்கூட இதனுடைய முழுமையும் கண்டுணர வேண்டும் என்று வந்தவர் ஏ.எல். பாஷம் என்ற ஆஸ்திரேலியாகாரர்தான். அவரே என்ன சொல்கிறார் என்றால், இந்த ஆசீவகத்தின் வேர்கள் எல்லாம் தமிழ் நாட்டில் இருக்கின்றன என்று சொல்கிறார். அவருடைய அடிப்படையில் நாம் பார்க்கும்போதுதான் அய்யனார் எந்த ஊர்க்காரர் என்பது முதல்கொண்டு பலவற்றையும் கண்டுபிடித்தோம்.

சிறையிலிருந்தபோதுதான் அதைக் கண்டுபிடிக்க முடிந்தது. அந்த இடம் இப்போது திருப்பட்டூர் என்று சொல்லக்கூடிய மண்ணச்ச நல்லூருக்கு வடக்கே உள்ள ஊர். அவர் தவம் பண்ணிய இடம் திருவெள்ளறை என்று சொல்லக்கூடிய வைணவக் கோயில் உள்ள ஊர். அய்யனாருடன்கூட இணைந்து ஆசீவகத்தை உருவாக்கிய பூர்ணகாயபருக்கும் அய்யனாருக்கும் சிலையெடுத்திருக்கிறார்கள். அந்த கோயிலை இப்போது திருமால் கோயிலாக மாற்றி, அந்த ஆசீவக அடையாளத்தை எல்லாம் அழித்திருக்கிறார்கள். அப்படி பல கோயில்கள் தமிழ் நாட்டில் உள்ள பெருந்தெய்வ வழிபாட்டிற்குரிய கோயில்களாக இருக்கக்கூடிய பெரிய சிவன் கோயில்கள், திருமால் கோயில்கள் எல்லாமே 90 விழுக்காடு அய்யனார் கோயில்களாக இருந்தவைதாம்.

இன்றைக்கு இருக்கிற அரசியல் சூழலில் பெரியாரியல் ஒரு பக்கம், தமிழ்த் தேசியம் அதனுடைய எழுச்சி, தலித் இயக்கங்களின் எழுச்சி இவை குறித்து உங்கள் பார்வை என்ன?

பெரியாருடைய தேவை எல்லா காலத்துக்கும் உரியது. அது காலத்தைக் கடந்த ஒன்று. ஏனென்றால், பெரியாரியம் என்பது பன்முகத் தன்மை கொண்டது. சாதி ஒழிப்பு மட்டும்தான் பெரியாரியம் என்பது அல்ல; அல்லது இடஒதுக்கீடு மட்டும்தான் பெரியாரியம் என்பது அல்ல. பெண் விடுதலை மட்டும்தான் என்பது அல்ல. இந்தியாவின் சிந்தனை வரலாற்றில் ஒரு விடுபட்ட தொடர்ச்சியாகத்தான் பெரியார் தெரிகிறார். நான் முன்பு சொன்னதுபோல் அறிவுக்கான தடைக்கும் அறிவுக்கான விடுதலைக்குமான அந்தப் போர், இடைக்காலத்தில் சுவடுகள் இல்லாமல் போய் இருந்தது. ஏனென்றால், அறிவுக்கான அந்த விடுதலையை முன்னெடுத்துச் செல்பவர்களே இல்லாமல் போய்விட்டார்கள். அப்படி இல்லாமல் போனதால் அறிவுக்கான தடை மட்டுமே ஆட்சி செய்து வந்துள்ளது. அறிவுக்கான, விடுதலைக்கான தேவையையே உணர முடியாதபடி ஒரு சூழல் இருந்தபோது, அந்தப் போராட்டத்தை மீண்டும் தொடங்கி வெற்றிப் பாதையை நோக்கி இட்டுச் சென்ற பெருமை பெரியாருக்கு உண்டு. அதனால் ஒரு வரலாற்றின் நெடிய பாரம்பரியத்தில் விடுபட்ட சங்கிலித் தொடரின் இணைப்பாகப் பெரியார் திகழ்கிறார். அந்தத் தேவை இன்னும் பல நூற்றாண்டுகளுக்குத் தொடரும். அதனால் பெரியாரியம் என்பது காலம் கடந்து தேவைப்படக்கூடிய ஒன்று.

20 ஆம் நூற்றாண்டு தேசங்களின் விடுதலையைத் தந்த நூற்றாண்டு. 21 ஆம் நூற்றாண்டோ தேசிய இனங்களின் விடுதலைக்கான நூற்றாண்டாகும். தற்போது பெருஞ்சிக்கலாக உருவாகி வரும் நதி நீர்ச் சிக்கலில் தேசிய இனங்களின் விடுதலைக்கான விதைகள் உள்ளன. இதனைக் காலம் தீர்மானிக்கும்.

அதேபோல தலித் என்கிற கருதுகோளையே நான் ஏற்றுக் கொள்ளாதவன். ஏனென்றால், தலித் என்ற சொல், ஒடுக்கப்பட்டோர் என்று பொருள் தரக்கூடிய ஒரு சொல். அறிவுக்கான தடையில்தான் தீண்டாமை உருவாகின்றது என்று நாம் பார்த்த பிறகு, இன்றைக்கு தீண்டப்படாத மக்கள் எல்லாம் ஒரு காலத்தில் தமிழ் இனத்தினுடைய அறிவுத் துறையின் குறியீடாக இருந்தவர்கள் அல்லவா?

இப்போது உலக இசைக்கு அடித்தளமாக இருப்பது தமிழருடைய இசை. அந்த இசையை வளர்த்தவர்கள் பாணர்கள். அந்தப் பாணர்கள் இன்று தீண்டத்தகாத மக்கள். உலக அறிவியலுக்கெல்லாம் தாயாக விளங்கிய வானியலை வளர்த்தவர்கள் கணியர்கள். அந்த கணியர்கள் இன்றைக்குத் தீண்டத்தகாத மக்கள். உலகச் சிந்தனைகளில் வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்து வான்புகழ் கொண்டது தமிழ் நாடு என்று வியந்து பாராட்டக்கூடிய அளவிற்கு வள்ளுவனைப் பெற்ற தமிழகத்தில் அந்த வள்ளுவன் பிறந்த சாதி, இன்றைக்கு தாழ்த்தப்பட்ட சாதி! அறிவுக்கான தடையில் யாரெல்லாம் உள்ளானார்களோ, அவர்கள் எல்லாம் தீண்டத்தகாத சாதியினராக இருக்கிறார்கள். மருத்துவர்களைத் தீண்டத்தகாதவர்களாக மனுதர்மமே குறிப்பிடுகிறது. அவர்கள் வீட்டில் சாப்பிடக் கூடாது என்று தடை விதிக்கிறது. அந்தச் சாப்பாடு அவ்வளவு இழிவானது என்று எடுத்துக் காட்டுகின்றது. அப்படி அறிவுக்கான தடைகளை விதித்து அதைக் கட்டாயப்படுத்தி அதைப் பாதுகாத்த காரணத்தினாலேதான் இந்த மக்கள் தீண்டத்தகாதவர்களாக ஆனார்கள். இந்தத் தமிழினத்தின் ஒட்டுமொத்த அறிவுத் துறைகளையும் வளர்த்து ஆளாக்கிய அந்த மக்களின் அடையாளங்களை மீட்காமல், அவர்களை தலித் என்று சொல்வது, இந்த மண்ணிலிருந்தே அப்புறப்படுத்துவது போல ஆகிறது.

