Wednesday 31 August 2011

நீங்கள் அச்சப்படுகின்ற எதிரியா நாங்கள் ? - மாவோயிஸ்டுகள்


நீங்கள் அச்சப்படுகின்ற எதிரியா நாங்கள் ?
‌க்ச‌ல்க‌ள் எல்லாம் தீவிர‌வாதிக‌ள் அவ‌ர்க‌ளை ஒடுக்க‌வே நாங்க‌ள் அவ‌ர்க‌ளுக்கு எதிரான‌ ச‌ண்டையில் ஈடுப‌ட்டுள்ளோம் என்று கூறும் இந்திய‌ பாதுகாப்பு(!) ப‌டையின் உண்மை முக‌த்தை தோலுரித்து காட்டுகின்ற‌து இக்க‌ட்டுரை. வீரப்ப‌னின் தேடுத‌ல் வேட்டையில் எவ்வாறு அங்கு வாழ்ந்த‌ சோள‌க‌ர் ப‌ழ‌ங்குடி இன‌ ம‌க்க‌ள் பாதிக்க‌ப்ப‌ட்டார்க‌ள் என்ப‌தை ச‌.பால‌முருக‌ன் எழுதிய‌ சோள‌க‌ர் தொட்டி என்ற‌ நாவ‌ல் மிக தெளிவாக பதிந்துள்ளது.
அதைப் போலவே மாவோவின‌ர்களை  தேடும் வேட்டையில் பாதிக்க‌ப்ப‌டும் ப‌ழ‌ங்குடி இன‌ம‌க்க‌ளின் வாழ்க்கை நிலையைப் ப‌ற்றி தெரிந்து கொள்ள‌ இக்க‌ட்டுரை ஒரு சிறிய‌ அள‌விலாவ‌து உங்க‌ளுக்கு உத‌வும்.  மேலும் இதுபோல பாதிக்கப்படுகின்ற பழங்குடி இன மக்களுக்கு ஆதரவாக போராடும் பினாயக் சென் போன்றோர் அரச நிறுவனங்களால் ஒரு தேச‌துரோகியைப் போல சித்தரித்து கைது செய்யப்பட்டு அடைப்பது அவரை மட்டும் தண்டிப்பதற்காக அல்ல…குறிப்பாக மக்களுக்காக வேலை செய்பவர்களிடம் ஒரு அச்ச‌ உணர்வை எப்பொழுதுமே வைத்திருக்க வேண்டும் என்பதற்காகத் தான். அந்த அச்ச‌த்தின் மூலமாக மக்களை ஆட்சி செய்வது தான் இராணுவ ஆட்சி, இந்தியாவிலும் இந்த முறையிலான‌ இராணுவ ஆட்சியே நடக்கின்றது…..
இந்த கட்டுரையின் இறுதியில் கோவசி அத்மா என்ற பழங்குடி விவசாயி கூறுவது போல இங்கு இரண்டு வேறுபட்ட அரசுகள் உள்ளன (ஒன்று ஏழை இந்தியா, மற்றொன்று பணக்கார இந்தியா)என்பதை தனது அண்மைய தீர்ப்பின் மூலமாக உச்சநீதிமன்றம் வேறுவழியில்லாமல் உறுதி செய்துள்ளது.
காவல் துறையின் இயக்கல்களுக்கு(operation) நடுவே தாண்டேவாடாவில் வாழுகின்ற மனிதர்களான பழங்குடிகளின் உண்மையான நிலையைப் பற்றியும், அங்கு மார்ச் மாத நடுப்பகுதியில் நடைபெற்ற‌ படுகொலை நிகழ்வுகளைப் பற்றியும் விவரிக்கின்றது இக்கட்டுரை. இக்கட்டுரையை எழுதியவர் தெகல்கா நாளிதழின் நிருபரான‌ துசா மிட்டல்…
______________________________________________
ந்தியாவில் தடை செய்யப்பட்ட இயக்கமான மாவோவினர் இந்திய‌ எல்லைப் பாதுகாப்பு படையினர் பயணம் செய்த பேருந்தின் மீது நடத்திய மிக மோசமான  தாக்குத‌ல் ந‌டைபெற்று இன்றோடு(6 ஏப்ரல் 2011) ஒர் ஆண்டு ஆகின்ற‌து. க‌ட‌ந்த ஆண்டு இதே நாளில் தான் ச‌ட்டீசுக‌ரின் வ‌ன‌ப்ப‌குதியில் 76 எல்லைப் பாதுகாப்புப‌டை வீர‌ர்க‌ள் ப‌டுகொலை செய்ய‌ப்ப‌ட்டார்க‌ள். இந்த‌ ப‌டுகொலை மாவோவின‌ர் மீதான‌ எதிர் ந‌ட‌வ‌டிக்கைக‌ளை அதிக‌ப்ப‌டுத்துவ‌த‌ற்கான‌ கார‌ணியாக‌ ஆன‌து. ஓர் ஆண்டுக்கு பின்ன‌ர் அதே வ‌ன‌ம் இன்னொரு ப‌டுகொலை நிக‌ழ்வைச் ச‌ந்தித்துள்ள‌து. ஆனால் இந்த‌ முறை ப‌டுகொலையை செய்த‌து நாம் எதிரிகளாகக் கருதும் மாவோவின‌ர் அல்ல, இந்திய‌ பாதுகாப்பு ப‌டைக‌ள் என்ப‌து தெக‌ல்கா நாளித‌ழின் விசாரணையிலிருந்து தெரிய‌ வ‌ருகின்ற‌து. இதில் தாக்குத‌லுக்கு உள்ளாக்க‌ப்ப‌ட்ட‌வ‌ர்க‌ள் இந்தியாவில் உள்ள‌ ச‌க‌ம‌க்க‌ளின் க‌ண்க‌ளுக்கு (தெரிந்தும்)தெரியாத‌ ப‌ழ‌ங்குடிகளே.
மார்ச் இர‌ண்டாவ‌து வார‌த்தில் பாதுகாப்பு ப‌டை ந‌ட‌த்திய இய‌க்க‌ல் ஐந்து நாட்க‌ள் நீடித்த‌து. இதில் இந்திய‌ பாதுகாப்பு ப‌டை தாண்டேவாடா மாவ‌ட்ட‌த்தின் வனப்பகுதியின் உள்ளே உள்ள‌ மூன்று கிராம‌ங்க‌ளை முற்றிலுமாக‌ தீவைத்து கொளுத்தியுள்ள‌து. இதில் மொத்த‌ம் முன்னூறு குடிசைக‌ள் எறிந்து சாம்ப‌லாயின‌. நூற்றுக்க‌ண‌க்கான‌ ப‌ழ‌ங்குடி ம‌க்க‌ள் வீடிழ‌ந்தார்க‌ள். மூன்று பெண்க‌ள் பாலிய‌ல் வ‌ன்புண‌ர்வுக்கு உள்ளாக்க‌ப்ப‌ட்டுள்ளார்க‌ள். மூன்று ப‌ழ‌ங்குடியின‌ ம‌க்க‌ள் கொல்ல‌ப்ப‌ட்டுள்ளார்க‌ள். ப‌ழ‌ங்குடிக‌ளின் தானிய‌ சேமிப்புக‌ள் எல்லாம் தீக்கிறைக்கப்பட்டுள்ள‌ன‌. ப‌ழ‌ங்குடிக‌ள் சேமித்து வைத்திருந்த‌(மொத்த‌ இருப்பு) த‌ங்க‌ ந‌கைக‌ள், ஆயிர‌க்க‌ண‌க்கான‌ ரூபாய்க‌ள் கொள்ளைய‌டிக்க‌ப்பட்டுள்ள‌‌ன‌.