பறையர் என்ற சொல் மறையர் என்ற சொல்லின் திரிந்த வடிவமாக இருக்கிறது. கவுண்டர் இனத்தைச் சார்ந்தவர்களுக்கு ‘அரசன் பறையர்' என்ற பட்டத்தைக் கொடுத்த வரலாறு இருந்திருக்கிறது. ஒரு கல்வெட்டில் கிடைத்திருக்கக் கூடிய செய்தி இது. அந்த கல்வெட்டில் வந்த செய்தியை கல்வெட்டு அறிஞர் புலவர் ராசு அவர்கள் விளக்கியிருக்கிறார்கள். வேளாள கவுண்ட இனத்தைச் சார்ந்த ஒருவருக்கு பறையர் என்ற பட்டம் கொடுக்கப்பட்டிருக்கிறது. அப்போது அரசருடைய ஆணைகளை யானை மீது ஏறி முரசு அறிவித்து, பறையறிவித்து மக்களுக்குச் சொன்ன ஒரு பணி பறையர்களுக்கு உரியது. அந்தச் செயலை குறிக்கக்கூடிய ஒரு சொல்லை பறையர்களைவிட உயர்ந்தவர்கள் என்று கருதக்கூடிய ஒரு சாதியினருக்குப் பட்டமாக கொடுக்கிறார்கள் என்றால், அந்தப் பறையர் சாதியை இழிந்த சாதி என்று நாம் எப்படிச் சொல்ல முடியும்?

அதைப்போல, கோவில்களில் உள்ள இசைக் கலைஞர்கள் அதாவது இசைக் குழுவிற்குத் தலைமை தாங்கக்கூடிய அந்தத் தலைவனுக்கு ‘தலைப்பறை' என்ற பட்டத்தைக் கொடுத்தார்கள். நடனப் பெண்ணாகிய மாதவிக்கு எப்படித் தலைக்கோல் அரிவை என்ற பட்டத்தைக் கொடுத்தார்களோ, அப்படி பிற்காலச் சோழர் காலத்தில் ராஜராஜன் காலத்தில் கோவில்களில் இருந்த இசைக் கலைஞர்களுக்கு தலைமை தாங்கக் கூடியவர்களுக்கு தலைப்பறை என்ற பட்டத்தைக் கொடுத்திருக்கிறார்கள். இதனை கல்வெட்டறிஞர் ரா. கலைக்கோவன் சான்றுகளோடு கூறியுள்ளார். அப்போது பறையை இசைத்த அந்த இசைக்கலைஞன் தான் மற்ற இசைக் கலைஞர்களைக் காட்டிலும் சிறப்பாக மதிக்கப்பட்டிருக்கிறான். அதனால்தான் ‘தலைப்பறை' என்ற பட்டம் விருதாகக் கொடுக்கப்பட்டிருக்கிறது. தலைப்பறை என்ற பட்டத்தைப் பெற்ற மக்கள் எப்படித் தீண்டத்தகாத மக்களாக இருந்திருக்க முடியும்?

இப்படி இந்த வரலாற்றைக் கொண்டு வந்து உன்னுடைய வரலாறு இப்படிச் சிறப்பானது, இப்படி உயர்வானது என்று சொல்வதற்கு மாறாக, இந்த வரலாற்றையெல்லாம் இருட்டடிப்பு செய்துவிட்டு, மூலையில் ஒதுக்கிப் போட்டுவிட்டு, நீ தலித் என்று சொன்னால், அந்த தலித் என்ற சொல்லில் இவனுடைய வரலாறு இருக்கிறதா? இவனுடைய பண்பாடு இருக்கிறதா? இவனுடைய அறிவியல் பங்களிப்பு இருக்கிறதா? என்ன பங்களிப்பு இருக்கிறது? தலித் என்ற கருதுகோளை நாம் எப்படி ஏற்றுக் கொள்வது? எனவேதான் தலித் என்ற கருதுகோளில் எனக்கு உடன்பாடு இல்லை.

அம்பேத்கர் தீண்டாமையை ஒழிக்க வேண்டும் என்றால், பவுத்தத்தைப் பின்பற்றுவதே ஒரே மாற்று வழி என்று சொல்கிறார். அது பற்றி உங்கள் கருத்து என்ன?

அண்ணல் அம்பேத்கரின் காலத்தில் பவுத்தம் விரிவாக ஆராயப்பட்டு, அதன் முழு பரிமாணமும் வெளிப்பட்டிருந்தது. ஆசீவகம் பற்றிய ஆய்வு அப்போது தொடக்க நிலையில்தான் இருந்தது. ஆசீவகம் என்ற ஒரு மதமோ அதன் கோட்பாடோ வெளியே தெரியாத நிலையில் பவுத்தமே மாற்று வழியாக அறியப்பட்டிருந்தது. தந்தை பெரியார்கூட ‘புத்தியுள்ளவனே புத்தன்' என்றார். ஆனால், தற்போது ஆசீவகம் பற்றியும் அதன் அறிவு மரபு பற்றியும் தேவையான தகவல்கள் கிடைத்துள்ளன. அய்யனார் வழிபாடும் இன்னும் உயிர்த் துடிப்புடன் உள்ளது. வழிபாட்டை கோட்பாடுகளுடன் இணைத்துவிட்டால் ஆசீவகத்தை உயிர்ப்பிப்பது எளிதாகும். ஆசீவகம் வீழ்ந்துபட்டதற்கான காரணமும் இதன் விட்டுக் கொடுக்காத சாதி மறுப்பு தீண்டாமை ஒழிப்பு வைதிக எதிர்ப்பு என்பதால் அதனை இந்து வைதிக நெறிகளுக்கு மாற்றாக நாம் கொள்வதில் தவறில்லை. ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்' என்ற கோட்பாடே அவர்களுக்கு உரியதுதானே!

நாமம் போட்டவன் இழிவானவன்; பட்டை போட்டவன் அசல் மடையன்


நாங்கள் எதற்காக இந்த முயற்சியில் இறங்கியுள்ளோம், பிரச்சாரம் செய்து வருகின்றோம் என்பதை நீங்கள் உணர வேண்டும். இன்றைக்கு சமுதாயத் துறையில் 100க்கு 97 மக்களாக உள்ள நாம் 100க்கு மூன்று பேராக உள்ள பார்ப்பனர்களுக்கு தாசி மக்களாக, அடிமைகளாக அவமானத்தைச் சுமந்து கொண்டு, சூடு சொரணையற்ற மக்களாக உள்ளோம். இன்றைக்கு நாம் நமக்கு அந்நியமான ஆட்சியில் அடிமையாக இருக்கிறோம். நமக்கு அந்நியமான மொழி, கலாச்சாரம், நாகரிகம், உணவு, உடைப் பழக்கம் முதலியவற்றைக் கொண்டவர்களின் ஆட்சியின் கீழ் இருக்கிறோம். இந்த அவமானமும், கொடுமைகளும் போக்கப்பட வேண்டும் என்று நான் தான் பாடுபட்டுக் கொண்டு வருகிறேன்.