கொல்ல‌ப்ப‌ட்ட‌ ஒருவ‌ரின் உட‌ல் ஒரு ம‌ர‌த்தில் தொங்க‌விட‌ப்ப‌ட்டும், ம‌ற்ற‌ ஒருவ‌ரின் உட‌ல் கோடாரியால் இர‌ண்டாக‌ பிள‌க்க‌ப்ப‌ட்டும் கிட‌ந்த‌து. அவ‌ர்க‌ளின் வாழ்வாதார‌மான‌ கோழி, ஆடு, உண‌வுப் பொருட்களும் கொள்ளைய‌டிக்க‌ப்பட்டுள்ள‌‌ன‌.
இதைப் ப‌ற்றிய‌ செய்தி “Rajastan Patrika” என்ற ஒரே ஒரு இந்தி நாளிதழலும், “இந்து” நாளித‌ழிலும், சில‌ உள்ளூர் தொலைக்காட்சி அலைவ‌ரிசைக‌ளிலும் வெளிவ‌ந்த‌தை த‌விர வேறு எந்த‌ ஒரு த‌னிப்ப‌ட்ட‌ விசார‌ணைக‌ளும் மேற்கொள்ள‌ப்ப‌ட‌வில்லை. தாண்டேவாடாவில் காவல்துறை தலைமை அதிகாரியான கல்லுரி என்பவரின் தலைமையில் தான் இந்திய‌ துணை இராணுவமும், மற்ற படைகளும் இய‌ங்குகின்றன‌. இவ‌ர் இந்த‌ ப‌டுகொலையும், தீ வைப்பும் “மாவோவின‌ரின் பர‌ப்புரை யுத்தி” என்கின்றார். ச‌ட்டீசுக‌ர் மாநில‌ உள்துறை ம‌ந்திரி ந‌ன்கிராம் க‌ன்வாரோ இந்த‌ தீ வைப்புக‌ளுக்கு கார‌ண‌ம் மாவோவின‌ர் தான் என‌க் குற்ற‌ம் சாட்டுகின்றார்.
இந்த‌ ப‌டுகொலை நிக‌ழ்வுக்கு பின்ன‌ரான‌ மார்ச் இறுதி வார‌ங்க‌ளில் பாதிக்க‌ப்ப‌ட்ட‌ கிராம‌ங்க‌ளில் நுழைவ‌த‌ற்கு ப‌ல தனிப்பட்ட விசாரணை குழுக்க‌ளுக்கு த‌டைவிதிக்க‌ப்ப‌ட்ட‌து. ச‌ட்டீசுக‌ர் மாநில‌ முத‌ல்வ‌ர் இராமன் சிங்கின் உத்திரவாத‌த்தின் பேரில் காவ‌ல்துறையின‌ரின் பாதுகாப்போடு சென்ற‌ ச‌மூக‌ செய‌ல்பாட்டாள‌ரான‌ சுவாமி அக்னிவினேசு வெறி கொண்ட‌‌ ஒரு கூட்ட‌த்தின‌ரால் தாக்க‌ப்ப‌ட்டார். உள்ளூர் ப‌த்திரிகையாள‌ர்க‌ள் ப‌ல‌ர் தாக்க‌ப்பட்டுள்ளார்கள், மேலும் கைது செய்து சிறையில் அடைத்துவிடுவோம் என்று காவ‌ல்துறையால் மிர‌ட்ட‌ப்பட்டுமுள்ளார்க‌ள்.
தாண்டேவாடா மாவ‌ட்ட‌ ஆட்சிய‌ர் கொடுத்த‌ நிவார‌ண‌ப் பொருட்க‌ளை ஏற்றிச் சென்ற‌ சுமையுந்தின் ஓட்டுநர், க‌ர்த‌ம் சூர்யா என்ற‌ சிற‌ப்பு காவ‌ல்துறை அதிகாரியினால் தாக்க‌ப்ப‌ட்டார். இந்த காதம் சூர்யா இதற்கு முன்னர் ஒரு க‌ற்ப‌ழிப்பு வ‌ழ‌க்கில் குற்ற‌ம் சாட்ட‌ப்பட்டவர். இவ‌ரை க‌ண்டுபிடிக்க‌முடிய‌வில்லை என்று காவல்துறை கூறுகின்ற‌‌து. பாதுகாப்பு பிர‌ச்ச‌னை என்ற‌ பெய‌ரில் ச‌ட்டீசுக‌ர் மாநில‌ எதிர் க‌ட்சியைச் சேர்ந்த‌ 11 ச‌ட்ட‌ம‌ன்ற‌ உறுப்பின‌ர்க‌ள் இந்த‌ ப‌குதிக்குள் நுழைவ‌த‌ற்கு அனும‌தி ம‌றுக்க‌ப்பட்டுள்ள‌‌து. ப‌ல‌ வித‌மான‌ இழுத்த‌டிப்புக‌ளுக்கு பின்ன‌ர் வேலை செய்ய‌த்துவ‌ங்கிய‌ மாநில‌ நிர்வாக‌ம் தாண்டேவாடா மாவ‌ட்ட‌ காவல்துறை த‌லைமை அதிகாரி க‌ல்லுரியை இட‌மாற்ற‌ம் செய்து, மேலும் இந்த‌ ப‌டுகொலை தொட‌ர்பான‌ நீதி விசார‌ணை ந‌ட‌க்கும் என்று உத்திர‌வாத‌த்தையும் வ‌ழ‌ங்கியுள்ள‌து.
க‌ட‌ந்த‌ வார‌ம் காவ‌ல்துறையின் அர‌ண்க‌ளை தாண்டி செல்வ‌த‌ற்காக‌ மிக‌வும் தொலைவான‌ காட்டுப்ப‌குதியின் மூல‌மாக‌ பாதிக்க‌ப்ப‌ட்ட‌ கிராம‌ங்க‌ளை தெக‌ல்கா குழுவின‌ர் சென்ற‌டைந்த‌ன‌ர். ம‌த்திய‌ காவ‌ல் ப‌டை வீர‌ர்க‌ள், “கோப்ரா”, “கோய” அதிரடி படையைச் சேர்ந்த அதிகாரிக‌ள், காவ‌ல்துறை அதிகாரிக‌ள் எல்லாம் சேர்ந்து தான் இந்த‌ ப‌டுகொலையை நிகழ்த்தினார்கள் என்று நிக‌ழ்வை நேரில் க‌ண்ட‌ சாட்சிக‌ள் எம்மிடம்(தெகல்கா) கூறினார்க‌ள். மேலும் இவ‌ர்க‌ளுக்கு உறுதுணையாக‌ உடுப்பு அணிந்தும், பொது ம‌க்க‌ளைப் போன்ற‌ உடைய‌ணிந்தும் இருந்த‌ சிற‌ப்பு காவ‌ல்துறை அதிகாரிகளும் இருந்துள்ளார்கள்.
“இந்த‌ப் ப‌குதியில் நாட்டுத்துப்பாக்கிக‌ள் போன்ற‌ ஆயுத‌ங்க‌ள் உற்ப‌த்தி செய்ய‌ப்ப‌டுவ‌தாக‌ காவ‌ல்துறை க‌ருதியிருந்த‌து. மேலும் கிடைத்திருந்த‌ உள‌வுத்த‌க‌வ‌ல்க‌ளின் ப‌டி முக்கிய‌மான‌ மாவோவின‌ர் இந்த‌ப் ப‌குதியில் ப‌துங்கியிருப்ப‌தாக‌வும் எங்களுக்கு த‌க‌வ‌ல்க‌ள் வ‌ந்த‌ன‌” என‌ காவ‌ல்துறை வ‌ட்டார‌ங்க‌ள் தெரிவிக்கின்ற‌ன. அவர்கள் மேலும் கூறுகையில் “இந்த‌ கிராம‌த்தில் உள்ள‌வ‌ர்க‌ள் எல்லாம் ந‌க்ச‌ல் ஆத‌ர‌வாள‌ர்க‌ள், தெரிந்தோ, தெரியாம‌லோ ந‌க்ச‌ல்க‌ளுக்கு அவ‌ர்க‌ள் உட‌ந்தையாக‌வும், 76 ப‌டை வீர‌ர்க‌ள் கொல்ல‌ப்ப‌டுவ‌த‌ற்கு உத‌வியும் உள்ளார்க‌ள்”.
தீ வைத்து கொழுத்த‌ப்ப‌ட்ட‌ மோர்பளி, திமாபுர், தர்மத்லா கிராம‌ங்க‌ள் ம‌யான‌ பூமியைப் போல‌ எங்க‌ளுக்கு காட்சிய‌ளித்த‌ன‌. அந்த‌ நில‌ப்ப‌குதி மொத்த‌‌மும் எரிந்த‌ குடிசைக‌ளையும், ஆள் அரவமற்ற எரிந்து போன தானிய‌ங்க‌ளைக் கொண்ட‌ ப‌ழ‌ங்கால‌ தாழிக‌ளையும் கொண்ட இடிந்து போன வீடுகளையும் மட்டுமே கொண்டிருந்த‌து. இது ச‌ல்வா சூடும் ந‌டைபெற்ற‌ ஆர‌ம்ப‌ கால‌ க‌ட்ட‌த்தை எம‌க்கு நினைவூட்டிய‌து. 2005-ல் தொடங்கிய ச‌ல்வா சூடும் இய‌க்க‌லினால் மொத்த‌ம் 645 கிராம‌ங்க‌ள் எரித்து சாம்ப‌லாக்க‌ப்பட்டது, மொத்த‌ம் 60,000 ம‌க்க‌ள் உள்நாட்டிலேயே இட‌ப்பெய‌ர்வுக்கு உள்ளாக்க‌ப்ப‌ட்டார்க‌ள். இந்த‌ ச‌ல்வா சூடும் இய‌க்க‌ல் அர‌ச‌ உத‌வி பெற்ற‌ ஒரு ஆயுத‌ப்ப‌டை இயக்கல் என்ப‌து பெரும்பான்மையோரால் ஒப்புக்கொள்ள‌ப்ப‌ட்ட‌ ஒன்றாகும்.

பாதுகாப்பு ப‌டையினரால் தாக்க‌ப்ப‌ட்டு, க‌ற்ப‌ழிக்க‌ப்ப‌ட்ட‌ ஐம்லா சோகி
பாதுகாப்பு ப‌டையினரால் தாக்க‌ப்ப‌ட்டு, க‌ற்ப‌ழிக்க‌ப்ப‌ட்ட‌ ஐம்லா சோகி

அது போல‌ ஒரு பெரிய‌ இட‌ப்பெய‌ர்வு இப்பொழுது ந‌ட‌க்க‌வில்லை என்றாலும், இது போன்ற‌ நிக‌ழ்வுக‌ளால் வீடுக‌ளை இழ‌ந்து பாதிக்க‌ப்பட்ட‌ ப‌ழ‌ங்குடிக‌ள் ஆந்திர‌ மாநில‌த்திற்கு இட‌ம்பெய‌ர்ந்து அங்கு கூலி வேலைக‌ளில் ஈடுப‌ட்டு வ‌ருகின்றார்க‌ள். இதை விடுத்த‌ அந்த‌ கிராம‌ங்க‌ளிலேயே வாழ்ந்து வ‌ருப‌வ‌ர்க‌ள் வீடுக‌ள் இல்லாத‌ காரண‌‌த்தினால் பெரிய‌ ம‌ர‌ங்களின் கீழ் எந்தவித பாதுகாப்பும் இல்லாமல் வாழ்ந்து வ‌ருகின்றார்க‌ள். இந்த‌ கொடூர‌ நிக‌ழ்வை செய்த‌து சீருடை அணிந்த‌ மாவோவின‌ர் என்று முத‌லில் க‌ருத‌ப்ப‌ட்ட‌து.
ஆனால் இதில் பாதிக்க‌ப்ப‌ட்ட‌ உள்ளூர்வாசிக‌ள் இந்த‌ தாக்குத‌லில் ஈடுப‌ட்ட‌வ‌ர்க‌ள் அர‌ச‌ ப‌டையைச் சேர்ந்த‌வ‌ர்க‌ளே என்றும், அவ‌ர்க‌ளில் சில‌ர‌து பெய‌ர்க‌ளையும் கூறினார்க‌ள்: ந‌க‌ர‌ம் ப‌குதியைச் சேர்ந்த‌ இர‌மேசு என்ற‌ ம‌த்க‌ம் பீமா, லேகாப‌ரோ ப‌குதியைச் சேர்ந்த‌ தெல‌ம் அன்ட, மோர்பளி ப‌குதியைச் சேர்ந்த‌ புத்கே ம‌ரா, குர்ராப‌ரோ ப‌குதியைச் சேர்ந்த‌ கிச்சே ந‌ந்தா (இவ‌ர் ஏற்க‌ன‌வே சிங்கார‌ம் என்ற‌ ப‌குதியில் 19 ப‌ழ‌ங்குடியின‌ரைக் கொலை செய்த‌ வ‌ழ‌க்கில் குற்ற‌ம் சாட்ட‌ப்ப‌ட்ட‌வ‌ர்), மிசுமா ப‌குதியைச் சேர்ந்த‌ க‌ர்த‌ம் சூர்யா (இவ‌ர் ஏற்க‌ன‌வே 4 ப‌ழ‌ங்குடி இன‌ பெண்க‌ளை க‌ற்ப‌ழித்த‌ வ‌ழ‌க்கில் குற்ற‌ம் சாட்ட‌ப்ப‌ட்ட‌வ‌ர்). மேலும் ந‌ந்தா, சூர்யாவைக் கைது செய்ய‌ச் சொல்லி நீதிம‌ன்ற‌ம் பிற‌ப்பித்த‌ தீர்ப்பு ஒன்றும் நிலுவையில் உள்ள‌து. வ‌ழ‌மை போல‌வே இவ‌ர்க‌ளை எல்லாம் காண‌வில்லை என்று காவ‌ல்துறை கூறுகின்ற‌து.
இவ‌ர்க‌ளில் சில‌ர் ச‌ர‌ண‌டைந்த‌ மாவோவின‌ர் (பின்னர் அர‌ச‌ த‌ர‌ப்பால் மூளைச்ச‌ல‌வை செய்ய‌ப்ப‌ட்ட‌வ‌ர்க‌ள்), சில‌ர் ச‌ல்வாசூடும் இய‌க்க‌லில் ப‌ணியாற்றி பின்ன‌ர் சிற‌ப்பு காவ‌ல்துறை அதிகாரியாக‌ ஆன‌வ‌ர்க‌ள், சில‌ர் சிற‌ப்பு காவ‌ல்துறை அதிகாரியாக ப‌ணியாற்றி “கோய”அதிர‌டிப்ப‌டை அதிகாரிக‌ளாக‌ ப‌த‌வி உய‌ர்வு பெற்ற‌வ‌ர்க‌ள். அர‌சு ச‌ல்வா சூடும் இய‌க்க‌ம் முடிவுக்கு வ‌ந்துவிட்ட‌தாக‌ கூறுகின்ற‌து, ஆனால் அந்த‌ இய‌க்க‌லில் ப‌ணியாற்றிய‌வ‌ர்க‌ள் தான் அதிர‌டி ப‌டைக‌ளிலும், சிற‌ப்பு காவ‌ல்துறை அதிகாரிக‌ளாக‌வும் ப‌ணியாற்றி வ‌ருகின்றார்க‌ள். ச‌ல்வா சூடும் இய‌க்க‌ல்…துணைப் பாதுகாப்பு ப‌டை இய‌க்க‌ல் என்று பெய‌ர் மாற்ற‌ம் தான் அடைந்திருக்கின்ற‌தே த‌விர‌ ச‌ல்வா சூடும் முடிந்து, துணை இராணுவ‌ப்ப‌டையின் ந‌டவ‌டிக்கைக‌ள் தொட‌ங்கி இருக்கின்ற‌ன‌ என்ப‌த‌ற்கான‌ சான்றுக‌ள் தென்ப‌ட‌வே இல்லை.