Periyar
நான் கடுமையாகப் பேசுவதாகக் கூறுகிறார்கள். நான் கடுமையாகப் பேசாமல் வேறு என்ன செய்வது? எப்படியாவது அவனுக்கு ரோஷ உணர்ச்சி, மான உணர்ச்சியைத் தூண்டிவிட்டு திருத்த வேண்டும் என்பதுதான் எனது தொண்டுமுறை. பட்டைப் போட்டவனை அசல் மடையன் என்று சொல்கிறேன்; நாமம் போட்டவனைஎல்லாம் பார்ப்பனனின் இழிமக்கள் என்று கூறுகிறேன். ஆதாரம் இல்லாமலா கூறுகிறேன்? இந்த நாட்டு ராஜாக்களின் பெண்டாட்டிகள் எல்லாம் பார்ப்பானிடம் படுத்துப் புரண்டு இருக்கிறார்கள். அப்படிப் போவது புண்ணியமாகக் கருதப்பட்டு இருந்தது.

கேரளத்திலே நம்பூதிரிக்குப் பிறந்தவன் என்று சொல்லிக் கொள்வதிலே ஒவ்வொருவரும் பெருமைப்படுகிறானே! நாயருக்குப் பிறந்ததாகக் கூறினால் அவமானம்; நம்பூதிரிக்குப் பிறந்தவர் என்று கூறினால் வெகுமானம். அந்த நிலைமை அங்கு இருக்கிறதே! எப்படி எல்லாம் நம் நிலை இருக்கிறது என்பதை சிந்தித்துப் பாருங்கள். நான் கடவுளை கற்பித்தவனை முட்டாள் என்று சொல்லுகிறேன் என்று ஆத்திரப்படுகிறார்கள். கடவுள் இல்லை என்று சொன்னவர்களை உங்கள் சாஸ்திரத்தில் எவ்வளவு வசைபாடி இருக்கிறீர்கள். கடவுள் இல்லை என்று சொல்லுகிறவனின் பெண்டாட்டியை கற்பழிக்க வேண்டும் என்று எழுதி இருக்கிறானே வசைபாடியது மட்டுமல்ல கொலையே செய்து இருக்கிறார்களே!

இன்றைய அரசமைப்புச் சட்டத்திலிருந்து உங்கள் இந்து மத ஆதாரங்கள் அனைத்திலும் நூற்றுக்கு மூன்று பேராக உள்ள பார்ப்பான், முஸ்லிம், கிறித்துவன் இவர்களைத் தவிர்த்து பாக்கி அத்தனைப் பேரும் சூத்திரர்கள் தானே! வெட்கப்பட வேண்டாமா? பார்ப்பான் ‘சர்மா' என்ற பட்டம் வைத்துக் கொள்ளலாம். சூத்திரன் மட்டும் ‘தாசன்' என்ற பட்டத்திற்கே அருகதை உடையவன், தாசன் என்றால் என்ன அர்த்தம்? ‘தாசிபுத்திரன்' என்றல்லவா அர்த்தம்? யாருக்கு ரோஷம் வருகிறது? யாருக்கு வெட்கம் வருகிறது? சொல்லுகிற எங்கள் மீது முட்டாள்தனமாக உங்களுக்குக் கோபம் வருகிறதே தவிர, உண்மையை உணர்ந்து பார்க்கவில்லையே?

சட்டத்திலேயே கூறி விட்டானய்யா, பார்ப்பானைத் தவிர அத்தனை பேரும் தாசிப்புத்திரன் என்று. சட்டத்திலே தீண்டாமை ஒழிக்கப்பட்டதாக வரி இருக்கிறது. ஆனால், அதற்கடுத்த வரியிலே என்ன கூறப்பட்டு இருக்கிறது? தீண்டாமை ஒழிக்கப்படுகிறது. ஆனால், மத சம்பந்தப்பட்ட காரியங்களில் மட்டும் தீண்டாமை அனுசரிக்கப்படும் என்றல்லவா எழுதி வைத்து இருக்கிறான். இது எந்த விதத்தில் நியாயம்? வெறுங்கல்லைத் தொட்டுப் பார்ப்பதற்கு ஒரு சாதிக்குதான் உரிமை உண்டென்றால், மற்றவன் கதி என்ன?

இதை எண்ணிப் பார்த்து மனம் புழுங்கிப் போராட்டம் நடத்தத் திட்டமிட்டேன். மன்னார்குடி கோயிலைத் தேர்ந்தெடுத்து கர்ப்பக் கிரகத்திற்குள் நுழைவது என்று ஏற்பாடு செய்தேன். ஏராளமான தோழர்கள் போராட்டத்தில் கலந்து கொள்ள கையொப்பம் போட்டுக் கொடுத்தார்கள். நம் முதல்வர் கலைஞர் பார்த்தார். அய்யா எதற்காக இந்தப் போராட்டத்தைத் தொடங்க வேண்டும்? நானே அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராக சட்டம் செய்கிறேன் என்று புது சட்டத்தையே உருவாக்கிவிட்டார்.

பார்த்தான் பார்ப்பான், சுப்ரீம் கோர்ட்டுக்கு படை எடுத்தான். கலைஞர் சட்டத்தைச் செல்லாது என்று தூக்கிப் போட்டுவிட்டான். நம் நிலை என்ன? பழைய கருப்பன் கருப்பனே என்ற தன்மைதான். நம்நிலைமை இப்படித்தான் நீடிக்க வேண்டுமா? நம் பிறவி இழிவுக்குப் பரிகாரமே கிடையாதா? பார்லிமெண்டைப் பொறுத்தவரை, எதிரிகளின் பலம்தான் அதிகம். அதில் பிரவேசித்து நாம் ஒன்றும் செய்ய முடியாது. எனவே, இந்த ஆட்சியில் இருந்து கொண்டு நம் இழிவை ஒழிக்க முடியாது. பிரிந்துதான் ஆகவேண்டும். பிரிவினை என்று கேட்டால் ஏழாண்டு தண்டனையாம், அனுபவிப்போமே!

சட்டத்தைக் கொளுத்திவிட்டு மூன்று ஆண்டு சிறை அனுபவிக்கவில்லையா? வெளிநாட்டுக்காரன் பார்த்தால் காறித் துப்ப மாட்டானா? நூற்றுக்கு மூன்று பேராக உள்ள கூட்டம் 97 பேர்களை ‘தாசிபுத்திரன்' என்று சொல்கிற அரசியல் சட்டம் இந்தியாவில் இன்னும் இருக்கிறதே என்று வெளிநாட்டுக்காரன் சிரிக்க மாட்டானா?