மேலும் இங்கு த‌னிப்ப‌ட்ட‌ ப‌கை ந‌ட‌வ‌டிக்கைக‌ள் ந‌ட‌க்கின்றதா இல்லை மாவோவின‌ருக்கு எதிரான ந‌ட‌வ‌டிக்கைக‌ள் ந‌ட‌க்கின்ற‌தா என்பதும் தெளிவாக தெரியாத‌ நிலையே நிலவுகின்றது. இந்த படுகொலை நிகழ்விற்கு உடந்தையாக இருந்த த‌ன் ம‌கன்(புத்கே மற) சாக‌ வேண்டும் என்று நினைக்கும் மோர்ப‌ளி வாசியான‌ புத்கே ல‌ச்சாவை நீங்க‌ள் ச‌ந்திந்தால் தான் இங்கு ந‌ட‌ந்து வ‌ரும் உள்நாட்டுப் போர் எந்த‌ள‌வு ம‌க்க‌ளை பாதித்துள்ள‌து என்ப‌து உங்க‌ளுக்கு தெரிய‌ வ‌ரும். புத்கே ல‌ச்சா மேலும் கூறுகையில் தொட‌க்க‌த்தில் புத்கே ம‌ற‌ குடிப்ப‌ழ‌க்க‌த்தில் ஈடுப‌ட்டு பெண்க‌ளிட‌ம் த‌வ‌றாக‌ ந‌ட‌க்க‌ முற்ப‌ட்டான், பின்னர் ஒரு பெண்ணை க‌ற்ப‌ழித்து என‌க்கு தீராத‌ க‌ள‌ங்க‌த்தை உண்டாக்கிவிட்டு இந்த‌ கிராம‌த்தை விட்டே வெளியேறிவிட்டான்.
“அவ‌ன் ஆந்திராவில் கூலி வேலை செய்வ‌தாக‌வும், எங்கேயாவ‌து அவ‌ன் த‌ங்க‌ நேர்ந்தால் அங்குள்ள‌ ப‌சு, உண‌வு தானிய‌ங்க‌ள், ப‌ண‌த்தை திருடி வ‌ருவ‌தாக‌வும்” நான் கேள்விப்ப‌ட்டேன் என‌ புத்கே ல‌ச்சா கூறுகின்றார். இதன் பின்ன‌ர் கடந்த ஆண்டு(2010)ச‌த்தீசுக‌ர் வ‌ந்த‌ த‌ன் ம‌க‌ன் நேரடியாக கோன்டா ப‌குதியில் உள்ள‌ ச‌ல்வா சூடும் குழுவிற்கு த‌லைமை பொறுப்பு வ‌கித்ததாகவும், இதன் பின்னர் சில மாதங்களிலேயே அவனுக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டு சிறப்பு காவல்துறை அதிகாரியானான், அவனுக்கு அரச படைகளின் சீருடையும், ஒரு துப்பாக்கியும், மாதம் 3,000 ரூபாய் சம்பளமும் அரசால் வழங்கப்பட்டது. அவன் மட்டும் தனியாக இந்த கிராமத்திற்கு மீண்டும் வந்தால் இங்கிருக்கும் மக்கள் எல்லாம் ஒன்றாக‌ சேர்ந்து அவனை கொன்று விடுங்க‌ள் என்று நான் இங்குள்ள‌ மக்களிடம் கூறுவேன் என்கிறார் புத்கே லச்சா.
ப‌டுகொலையை நேரில் க‌ண்ட‌ சாட்சிய‌ங்க‌ள் கூறிய‌த‌ன் அடிப்ப‌டையில் அந்த‌ நாட்க‌ளில் நிக‌ழ்ந்தவை…..
11 மார்ச், காலை 8.00 மணி – இடம். மோர்பளி
பாதுகாப்பு ப‌டையினரால் தன் கண‌வ‌ன் கொல்ல‌ப்ப‌ட்ட‌ ம‌ர‌த்தின‌ருகே நிற்கின்றார் ம‌த்வி உங்கி
பாதுகாப்பு ப‌டையினரால் தன் கண‌வ‌ன் கொல்ல‌ப்ப‌ட்ட‌ ம‌ர‌த்தின‌ருகே நிற்கின்றார் ம‌த்வி உங்கி
அரச படை இரண்டு பிரிவுகளாக மோர்பளி கிராமத்திற்குள் நுழைந்தார்கள். மத்வி கங்காவின் குழந்தைகள் தண்ணீர் எடுக்கச் சென்ற குளத்தை ஒட்டிய பாதை வழியாக முதல் அணி வந்தது. அவர்கள் வரும் சத்தத்தை கேட்டு தன் குடும்பத்தை எச்சரிக்க சென்றார் மத்வி கங்கா(வயது 40), ஆனால் அவர்கள் அதற்குள்ளாக அங்கு வந்துவிட்டார்கள். மத்வி கங்காவையும், அவரது மகள் லக்கேவையும்(17 வயது), மகன் பீமா மூவரையும் தாக்கியுள்ளார்கள், பின்னர் அவர்களை கட்டி கிராமத்திற்குள் இழுத்து வந்துள்ளார்கள். பின்னர் அவர்களிடம் “மாவோவினர் எங்கே என்று? கேட்டுள்ளார்கள்.
முதல் அணி மோர்பளி கிராமத்திற்குள் வருவதற்கு முன்னதாகவே அந்த கிராமத்தில் வசித்த 200 பேரும் கிராமத்தை விட்டு வெளியேறிவிட்டார்கள். அரச படைக்கு மாவோவினரோ, மக்கள் தயாரிப்பதாக சொன்ன நாட்டு துப்பாக்கிகளோ எதுவும் கிடைக்கவில்லை. அவர்களுக்கு கிடைத்ததெல்லாம் மாவோவினர் மாவீரர்களுக்காக கட்டிய 15 அடி உயர நினைவுச் சின்னம் மட்டுமே. அந்த கிராமத்தில் மாவோவினரின் நினைவுச் சின்னம் இருப்பதாலேயே அந்த கிராமவாசிகள் அனைவரும் மாவோவினர் என்று கூறி விடமுடியாது.
ம‌று புற‌ம், இர‌ண்டாவ‌து அணி வ‌ரும் பொழுது, 40 வ‌ய‌தான‌ ஐம்லா என்ப‌வ‌ர் த‌ன‌து நில‌த்தை உழுது கொண்டிருந்தார். அவரை நோக்கி வந்த இரண்டாம் அணியைச் சேர்ந்தவர்கள் “எழுந்து, அந்த ப‌க்க‌மாக‌ச் செல், நாங்க‌ள் எல்லோரும் ஆந்திர‌ பிரிவைச் சேர்ந்த‌ ந‌க‌ச‌ல்க‌ள், நாங்க‌ள் அவ‌ச‌ர‌மாக‌ ஒரு ச‌ந்திப்பிற்குச் சென்று கொண்டிருக்கின்றோம்” என்று கூறினார்க‌ள். அவ‌ர் அங்கிருந்து ந‌க‌ர‌ ம‌றுக்க‌வே, அவ‌ரை த‌ங்க‌ள் கைக‌ளிலிருந்த‌ இல‌த்தி க‌ம்பைக் கொண்டு தாக்கி, அவ‌ர் தனது இடுப்பில் முடிந்து வைத்திருந்த அவரது வாழ்நாள் சேமிப்பான‌‌ ரூ. 10,000த்தை அவ‌ரிட‌ம் இருந்து ப‌ரித்து, அவரது இரு பெண் குழந்தைகளின் கண் முன்பே அவ‌ரை பாலிய‌ல் துன்புறுத்த‌லுக்கு உட்ப‌டுத்தினார்க‌ள். (ச‌ல்வா சூடும் கால‌த்தில் அடிக்க‌டி வீட்டிற்கு தீ வைப்பு ச‌ம்ப‌வ‌ங்க‌ள் ந‌டைபெறத் தொட‌ங்கிய‌தால் இங்கு வாழும் பழ‌ங்குடிக‌ள் த‌ங்க‌ள் வாழ்நாள் சேமிப்புக‌ளான‌ த‌ங்க‌ ந‌கைக‌ளையும், ப‌ண‌த்தையும் எங்கு சென்றாலும் த‌ங்க‌ளுட‌னே எடுத்துச் செல்ல‌த்தொட‌ங்கினார்க‌ள்..இல்லையென்றால் அவையும் எரிந்து சாம்ப‌லாகிவிடும்)
அந்த‌ கிராம‌த்தில் உள்ள‌ 35 வீடுக‌ளிலுள்ள‌ பொருட்க‌ளையும் க‌ளவாடி, அங்கிருந்த‌ ம‌க்க‌ளை அடித்து துன்புறுத்திய‌ இரு அணிக‌ளும், கையில் தீக்குச்சி மற்றும் கல்லெண்ணெய்(petrol) மூலம் அந்த‌ கிராம‌த்தை எரித்து விட்டுச் சென்றார்க‌ள். விவ‌சாயியான‌ க‌ர்த்தி ல‌ச்சாவின் ம‌ண் குடிசை இத‌ற்கு முன்பே ஒருமுறை ச‌ல்வா சூடும் ப‌டையின‌ரால் 2006ல் எரிக்க‌ப்ப‌ட்ட‌து. இது இர‌ண்டாவ‌து முறை. “எத்த‌னை முறை தான் நான் என‌து குடிசையும் மீள‌க்க‌ட்டுவ‌து?, மீண்டும் அவ‌ர்க‌ள் வ‌ந்து என‌து குடிசையை கொளுத்த‌மாட்டார்க‌ள் என்ப‌து என்ன‌ நிச்ச‌ய‌ம் என்று?” அவ‌ர் கேட்கின்றார்.
அங்க‌ன்வாடி ப‌ணியாள‌ரான‌ சோடி சான்டோவின் குடிசையும் இதில் எரிக்க‌ப்ப‌ட்ட‌து. இவ‌ர‌து குடிசையில் தான் க‌ர்ப்பிணி பெண்க‌ளுக்காக‌ அர‌சினால் வ‌ழ‌ங்க‌ப்ப‌டும் உண‌வுப் பொருட்க‌ள் வைக்க‌ப்ப‌ட்டிருந்த‌ன. சோடி சாண்டோவின் குடிசை தான் இந்த கிராமத்திலிருந்த ஒரே அரச அலுவலகம்.  ப‌ள்ளிக்கூட‌ங்க‌ள், நியாய‌ விலைக் க‌டைக‌ள், குடி நீர் என்று எல்லா அடிப்ப‌டை தேவைக‌ளுக்கும் இவ‌ர்க‌ள் த‌ங்கள் கிராம‌த்திருந்து நெடுந்தூர‌ம் ப‌ய‌ணிக்க‌ வேண்டியிருந்த‌து. மேலும் இது போன்ற‌ இட‌ங்க‌ளைச் சுற்றி ம‌த்திய‌ பாதுகாப்பு ப‌டையின் முகாம்க‌ளும், காவ‌ல்துறை நிலையங்களும் இருந்த‌ன.
புதிதாக கட்டப்பட்ட இரண்டு ஆசிரம பள்ளிக்கூடங்கள் கூட இந்த கிராமத்திலிருந்து 30 கிலோ மீட்டர் தொலைவில் இருக்கின்றன‌. சல்வா சூடுமினால் வனப்பகுதியின் உள்ளிருக்கும் கிராமங்கள் தீ வைத்து காலி செய்யப்படுவதற்கும், அரசின் வளர்ச்சிப் பணிகளுக்கான அலுவலகங்கள் முக்கிய சாலைகளின் அருகிலேயே அமைந்திருப்பதற்கும் தொடர்புகள் இல்லாமல் இல்லை. முதலில் அவர்களது இடங்களிலிருந்து பழங்குடி மக்களை விரட்டி காவல்துறை, மற்ற படைகளின் கண்காணிப்பிலேயே வைப்பது தான் அவர்களின் உத்தி.
பாதுகாப்பு ப‌டையினால் த‌ன‌து வீடு, சேமிப்பு மொத்த‌த்தையும் இழ‌ந்த‌ ரேவா கொசா
பாதுகாப்பு ப‌டையினால் த‌ன‌து வீடு, சேமிப்பு மொத்த‌த்தையும் இழ‌ந்த‌ ரேவா கொசா
மோர்ப‌ளி கிராம‌த்தை தீவைத்து கொளுத்திய‌ பின்ன‌ர் ஒரு குழு க‌ங்கா, ம‌ற்றும் அவ‌ர‌து இரண்டு பிள்ளைக‌‌ளையும் அழைத்துக் கொண்டு அருகிலுள்ள‌ சிந்த‌ல்ந‌ர் காவ‌ல்நிலைய‌ம் நோக்கி புற‌ப்ப‌ட்ட‌து. போகின்ற‌ வ‌ழியில் ப‌டையின‌ர் வ‌ண்டியை நிறுத்தி தாங்க‌ள் கொள்ளைய‌டித்து வ‌ந்திருந்த‌ 50 கோழிக‌ளையும்(இதில் இரண்டு கோழிகள் கங்காவிற்கு சொந்தமானவை) ச‌மைத்து உண்டு, பின் ஓய்வெடுத்த‌ பின்ன‌ரே சென்றார்க‌ள். காவ‌ல்துறை நிலைய‌த்தில் க‌ங்காவும், அவ‌ர‌து இர‌ண்டு பிள்ளைக‌ளும் சிற‌ப்பு கால்துறை அதிகாரிக‌ளால் மீண்டும் தாக்க‌ப்ப‌ட்டார்க‌ள். “ஏன் அங்கிருந்து ஓடினீர்கள்? என்று அவ‌ர்க‌ள் கேட்ட‌த‌ற்கு, அவ‌ர் த‌ன‌து கிராம‌த்தில் ந‌ட‌ந்த‌ கொள்ளை, தீவைப்பு ச‌ம்ப‌வ‌ங்க‌ளை அவ‌ர்க‌ளிட‌ம் கூறினார், ஆனால் அவ‌ர்க‌ள் ப‌திவு செய்த‌து என்ன‌வோ க‌ங்கா குடும்ப‌த்தின‌ரின் பெய‌ர்க‌ளை ம‌ட்டுமே.