திருச்சியில் தமிழர் சமுதாய இழிவு ஒழிப்புப் போராட்ட விளக்கக் கூட்டத்தில் ஆற்றிய உரை
'விடுதலை' 6.12.1973

உயிர்காக்கும் நமது பாரம்பரிய உணவுகள் இரசம் சாதம்


தென்னிந்திய உணவுப் பட்டியலில் (குறிப்பாக தமிழகத்தில்) இரசம் ஓர் முக்கிய இடத்தைப் பெற்றுள்ளது. மதிய உணவு விருந்துகளில் இதன் முக்கியத்துவம் அதிகம். தென்னிந்தியாவில் இரசம் இல்லா மதிய உணவு இல்லை என்றே கூறலாம்.
இதன் செய்முறை பலவகைகளில் செய்யப் படுகிறது. உணவு சமைப்பது என்பது ஒரு கலை. உணவுப் பொருட்களின் சத்துக்கள் பாழாகி விடாமல் கெடுதல் தரும் அம்சங்களை நீக்கி நன்மை தரும் அம்சங்களை மேம்படுத்திடும் வகையிலும் சமையல் செய்யப்படவேண்டும். நாவுச்சுவையை மட்டுமே கருத்தில் கொண்டால் உணவுகளின் நன்மைதரும் தன்மைகளில் பலவற்றை இழக்க நேரிடுகிறது. இவ்வகையில் இரசம் பல்வேறு பக்குவங்களில் தயாரிக்கப் படுகிறது. எனினும் அவற்றில் ஒரு சிறப்பான முறையைப் பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
பழைய புளி - ஒரு எலுமிச்சையளவு சீரகம்மிளகு தலா அரை தேக்கரண்டிபூண்டு 5 பல்பச்சை மிளகாய் இரண்டுகருவேப்பிலை,பெருங்காயம்கொத்துமல்லி இலைமஞ்சள் தூள் அரை தேக்கரண்டி, (கரும்பு) வெல்லம் சிறிய துண்டுதக்காளி இரண்டு (நாட்டுத்தக்காளி சிறப்பானது)உப்பு தேவையான அளவுமுளைக்க வைத்துக் காயவைத்து தூள் செய்யப்பட்ட கொள்ளு தானியப் பொடி11/2 தேக்கரண்டி.
செய்முறை :
அரிசி கழுவிய நீர் சுமார் 500 மில்லியில் புளியை முப்பது நிமிடங்கள் ஊறவைத்து நன்றாக கரைத்து வடிகட்டி எடுத்த புளிக்கரைசலுடன் சீரகம்மிளகு மற்றும் பச்சை மிளகாயை ஒன்றிரண்டாக அரைத்துபூண்டுட பல்லை ஒன்றிரண்டாக நசுக்கி,தக்காளியை சிறு துண்டுகளாக அரிந்து (அல்லது பிசைந்து) விதையை நீக்கி சேர்த்து வெல்லம்மஞ்சள் பொடிஉப்பு,கொள்ளுப்பொடி அனைத்தையும் போட்டுக் கலக்கியபின் வாணலியில் ஒரு தேக்கரண்டி எண்ணெயில் கடுகுஉளுந்து,பெருங்காயம் சேர்த்து தாளித்து புளிக் கரைசலை ஊற்றிக் கொதிக்கவிடாமல் வெள்ளை நுரை தோன்றியதும் இரசத்தை அடுப்பிலிருந்து இறக்கி சல்லடையில் வடிகட்டியபிறகு கொத்துமல்லி இலை தண்டு வேருடன் நீரில் அலசி இரசத்தில் போடவும். கறிவேப்பிலையை ஈர்க்குடன் அடுப்புத்தணலில் (அல்லது கேஸ் தணலில்) லேசாக வாட்டி இரசத்தில் போட்டு முப்பது நிமிடங்கள் மூடி வைத்தபின் உட்கொள்ளலாம். துவரம்பருப்பு வேகவைத்த நீர் சிறிது சேர்த்தால் இரசத்தின் சுவை அதிகப்படுவதுடன் குடல்கள் பலமடைந்திடவும் உதவுகிறது. இரசத்தைக் கொதிக்கவிடுவதனால் அதன் சுவை குறைந்து விடுகிறது. இந்த முறையில் தயாரிக்கப்படும் இரசத்தில் சேர்க்கப்படும் சிறந்த மருத்துவ குணங்களைத் தன்னகத்தே கொண்ட உணவுப் பொருட்களின் நன்மை தரும் அம்சங்கள் மேம்படுத்தப்படுகின்றன. இது எப்படி எனில்:
சீரகம் :
உடலின் உள் உறுப்புக்களை சீர்படுத்தும் தன்மையை தன்னகத்தே கொண்டது. உடல் உறுப்புக்களின் சீர்கேடுகளைகுறைபாடுகளை சீர்ப்படுத்துகிறது என்னும் காரணமாகவே சீர்-அகம் (அகம் என்றால் உடலின் உள்ளே எனப் பொருள்படும்) என நம் முன்னோர் காரணப் பெயரிட்டார்கள். செரிமான செயல்கள் துரிதமாகவும் முறையாகவும் நடைபெற உதவும் செரிமானச் சாறுகளை சீரகம் இதமாகத் தூண்டுகிறது. உடலின் பித்த அதிகரிப்பை இயல்புநிலைக்கு மாற்றுகிறது.
மிளகு :
மலையில் விளையும் மருந்துப் பொருளான மிளகு சில வகை இயற்கை வேதிப் பொருட்களையும் சிறு அளவில் கொழுப்பும் கொண்ட மருத்துவ உணவுப் பொருளாகவும் மற்றும் சுவையூட்டியாகவும் பயன்படுகிறது. உணவில் நாமறியாமல் சேர்ந்துவிடும் நச்சுக்களை முறித்து உடலை விட்டு வெளியேற்றும் மருந்தாகவும் உதவுகிறது. (பத்து மிளகு கையிலிருந்தால் பகைவன் வீட்டிலும் விருந்துண்ணலாம் என்னும் மருத்துவ பழமொழி உள்ளது) செரிமானச் செயல்பாட்டை இதமாகத் தூண்டுகிறது. குடலில் தேங்கும் அழுக்குகளை நீக்குகிறது.
பூண்டு :
உடலுக்குப் பல நன்மைகளைத் தரும் இயற்கை அமிலங்களைக் கொண்டது. இரைப்பை மற்றும் குடல்களில் தேங்கும் வாயுக்களைக் கலைத்து வெளிப்படுத்துகிறது. இரத்த நாளங் களில் உறைந்த நிலையில் தேங்கிக் கிடக்கும் கெடுதல் தரும் கொழுப்புக்களைக் கரைத்து உடலைவிட்டு வெளிப்படுத்துகிறது. பெருங்குடலில் தேங்கிக் கிடக்கும் உணவுகளின் காரண மாக பெருங்குடலில் புளிப்புத்தன்மை ஏற்படுகிறது என்பதால் அவ்விடத்தில் புழுக்கள் உற்பத்தியா வதைப் பூண்டு தடுத்துவிடுகிறது. இரத்த ஓட்டத் தில் தடையை ஏற்படுத்தும் சிறு இரத்தக்கட்டிகள் மற்றும் கெடுதல் தரும் கொழுப்புக் கட்டிகளையும் படிப்படியாகக் கரைத்து விடுகிறது.