இத‌ற்கிடையில் கங்காவின் 17வ‌ய‌து பெண்னை அருகிலிருந்த இன்னொரு அறைக்கு அழைத்துச் சென்றார்க‌ள், அடுத்த‌ நாள் காலையில் கிழிந்து போன‌ உள்ளாடைக‌ளுடன் அரை நிர்வாணமாக‌ அவ‌ள் வெளியே வ‌ந்தாள். “அவ‌ளை அடித்து துன்புறுத்தி க‌ற்ப‌ழித்துள்ளார்க‌ள்” என்று கூறுகின்றார் க‌ங்கா. தெக‌ல்கா குழுவின‌ர் மோர்ப‌ளி கிராம‌த்திற்கு சென்ற‌ பொழுது அந்த‌ பெண் தனக்கு புதுத்துணிக‌ள் வாங்குவ‌த‌ற்காக‌ கூலி வேலை செய்ய‌ ஏற்க‌ன‌வே ஆந்திராவிற்கு சென்றிருந்தாள்.
மோர்ப‌ளியில் இருந்த‌ இர‌ண்டாவ‌து அணி அங்கிருந்து வ‌ன‌ப்ப‌குதியை சோத‌னை செய்ய‌ச் சென்ற‌ பொழுது 35 வ‌ய‌தான‌ ம‌த்வி உங்கி ம‌வுவா விதைக‌ளை பிரித்து வைத்துக்கொண்டிருந்தார், அவ‌ர‌து க‌ண‌வ‌ரான‌ ம‌த்வி சுக்கா (40 வயது) அருகிலுள்ள புளியமரத்தில் நன்றாக பழுத்திருந்த புளியங்காய்களை பறித்துக்கொண்டிருந்தார். அரசபடையின் காலணி சத்தத்தை கேட்ட உடனே மரத்தில் இருந்து கீழே இறங்கிய மத்வி சுக்கா இலைகள் அதிகமாக‌ இருந்த‌ டெண்டு ம‌ர‌த்தில் ஏறி ம‌றைந்து கொண்டார். ம‌த்வி உங்கி அங்கிருந்து ஓடி த‌ன‌து குடிசைக்குள் சென்று விட்டார். அவ‌ர‌து ஒரு வ‌ய‌து ம‌க‌ளை தூக்கி வைத்துக் கொண்டார். அவ‌ர‌து வீட்டிற்குள் புகுந்த அரச‌ப‌டையின‌ர் அவ‌ரை தாக்கி அவ‌ள‌து மேல்ச‌ட்டையை கிழித்துள்ளார்க‌ள்.
ப‌டையின‌ர் அங்கிருந்து ந‌க‌ர்ந்து செல்லும் போது துப்பாக்கி ச‌த்த‌ம் கேட்க‌, த‌ன‌து குடிசையில் இருந்து வெளியே த‌வ‌ழ்ந்த‌ ப‌டியே(நடக்க முடியாததால்) வ‌ந்த‌ உங்கி த‌ன‌து க‌ண‌வ‌ரை தேடி‌ச்சென்றார். அவ‌ர‌து க‌ண‌வ‌ர் இருந்த‌ இட‌த்தில் ஒரே இர‌த்த‌மாக‌ இருந்த‌து ஆனால் அவ‌ர‌து உட‌ல் அங்கில்லை, ச‌ற்று நிமிர்ந்து மேலே பார்த்தால் அவ‌ர‌து க‌ணவ‌ரின் உட‌ல் ம‌ர‌க்கிளைக்கு இடையில் குத்த‌ப்ப‌ட்டு தொங்கிக்கொண்டிருந்தது.  “இங்கே தான் பாதுகாப்பு‌ ப‌டையின‌ர் என‌து க‌ண‌வ‌ரை சுட்டுக் கொன்றார்க‌ள்” என்று ஒரு கால‌த்தில் தான் வ‌ழிப்ப‌ட்ட வந்த அந்த‌ ம‌ர‌த்தைக் நம்மிடம் காட்டுகின்றார்.
13 மார்ச், ம‌திய‌ம் 12 ம‌ணி, புத்தாம்ப‌டு கிராம‌ம்
அன்று ம‌திய‌ம் சிந்த‌ல்ந‌ர் ம‌த்திய‌ ஆயுத‌ப் ப‌டைப்பிரிவு முகாமில் இருந்த‌ 300 பேர் திமாபுரை நோக்கி செல்ல‌த் தொட‌ங்கினார்க‌ள். அந்த‌ ப‌குதியில் மாவோவின‌ர் முகாம் அமைத்திருப்ப‌தாக‌ காவ‌ல்துறை த‌ர‌ப்பு கூறிய‌து. திமாபுர் செல்லும் வ‌ழியில் புத்தாம்ப‌டு கிராம‌த்தை அவ‌ர்க‌ள் சுற்றி வ‌ளைத்தார்க‌ள். ச‌ற்று தூர‌த்தில் அர‌ச‌ ப‌டையின‌ர் வ‌ருவ‌தைக் க‌ண்ட‌ அந்த‌ கிராம‌ ம‌க்க‌ள் ப‌ய‌த்தில் ஓட‌த் தொட‌ங்க, உடனடியாக‌ ப‌டையின‌ர் அவ‌ர்க‌ளை நோக்கி சுட‌த்தொட‌ங்கினார்க‌ள். இதில் பாதிக்க‌ப்ப‌ட்ட‌ ம‌த்க‌ம் கித்மீ கூறுகையில் “அவ‌ர்க‌ள் என்னை கொன்று விட்டார்க‌ள் என்றே நினைத்தேன், ஆனால் ந‌ல்வாய்ப்பாக(luckily) அந்த‌ குண்டு என் காலில் பாய்ந்த‌த‌னால் நான் த‌ப்பித்தேன்”. இப்பொழுது அவர் தனது கால்க‌ளை இழுத்துக் கொண்டே காட்டிற்குள் செல்கின்றார். த‌லையில் டெண்டூ இலைக‌ளை ஒரு கூடையில் சும‌ந்து கொண்டும், காலில் துப்பாக்கி குண்டோடும் அவ‌ர் வாழ்ந்து வ‌ருகின்றார்.
ஆனால் கித்மீயைப் போல‌ ப‌த்சே பீமாவிற்கும்(வ‌ய‌து 40), ம‌ன்னு ராமிற்கும் ந‌ல்வாய்ப்பு கை கொடுக்க‌வில்லை. அவ‌ர்க‌ள் இருவ‌ரையும் கைது செய்து அழைத்து கொண்டு ப‌டையின‌ர் திமாபுர் நோக்கி ப‌ய‌ணித்தார்க‌ள். த‌ன‌து க‌ண‌வ‌ன் பீமாவை விட்டு விடுமாறு அவ‌ர‌து ம‌னைவி ப‌த்சே ல‌க்மீ ப‌டையின‌ரிட‌ம் கெஞ்சினாள், இன்னும் ஒரு நாளில் அவ‌ரை விடுவித்து விடுவோம் என‌‌ ப‌டையின‌ர் அவ‌ருக்கு உறுதிய‌ளித்தார்க‌ள். ஆனால் இர‌ண்டு நாள் க‌ழித்து திமாபுரில் முழ‌ங்காலி‌டப‌ட்டு தொழுகை செய்யும் நிலையில் அவ‌ர‌து க‌ண‌வ‌ரின் உட‌லை இர‌த்த‌ வெள்ள‌த்தில் ம‌ட்டுமே ல‌க்மீயால் காண‌முடிந்த‌து. அப்போதும் கூட‌ அவ‌ர‌து க‌ண‌வ‌ரைக் கொன்ற‌ கோடாரி அவ‌ர‌து முதுகுப்ப‌குதியின் உள்ளே இருந்த‌து, அவ‌ர‌து கைக‌ளே ஒரு க‌யிற்றின் மூல‌மாக‌ பின்னால் க‌ட்ட‌ப்ப‌ட்டிருந்த‌து.
13 மார்ச், மாலை 3 ம‌ணி, திமாபுர் கிராம‌ம்….
எரிந்து போன‌ தானிய‌ங்க‌ளிலிருந்து சில‌ ந‌ல்ல‌ தானிய‌ங்க‌ளை ம‌த்வி பிசேவும், அவ‌ர‌து குழ‌ந்தைக‌ளும் பிரித்தெடுக்கின்றார்க‌ள்.
எரிந்து போன‌ தானிய‌ங்க‌ளிலிருந்து சில‌ ந‌ல்ல‌ தானிய‌ங்க‌ளை ம‌த்வி பிசேவும், அவ‌ர‌து குழ‌ந்தைக‌ளும் பிரித்தெடுக்கின்றார்க‌ள்.
மாலை 3 ம‌ணிய‌ள‌வில் பாதுகாப்பு‌ ப‌டையின‌ர் திமாபுர் கிராம‌த்திற்குள் நுழைந்த‌ன‌ர். திமாபுர் கிராம‌ம் அர‌சினால் புற‌க்க‌ணிக்க‌ப்ப‌ட்ட‌ ஒரு கிராம‌மாகும், ப‌ள்ளிக் கூட‌ங்க‌ள் கிடையாது, நியாய‌ விலைக் க‌டைக‌ள் கிடையாது, குடிநீர் வ‌ச‌தியும் கிடையாது. அங்கு இருந்த‌ ஒரு தொட‌க்க‌ப்ப‌ள்ளியும் ச‌ல்வா சூடும் தொட‌ங்கிய‌ பிற‌கு முற்றிலுமாக‌ செய‌ல்ப‌டுவ‌தில்லை (ச‌ல்வா சூடும் ப‌டையினரால் ஆசிரிய‌ர்க‌ள் யாரும் வ‌ன‌ப்ப‌குதிக்குள் நுழைய‌ வேண்டாம் என்று மிர‌ட்ட‌ப்ப‌ட்டார்க‌ள்)  மேலும் திமாபுர் கிராம‌த்திற்கு ப‌ஞ்சாய‌த்து உறுப்பின‌ரும் கிடையாது. முன்ன‌ர் ப‌ஞ்சாய‌த்து உறுப்பின‌ராக‌ இருந்த‌ ம‌த்க‌ம் ம‌சுகா இப்பொழுது தோர்ந‌ப‌ல் ப‌குதியில் உள்ள‌ ச‌ல்வா சூடும் முகாமில் உள்ளார். 2006ஆம் ஆண்டிற்கு பின்ன‌ர் எந்த‌ ஒரு ப‌ஞ்சாய‌த்து உறுப்பின‌ரும் இந்த‌ கிராம‌த்திற்கு வருவதும் கூட கிடையாது.
13 மார்ச் அன்று சில‌ குடிசைக‌ளை எரித்துக் கொண்டே அர‌ச‌ ப‌டை திமாபுர் கிராம‌த்திற்குள் மாவோவின‌ரையோ அல்ல‌து கிராம‌வாசிக‌ளையோ தேடிய‌ப‌டியே உள்ளே நுழைந்த‌து. ஆடுக‌ளும், கோழிக‌ளும் ம‌ட்டுமே அங்கிருந்த‌ உயிருள்ள‌ பொருட்க‌ளாகும். வ‌ழ‌மை போல‌வே அவ‌ற்றை கொன்று த‌ங்களின் இர‌வு உண‌வாக்கிக் கொண்டார்க‌ள். இர‌வு அவ‌ர்க‌ள் அங்கேயே த‌ங்கிவிட்டு, காலையில் அங்கிருந்து வெளியே செல்லும் வ‌ழியில்(2கிலோ மீட்ட‌ர் தொலைவில்) மாவோவின‌ரின் தாக்குத‌லுக்கு உள்ளானார்க‌ள்.
“அங்குள்ள‌ கிராம‌ங்க‌ளை பாதுகாக்க‌வே எங்க‌ள‌து ம‌க்க‌ள் விடுத‌லை க‌ர‌ந்த‌டி இராணுவ‌ம்(people liberation guerrills Army) அவ‌ர்க‌ளை தாக்கிய‌து” என்ற‌ கையெழுத்து பிர‌தி ஒன்று தெக‌ல்கா குழுவின‌ருக்கு வ‌ந்த‌து. இந்த‌ கையெழுத்து பிர‌தியின் கீழே – மாவோவிவ‌ன‌ரின் தெற்கு பாசுட‌ர் ப‌டையணியின் த‌லைமை அதிகாரி – வெங்க‌டேசு என்று கையொப்ப‌ம் இட‌ப்ப‌ட்டிருந்த‌து. மேலும் அந்த‌ அறிக்கையில் “க‌ல்லுரிக்கும்(மாநில‌ காவ‌ல்துறை த‌லைமை அதிகாரி) அவ‌ர‌து ப‌டைக‌ளுக்கும் இந்த‌ கிராம‌வாசிக‌ள் எப்பொழுது வேண்டுமானாலும் வேட்டையாட‌ப்ப‌டும் வ‌ன‌ மிருக‌ங்க‌ள் ஆகிவிட்டார்க‌ளா? எப்பொழுதெல்லாம் இவர்களில் எவர் ஒருவ‌ரை அவர்கள் பார்த்தாலும், அவ‌ரை தாக்கியோ, கொன்றோ, அல்ல‌து அவ‌ர‌து பொருட்க‌ளை கொள்ளைய‌டித்தோ செல்கின்றார்க‌ள். அர‌ச‌ நிர்வாக‌ம் ஆதிவாசிக‌ளுக்கான‌ அபிவிருத்தி(development) திட்ட‌ங்க‌ளைப் ப‌ற்றி பேசி வ‌ருகின்ற‌து. ஆனால் நீங்க‌ள் பார்த்துவ‌ரும் இந்த‌ கிராம‌வாசிக‌ள் ஆதிவாசிக‌ளைப் போல‌வா ந‌ட‌த்த‌ப்ப‌டுகின்றார்க‌ள்?” என்று எழுத‌ப்ப‌ட்டுள்ள‌து.
மாவோவின‌ரின் தாக்குத‌லில் 3 “கோயா” அதிர‌டிப்ப‌டை அதிகாரிக‌ளும், 1 மாவோவின‌ரும் கொல்ல‌ப்ப‌ட்டார்க‌ள். இத‌ன் பின்ன‌ர் பாதுகாப்பு‌ ப‌டை மீண்டும் திமாபுர் கிராம‌த்திற்கு திரும்பிய‌து. அடுத்த‌ நாள் முழுவ‌தும் அங்கே த‌ங்கியிருந்த‌ ப‌டையின‌ர், 15 மார்ச் அதிகாலையில் கிராம‌த்தை விட்டு சிந்த‌ல்ந‌ர் நோக்கி புற‌ப்ப‌ட்டார்க‌ள். வ‌ழ‌மை போல‌வே அங்கிருந்த‌ 50 குடிசைக‌ளை தீவைத்து கொளுத்தி, தாங்க‌ள் கைது செய்து கொண்டு வ‌ந்த‌ ப‌த்சே பீமாவை அங்கேயே கொன்றுவிட்டு சென்றார்க‌ள். ம‌ன்னு ராமை அவ‌ர்க‌ள் தங்க‌ளுட‌னே சிந்த‌ல்ந‌ர் காவ‌ல்நிலைய‌த்திற்கு அழைத்துச் சென்றார்க‌ள்.