பச்சை மிளகாய் :
மனித உடலில் அடிக்கடி சளி ஏற்படாம லிருக்கவும்சருமத்தில் நோய் தாக்காமல் இருக்கவும் மூட்டுக்களில் நீர் தேங்கி மூட்டுவலி ஏற்படாமலிருக்கவும் உண்ணப்படும் உணவுகளி லிருந்து சுண்ணாம்புச்சத்து (Calcium) உடலில் சேர்க்கப் படவும் அஸ்கார்பிக் அமிலம் என்ற விஞ்ஞானப் பெயரால் அழைக்கப்படும் (விட்டமின் - சி) தேவைப்படுகிறது. இந்த அமிலச் சத்து உடலில் தேக்கப்படுவதில்லை. இச்சத்து அன்றாடம் மனித உடலுக்கு மிகமிகச் சிறு அளவில் தேவைப்படுகிறது. வளரும் குழந்தைகளுக்கு இந்த அமிலம் ஈடில்லா நன்மைகளைச் செய்கிறது.
குறிப்பாக கர்ப்பிணிகளுக்கு இச்சத்து பல்வேறு சிக்கல்கள் ஏற்படாமல் தடுக்கிறது. நாம் உண்ணும் உணவுகள் ஒரு சிலவற்றில் அஸ்கார்விக் அமிலம் சிறு அளவில் உள்ளதுஆனால் தரமானதாக சமைக்கப்படாத பச்சை மிளகாயில் மட்டும் அதிக அளவில் உள்ளது. சமையல் வெப்பத்தினால் பச்சை மிளகாயில் உள்ள இந்த அமிலம் வெளியேற்றப்பட்டு வீணாகிவிடுகிறது. நம் தமிழகத்தில் தேங்காய் சட்னி தவிர பச்சை மிளகாய் சமையலில் சமைக்கப்பட்டோஎண்ணெயில் பொரிக்கப்பட்டோ மட்டும் உண்ணப்படுகிறது. வட இந்தியர்களின் உணவுப் பட்டியலில் தவறாமல் பச்சை மிளகாய் இயற்கை நிலையில் வாரத்தில் சில பல நாட்கள் தவறாமல் இடம் பெறுகிறது.
நடைபாதை சிற்றுண்டி சாலைகள் முதல் ஐந்து நட்சத்திர அந்தஸ்துள்ள ஹோட்டல்களிலும் வெஞ்சனமாக (Side dish) பச்சை மிளகாய்சிறு துண்டுமுள்ளங்கி வட்டமாக நறுக்கி நீரில் கழுவப்படாமல் காற்றில் உலர்த்தப்பட்ட வெங்காயம்நறுக்கப்பட்ட எலுமிச்சம் பழம்தக்காளி துண்டுகள் ஆகிய இவையனைத்துமோ அல்லது அவற்றில் ஒன்றிரண்டோ தவறாமல் உணவுகளுடன் வழங்கப்படுகிறது. அல்லது பச்சை மிளகாய்புதினாஉப்பு ஆகியவைகளை ஒன்றிரண்டாக அரைத்த சட்னி வழங்கப்படுகிறது. இவைகளை அடிக்கடி உட்கொள்ளுபவர்களுக்கு சரும நோய்
எளிதில் பற்றுவதில்லை. எலும்புகள்பற்கள் ஆகியவைகளில் வலி மற்றும் சீர்கேடுகள் ஏற்படுமுன்னரே தடுக்கப்பட்டுவிடுகின்றன. செரிமானம் முழுவீச்சில் நடைபெறுகிறது. தசைகள் மற்றும் எலும்புகள் இறுக்கமானவை களாகவும் உறுதியானவைகளாகவும்,எடை உயர்ந்த ஆரோக்கியமான கட்டுடல் ஏற்படுகிறது.
சமைக்காமல் இயற்கை நிலையில் உண்ணப்படும் தேங்காய்,தக்காளி பழம், (நாட்டுத் தக்காளிவிதை நீக்கி) எலுமிச்சம் பழம் (குடிநீரில் சிறு அளவில் எலுமிச்சம்பழச்சாறு கலந்து உணவுக்கு இடையீடாக பருகுதல் செரிமானம் சிறப்பாக நடைபெற உதவுகிறது) பச்சை மிளகாய்முள்ளங்கிகொத்துமல்லி இலை,காரட் போன்ற உணவுகளின் சிறப்புச் சத்துக்கள் வீணாகாமல் முழுமையான நன்மைகளைத் தருகின்றன. இவைகளை நெருப்பில் சூடுபடுத்தினாலும் நீரில் கொதிக்க வைத்தாலும்எண்ணெயில் பொரித்தாலும் இவைகளின் நன்மை தரும் அம்சங்களில் பெருவாரியான சத்துக்கள் அவ்வுணவுப் பொருட்களிலிருந்து வெளியேற்றப் பட்டு வீணாகிவிடுகின்றன. இந்த வரிசையில் பழ வகைகள்நெல்லிக்காய் ஆகியவற்றையும் சேர்க்கலாம்.
இளம் வயதில் அடிக்கடி சளித்தொல்லை கள் (அதாவது சைனஸ் தொல்லைஆஸ்த்மாதும்மல்இருமல் என நீங்கா சளித்தொல்லைகள்) அதனை சீர்ப்படுத்தும் வகைக்காக (Control)இரசாயன மருந்துகளை மாத்திரை வடிவிலும்ஊசியினால் உடலுக்குள் பலவந்தமாகத் திணித்தும்உடலாரோக்கியம் பலமாக சேதமடைந்து இயல்பு நிலையிலிருந்து வேறுபட்டு நோயாளராகவே வாழ்க்கையை ஓட்டும் துர்ப்பாக்கிய நிலை. நடுத்தர வயதான 40வயதில் எலும்புகள் உடலின் பல பகுதிகளிலும் தேய்ந்து சீர்படுத்திட இயலா மூட்டு நோய்எலும்பு நோய் என நொந்து நூலாகிவிடாமல் இயல்பான ஆரோக்கிய வாழ்வு வாழ்ந்திட இயற்கை உணவுகளை உட்கொள்ள வேண்டும் (Prevention is better then cure)
வடஇந்தியர்களில் பொருளாதாரத்தின் மிக நலிந்த நிலையிலுள்ள (ஏழ்மையான மக்கள்சாலைப் பணியாளர்கள்கல் உடைக்கும் தொழி லாளிகள்கட்டிட வேலை போன்ற) கடின உழைப்பு செய்து வாழ்க்கை நடத்துபவர்களின் உணவுப் பட்டியல் என்பது மிக மிகச் சிறியது. ஆனால்ஆரோக்கியம் மிகுந்தவர்களாக உடல் பருக்காத,விரைவில் களைப்படையாத இறுக்க மான தசைகளுடன் பகல் முழுவதும் கடின உடல் உழைப்பை இச்சமுதாயத்திற்குக் கொடுப்பதன் சூட்சுமம்தான் என்ன?
விலை உயர்ந்த டானிக்குகளாபட்டியலிடப் பட்ட சிறப்புச் சத்துக்களைக் கொண்ட உணவு களாஎண்ணைக் கலப்பில்லாமல் நேரடியாக நெருப்பினால் வாட்டப்பட்ட கோதுமை சப்பாத்தியும் அதனுடன் பச்சை மிளகாய்துண்டாக நறுக்கப்பட்ட பெரிய வெங்காயம்முள்ளங்கிஉப்பு இவைகள் மட்டுமே. துணை உணவாக (Side dish) உட்கொள்ளுகிறார்கள். கடின உடல் உழைப்பினால் இவ்வுணவுகள் முழுமையாக செரிக்கப்பட்டு உடலாரோக்கியம் சீராகப் பராமரிக்கப்படுகிறது.
இந்த உணவுகளை சமைத்தோஎண்ணெ யில் பொரித்தோ (நாவுச் சுவையை மட்டும் கருத்தில் கொள்ளுபவர்கள்) உண்ணுபவர்களுக்கு இயற்கை உணவுகளின் நன்மைதரும்ந இன்றியமை யாச் சிறப்புக்களில் பெரும்பகுதி வீணாக்கப்பட்டு சக்கைகளைமட்டுமே உண்டு உடலில் போதுமான ஜீவாதார சத்துக்களில்லா பலவீனமான உடல் நிலை ஏற்பட்டு பல்வேறு (டானிக்சிறப்பு சத்துணவு போன்ற) ஆர்ப்பாட்டங்களை மேற் கொள்ள வேண்டிய துர்ப்பாக்கிய நிலை ஏற்படுத்தப்படுகின்றன.
சிறுவயது முதலாகவே மேலே குறிப்பிடப் பட்டுள்ள இரசத்தை பகல்இரவு உணவுகளில் வாரத்தில் சில நாட்கள் உண்டு வந்தால் பற்பல நன்மைகளை எளிதில் படிப்படியாக அடைந்து ஆரோக்கியத்தை தக்கவைக்கலாம்.
வியர்வையின் வழியாக உடலின் கழிவுகள் தினசரி 300 கிராம் அளவு கெடுதல் தரும் உப்புக்கள் (நச்சுக்கள்) வெளியேற்றப்படுகின்றன என நவீன ஆய்வறிக்கை பேசுகிறது.
உடல் உழைப்பு குறைவானவர்கள்மற்றும் வியர்வை வெளியேறுவது கூடாது என்ற எண்ணம் கொண்டவர்கள் (?) மின் விசிறி மற்றும் குளிர்சாதனப் பெட்டியின் அருகில் அமருபவர்கள் (Air Condition) உடலின் மிகப்பெரிய ஜன்னலான சருமத்தின் வியர்வை நாளங்களின் வழியாக (வியர்வையின் வழியாக) தேவையற்ற கழிவுகளான உப்புக்கள் வெளியேற்றப்படாமல் மறுக்கப் படுகிறது என்பதின் காரணமாக அவ்வகைக் கழிவுகளை சிறுநீரகங்கள் (Kidney) வெளியேற்று கிறது. தனது வேலைப் பளுவுடன் அதிகப்படியான இக்கழிவுகளையும் உடலை விட்டு நீக்கிட சிறுநீரகங்கள் வரம்புமீறி (தனது சக்திக்கும் அதிகப்படியாக) வேலை செய்து விரைவில் சோர்வடைந்து முடிவில் செயலிழப்பு ஏற்பட்டுஉயிராபத்தாகிவிடும் வாய்ப்பாகிறது.
இவ்வகையில் வியர்வை ஏற்படாமல் சொகுசு வாழ்க்கை வாழ்பவர்களின் வியர்வை நாளங்கள் படிப்படியாக செயல்திறனை இழந்து விடுகின்றன. அவ்வாறான வியர்வை நாளங்களை இதமாகத் தூண்டி செயல்படச் செய்யும் இயற்கை வேதிப் பொருட்கள் சமைக்கப்படாத பச்சை மிளகாயில் உள்ளன.
புளி-மிளகாய் வற்றல் ஆகிய உணவுகள் மேலை நாடுகளில் குறிப்பாக இங்கிலாந்தில் உண்ணப்படுவதில்லை. அந்நாடுகளில் மூட்டு வலி - சிறுநீரகச் செயல் இழப்பு ஆகியவை அதிக அளவில் உள்ளன என புள்ளிவிபரம் கூறுகிறது.
பலமில்லா உடல்பருமன் கோளாறு இன்றைய நாட்களில் சிறுகுழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ஏற்பட்டு பல்வேறு சிகிச்சை முறைகளிலும் உடல் பருமனைக் குறைத்திட முடிவதில்லை. மேலே குறிப்பிட்ட இரசத்தில் இயற்கை நிலையில் பல்வேறு உணவுப் பொருட்கள் பச்சை மிளகாயுடன் கூட்டுப் பொருளாக இருப்பதன் காரணமாகவாரத்தில் பல வேளைகள் இந்த இரசத்தை உண்டு வந்தால் வாழ்நாள் முழுவதும் உடல் பருமன் நோய் ஏற்படாமல் தடுக்கலாம். விஞ்ஞான மருத்துவங் கள் தேவையில்லாதவைகளாகிவிடும்.
அமெரிக்க ட்யூக்” பல்கலைக்கழக ஆய்வறிக்கையில் சமீபத்தில் வெளியிடப்பட்டது. அதில் சிவப்பு மிளகாய் குறித்த ஆய்வு முடிவுகள் விஞ்ஞானிகளிடையே பெரும் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்நாள் வரையிலும் (காலங்காலமாக) மிளகாய் குடலுக்குக் கேடு தரும் என அறிவியலார் நம்பிவந்தனர். ஆனால் ஆய்வில் மிளகாய் குடலில் ஏற்படும் பல்வேறு வகையிலான சீர்கேடுகளை சீர்ப்படுத்துகிறது என ஆய்வில் அறியவந்துள்ளது.
பண்டைய காலம் முதல் நம் முன்னோர் பட்டறிவில் பதிவு செய்த பற்பல ஆய்வுகளை அறிவியல் உலகம் மிகமிகத் தாமதமாக (மிகச் சிறு அளவில்) கண்டுபிடித்து வியக்கிறது.
மேலும் இதய நோய்கள் - குறிப்பாக மாரடைப்பு நோய் ஏற்படு முன்னரே மிளகாய் அதைத் தடுத்துவிடுகிறது. குடலில் தேங்கும் பூச்சி புழுக்களை அங்கு சேரவிடாமல் தடுத்துவிடுகிறது. சிவப்பு மிளகாயிலுள்ள கேப்சாய்ஸ்” எனப்படும் இயற்கை வேதிப்பொருளை புற்றுநோயாளியின் உடலின் செலுத்தியதில் புற்றுநோயின் வீரியம் குறைகிறது என ஆய்வறிக்கையில் கூறப்பட் டுள்ளது.
கருவேப்பிலை :
வாசனைப் பொருளாகவும்உடலைக் காக்கும் மருந்தாகவும் செயல்படுகிறது. வாய் முதல் ஆசனவாய் வரையிலுள்ள உடலின் உள் உறுப்புகளில் புண்கள் ஏற்படாமலும்அவை இருந்தாலும் விரைவில் அவற்றை கருவேப்பிலையில் உள்ள இயற்கை வேதிப் பொருள் ஆற்றுகிறது. மூளையை சுறு சுறுப்பாக செயல்படத் தூண்டு கிறது. கறிவேப்பிலையில் விட்டமின் - அசத்து அதிக அளவில் உள்ளதாக நவீன மருத்துவ ஆய்வுகள் கூறுகின்றன. கண்களைப் பாதுகாக்கும் இந்த உயிர்ச்சத்து சில உணவுப் பொருட்களில் இருந்தாலும் தரமானதாகவும் போதிய அளவிலும் கறிவேப்பிலையில் உள்ளது.
கொத்துமல்லி இலை :
சமையல் சூட்டினால் பெருவாரியான சத்துக்களை இழந்துவிடுகிறது. இயற்கை நிலையில் பல்வேறு நன்மைகளைச் செய்கிறது. மனநிலை சீர்கேட்டை சீர்படுத்துகிறது. உடலில் சேரும் அதிகப்படியான பித்தத்தை சமனப்படுத்து கிறது. குறிப்பாக குழப்பமான மனநிலையைத் தெளிவுபடுத்துகிறது.
மஞ்சள் பொடி :
சக்திவாய்ந்த கிருமிநாசினிஉடலின் எந்தப் பகுதியிலும் சேர்ந்துவிடும். தீமை தரும் கிருமிகளை அழித்துவிடுகிறது. குடலில்இரைப்பையில் புண் போன்ற குறைபாடுகளை நீக்குகிறது. உள் உறுப்புகள் முறையாகச் செயல்பட உதவுகிறது. இரத்தத்தை சுத்தப்படுத்துகிறது. தமிழகத்தில் மழைக்கால தொற்றுநோய்கள் பரவி வருகின்றன.
எனினும் இந்தியர்களுக்கு இயல்பாகவே நோய் எதிர்ப்பு சக்தி ஐரோப்பிய நாடுகளில் உள்ளவர்களை விட அதிகமாக உள்ளது. இதற்கு இந்தியர்கள் வாழும் சூழலே அவர்களது உடம்பில் நோய் எதிர்ப்பு சக்தியை ஏற்படுத்துகிறது என மருத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர். இந்தியர்களின் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி இருப்பதற்கு அவர்கள் சமையலில் பயன்படுத்தும்வாசனைப் பொருளான மஞ்சளும் ஒரு காரண மாக இருக்கலாம் என்ற கோணத்திலும் ஆய்வுகள் தொடர்ந்து நடந்து வருகின்றன.
மஞ்சளுக்குத் தொற்றுநோய்கள் மட்டுமன்றி கேன்சரை குணப்படுத்தும் ஆற்றலும் உள்ளது என வெப்செஸ்டர் பல்கலைக்கழக மருத்துவ விஞ்ஞா னிகள் கண்டுபிடித்துள்ளனர். மஞ்சளை பயன்படுத்தி நோய் எதிர்ப்புசக்தி தரும் மருந்துகள் எதிர்காலத்தில் பரவலாகப் பயன்படுத்தப்படும் என இந்த ஆய்வு முடிவுகள் நம்புகின்றன.
(கரும்பு) வெல்லம் :
புளி நீருடன் சேர்ந்துசெரிமான அமிலங் களின் சுரப்புகளை ஒழுங்குபடுத்திசெரிமான செயல்பாட்டினை தீவிரத்தை விரைவு படுத்து கிறது. உடலில் தேங்கும் அதிகப்படியான பித்தத்தின் கெடுதல் தரும் தன்மையை மாற்றிபித்தத்தின் அளவை இயல்பு நிலைக்கு மாற்று கிறது.
பண்டைய காலம் முதல் கடந்த 30, 40 ஆண்டுகளுக்கு முன்பு வரை கோடை நாட்களில் நடைபெறும் கோவில் விசேஷங்களின் போதுபானகம்” எனப்படும் பானம் அனைவருக்கும் இலவசமாக கொடுக்கும் வழக்கமிருந்தது. (இன்றைய நாட்களில் அப்பழக்கம் மறைந்து விட்டது) நீராகக் கரைக்கப்பட்ட பழைய புளியின் கரைசல் நீரில் சரியளவாக நாட்டுச் சர்க்கரை மற்றும் சிறுஅளவில் ஏலக்காய் சேர்த்து தயாரிக்கப்பட்ட பானம்தான் பானகம்” என அழைக்கப்பட்டது. கோடை வெப்பத் தாக்குதல் காரணமாக பலருக்கும் குடல் வறட்சி ஏற்படும். இதன் காரணமாக வாந்தி,வயிற்றுப்போக்குஅடிவயிற்றில் வலி (சூட்டுவலி)வாய் உலர்வு மற்றும் உதடுகளில் வறட்சி காரணமாக அடங்கா நீர்த்தாகம் - உதடுகள் உரிந்து - வெடித்து இரத்தக் கசிவு போன்ற சீர்கேடுகளில் ஒன்றிரண்டோ அல்லது அனைத்துமோ ஏற்படும்.
குடலில் ஏற்படும் வறட்சியைப் போக்கி அவைகளின் செயல் மேம்பாடுகள் மேம்பட பானகம் உதவுகிறது. பழைய புளியின் கரைசலும் நாட்டுச்சர்க்கரையும் (அல்லது மண்டவெல்லம் எனப்படும் கரும்பு வெல்லம்) சமஅளவில் சேர்க்கப்பட்டால் இவை இரண்டும் சேர்ந்து வேதியியல் மாற்றங்களை ஏற்படுத்தி விடும் காரணமாக மேலே கண்ட நன்மைகளை அடையலாம். இயற்கையை நமக்கு சாதகமாக்கி வாழ்வியல் நடைமுறைகளை மற்றும் (நமது அன்றாட வாழ்க்கையில் பயன்படுத்திடும் நடைமுறை) உணவே மருந்தாகும் தந்திரத்தை உலகிலுள்ள எந்த நாட்டிலும் இல்லை. நம் கலாச்சாரத்தில் மட்டுமே பரந்து விரிந்து வாழ்க்கை முறையாயிற்று. எலும்பு மஜ்ஜைகளில் வரம்புமீறிய வெப்பம் தாக்கப்பட்டால் அம்மை ஏற்பட்டு விடும் வாய்ப்பாகிறது. கடுமையான வெயில் காலங்களில் இத்தகைய பாதிப்புகள் ஏற்பட்டுவிடுமுன்னரே தவிர்க்கப்பட்டுவிடும் வாய்ப்பாகிறது மழை மற்றும் குளிர்காலங்களில்இத்தகைய பானங்களை பருகலாகாது.
பெருங்காயம் :
பசியைத் தூண்டுகிறது. வயிற்றிலும் குடலிலும் சேரும் வாயுக்களைக் கலைத்துஉடலை விட்டு வெளியேற்றி செரிமானம் முறையாக நடைபெற உதவுகிறது. இதன் மணம் உணவுச் சுவையை அதிகப்படுத்துகிறது. நரம்பு மண்டலத் தில் வாயு தேங்கினால் மட்டுமே பக்கவாத நோய் ஏற்படும். அவ்வகை வாயுக்களைக் கலைத்து வெளி யேற்றுகிறது.
புளி :
பழைய புளி மட்டுமே உட்கொள்ளச் சிறந்தது. (சுவை மிகுந்தது. அதிக நன்மை தருகிறது) புதிய புளி சுவை குறைவானது. ஒரு சில பாதிப்புகளை ஏற்படுத்துகிறது. புதிய புளி செரிமான அமிலங்களை வரம்புமீறி சுரக்கத் தூண்டுகிறது. பழைய புளி செரிமான அமிலங் களின் சுரப்புகளில் ஏற்படும் ஏற்றக் குறைவுகளை ஒழுங்குபடுத்தி,அளவாக சுரக்கச் செய்துசெரிமானச் செயலின் குறைபாட்டை சீர்படுத்து கிறது. (காட்டில் புலி வீட்டில் புளி” என கிராமப் புறங்களில் கூறுவதுண்டு. இதன் பொருள்வரம்பு மீறி உட்கொள்ளப்படும் புளி உடல்நலத்தைக் கெடுக்கிறது எனக் கொள்ளலாம்).
நம் உடலின் சிறு தொழிற்சாலை எனக் கூறப்படும் கல்லீரலின் செயல்திறனை இதமாகத் தூண்டி அதனை சிறப்பாக முழுத்திறனுடன் இயக்க நீராகக் கரைக்கப்பட்ட புளி உதவுகிறது. மேலும் நீராகக் கரைக்கப்பட்ட புளியுடன் (கரும்பு) வெல்லம் சேர்க்கப்பட்டால் கல்லீரலின் செயல்பாடுகள் மேம்படும். கெட்டியான புளிக்கரைசல் கல்லீரலை வரம்பு மீறி தூண்டுகிறது என்பதன் காரணமாக கல்லீரல் வரம்புமீறி செயல்பட்டு அதன் செயல்திறன் படிப்படியாக குறைவுபட நேரிடுகிறது. புளி மட்டுமல்ல, (அதிகப்படியான புளிப்புச்சுவை கல்லீரலை பாதிக்கிறது. அதிகப்படியாக புளிக்க வைத்த தயிர்மோர்,வரம்புமீறிய புளிச்சுவை கொண்ட பழங்கள்பழச்சாறுகள் போன்றவை) தயிர் மற்றும் மோருடன் சூடான சாதத்தை இணைத்து உண்டால்அவ்வுணவு வயிற்றில் வரம்புமீறிய புளிப்புச் சுவையை ஏற்படுத்திவிடுகிறது.
இதன் காரணமாக கல்லீரல் பலமாகத் தாக்கப்பட்டு மஞ்சள் காமாலை போன்ற உயிராபத்தான நோய்கள் ஏற்படும் வாய்ப்பாகிறது. சாதம் ஆறிய பின்னர் தயிர் மற்றும் மோர் இணைத்து உண்பது சிறந்தது. சாம்பார்இரசம் போன்றவற்றில் நீராகக் கரைக்கப்பட்ட பழைய புளி சேர்க்கவேண்டும். இது கல்லீரலை இதமாகத் தூண்டி அதன் செயலாற்றல் மேம்பட உதவுகிறது. அதிகப்படியான அடர்த்தியான புளி ரத்தத்தின் அடர்த்தியை அதிகப்படுத்துகிறது. இரத்த நாளங்களில் இரத்த ஓட்டம் விரைந்து நடைபெற அடர்த்தி குறைந்த இரத்தம் உதவும். அடர்த்தி அதிகம் கொண்ட ரத்தம் ரத்த ஓட்டத்தை மந்தப்படுத்தும். உடலிலுள்ள சன்னமான ரத்த நாளங்களில் அடர்த்தி அதிகமுள்ள ரத்தம் பாய்ந்தால் ரத்தம் அழுத்தம் அதிகப்படுகிறது. (High Blood Pressure) இரத்தம் இயல்புக்கும் குறைவான வேகத்தில் ஓட்டம் நடைபெற்றால் (Low Blood Pressure) குறைந்த இரத்த அழுத்தம் எனக் கூறப்படுகிறது.
இவை இரண்டுமே இயற்கை நிலைக்கு முரண்பட்டவைகளாகும். இரத்தத்தின் அடர்த்தி குறைவானதாக இருந்தால் உடலின் பொது ஆரோக்கியம் பாதிக்கப்படவில்லை என நம்பலாம். நம் உடல் முழுவதும் உள்ள இரத்த நாளங்களில் கண்கள் மற்றும் ஆண் பெண் இன உறுப்புக்களில் மிகமிக சன்னமான இரத்த நாளங்களுள்ளன. இரத்தத்தின் அடர்த்தி இயல்பு நிலையிலிருந்தால் - இவ்வுறுப்புக்களில் அமையப் பெற்றுள்ள மிகமிக சன்னமான இரத்த நாளங்களில் இடைவிடாமல் ரத்த ஓட்டம் பாய்ந்து அவ்வுறுப்புகளின் செயல்திறன் இயல்பாக செயல்படும் வாய்ப்புண்டாகிறது. மாறாக இரத்தத்தின் அடர்த்தி அதிகமானால் இவ்விரு உறுப்புக்களிலும் இரத்த ஓட்டம் குறைந்து விடுவதன் காரணமாக கண்களிலும் இன உறுப்பு களிலும் அனைத்து வகைகளிலான குறைபாடு களும் படிப்படியாக (சிறுவயது முதலாகவே) ஏற்படுகின்றன.
கெட்டியான புளியினால் மட்டுமே இரத்தத்தின் அடர்த்தி அதிகப்படும் என்பதல்ல. பல்வேறுவகைக் காரணங்களினால் இந்நிலை ஏற்படுகிறது. அவற்றில் ஒரு காரணியாக கெட்டிக் கரைசலான புளியும் உள்ளது என்பதே கருத்தாகும். உடல் உழைப்பில்லாமல் சத்தான உணவுகளை மட்டுமே உண்ணுதலை வழக்கமாக்கிக் கொண்டவர்கள் உடலில் வியர்வை ஏற்படாத சொகுசான வாழ்க்கை வாழ்பவர்கள்எண்ணெயினால் பொரிக்கப்பட்ட அல்லது வறுக்கப்பட்ட உணவுகளை அடிக்கடி உண்ணு பவர்கள்குறைபாடான (அதாவது அரைகுறை யான செரிமான செயல்திறன் கொண்டவர்கள்) சிறுநீரகக் கோளாறு உள்ளவர்கள் ஆகியோருக்கு உடலில் இரத்தத்தின் அடர்த்தி அதிகப்பட்டு விடும் வாய்ப்பாகிறது.
-(அடுத்த இதழில் நிறைவுபெறும்.)
-Dr.சௌடையா
காந்திகிராமம். Cell94437 02778