இர‌ண்டு நாட்க‌ளுக்கு பின்ன‌ர் த‌ன‌து க‌ண‌வ‌ரான ம‌ன்னு ராமைத் தேடி சிந்த‌ல்ந‌ர் வ‌ந்தார்‌ ம‌ங்க‌லி‌. “காவ‌ல்நிலைய‌த்திலிருந்து ஒரு நூறு மீட்ட‌ர் தொலைவில் ஒரு இர‌த்த‌ வெள்ள‌ம் ப‌டிந்திருந்த‌து” என‌ அவ‌ர் எ‌ம்மிட‌ம் கூறினார். அந்த‌ இட‌த்தில் தான் ம‌ன்னு சுட்டு கொல்ல‌ப்ப‌ட்ட‌தாக‌ அங்கிருக்கும் கிராம‌வாசிகளும் கூறினார்க‌ள். காவ‌ல்துறை இந்த‌ தாக்குத‌லில் 35 ந‌க்ச‌ல்க‌ள் கொல்ல‌ப்ப‌ட்ட‌தாக‌வும், ஒரு ந‌க்ச‌லின் உட‌ல் கிடைத்துள்ள‌தாக‌வும் கூறிய‌து. 35 ந‌க்ச‌ல்க‌ள் கொல்ல‌ப்ப‌ட்ட‌தை மாவோவின‌ர் ம‌றுத்துள்ளார்க‌ள். காவ‌ல்துறை கூறும் அந்த‌ ஒரு உட‌லும் க‌ண்டிப்பாக‌ ம‌ன்னு ராமுடையதாக‌‌த்தான் இருக்கும்.
16 மார்ச், காலை 5 ம‌ணி, த‌ர்ம‌த்லா கிராம‌ம்
எரிந்து, ப‌குதி இடிந்து போன‌ த‌ன் வீட்டினுள்ளே கோவசி அத்மா உட‌ன் அவ‌ர‌து ம‌னைவி
எரிந்து, ப‌குதி இடிந்து போன‌ த‌ன் வீட்டினுள்ளே கோவசி அத்மா உட‌ன் அவ‌ர‌து ம‌னைவி
நான்கு ப‌க்க‌மும் இருந்த‌ வ‌ருகின்ற‌ ப‌டையின‌ரின் ச‌த்த‌த்தை கேட்டு அந்த‌ கிராம‌ம் அன்று விழித்த‌து. “எப்ப‌டி நீங்க‌ள் ந‌க்ச‌ல்க‌ளுக்கு த‌ங்குவ‌த‌ற்கு இட‌ம் கொடுக்க‌லாம்? எப்ப‌டி அவ‌ர்க‌ளுக்கு ச‌மைத்து கொடுத்தீர்க‌ள்? என்று ச‌த்த‌ம் போட்டு கொண்டே ப‌டை சீருடையும், க‌ருப்பு முக‌மூடியும் அணிந்த‌ ஒருவ‌ர் ம‌த்வி முக்காவை அவ‌ர‌து ம‌ண்குடிசையில் இருந்து வெளியே இழுத்து வ‌ந்தான். ம‌ற்றுமொரு ப‌டைக்குழு அவ‌ருக்கு பின்னால் தீக்குச்சிக‌ளோடு நின்று கொண்டிருந்த‌து, இன்னொரு ப‌டைய‌ணியோ தீயை ப‌ற்ற‌வைத்து ஒருபுற‌ம் எறிந்து கொண்டிருந்தார்க‌ள்.
ஓடி த‌ப்பிக்க‌ முடியாத‌வ‌ர்க‌ள் ப‌டையின‌ரிட‌ம் மாட்டிக்கொண்டார்க‌ள். அவ‌ர்க‌ளில் 30 வ‌ய‌தான் ஐம்லா சோகியும் ஒருவ‌ர். அவ‌ர்க‌ள் என்னை துப்பாக்கி முனையில் வைத்து வ‌ன‌ப்ப‌குதிக்குள் இழுத்துச்  சென்றார்க‌ள். ச‌ற்று தூர‌ம் சென்ற‌ பின்ன‌ர் அவ‌ரை துப்பாக்கியின் க‌ன‌மான‌ பின்புற‌ப்பகுதியின் மூல‌ம் அடித்து தாக்கி, க‌ற்ப‌ழித்துள்ளார்க‌ள். பலமாக தாக்கப்பட்டதினால் சில‌ நிமிட‌ங்க‌ளில்  அவ‌ர் ம‌ய‌ங்கியுள்ளார். அன்று ந‌ட‌ந்த‌தை அவ‌ர் நினைவு கூறுகையில் ஒருவ‌ர் க‌த்தியை எடுத்து அருகில் வ‌ந்த‌தாக‌வும் அதை வைத்து அவ‌ர் என்ன‌ செய்தார் என்று த‌ன‌க்கு நினைவில்லை என்றும் அவ‌ர் எ‌ம்மிட‌ம் கூறினார். ஆனால் அவ‌ர‌து க‌ண்ணிற்கு ச‌ற்று கீழே ஆழ‌மான‌ வெட்டுக்காய‌ங்க‌ள் உள்ள‌ன‌. அவ‌ரால் த‌ற்பொழுது ச‌ரியாக‌ பார்க்க‌ முடிவதில்லை. ம‌ய‌க்க‌ம் தெளிந்து ஒரும‌ணி நேர‌ம் க‌ழித்து அவ‌ர் எழுந்து பார்க்கும் பொழுது அவ‌ர் இடுப்பில் முடிந்து வைத்திருந்த‌ வாழ்நாள் சேமிப்பான‌ ரூ.8,000மும், த‌ங்க‌ காத‌ணிக‌ளும், மூக்குத்தியும் காணாம‌ல் போயிருந்த‌ன‌. மேலும் அவ‌ர‌து வீடும் தீக்கிரையாகி இருந்த‌து.
“நான் ம‌ய‌க்க‌ம‌டைந்து விட்ட‌தால் என்னை யார் க‌ற்ப‌ழித்தார்க‌ள் என்று என்னால் அடையாள‌ம் காட்ட இயலவில்லை, என‌க்கு நீதி கிடைக்க‌ வாய்ப்புள்ள‌தா?, என‌க்கு என்ன‌ ந‌டைபெற்ற‌து என்று நான் இந்த‌ உல‌க‌த்திற்கு கூற‌ வேண்டும், என்னை இந்த‌ நிலைக்கு உள்ளாக்கிய‌வ‌ர்க‌ள் த‌ண்டிக்க‌ப்ப‌ட‌வேண்டும்” என கூறுகின்றார் ஐம்லா சோகி.
இரண்டு ம‌ணி நேர‌த்திற்கு பிறகு த‌ர்மத்லா கிராம‌த்தை விட்டு பாதுகாப்பு ப‌டை வெளியேறிய‌து. அவ‌ர்க‌ள் செல்லும் போது த‌ர்ம‌த்லா கிராம‌வாசிக‌ளான‌ ம‌த்வா ஆன்டாவையும், ம‌த்வா ஐதாவையும் கயிற்றினால் க‌ட்டி த‌ங்க‌ளுட‌ன் இழுத்துச் சென்றார்க‌ள். இந்த‌ இர‌ண்டு ம‌ணி நேர‌த்தில் மொத்த‌ம் 207 குடிசைக‌ள் இடிக்க‌ப்ப‌ட்டிருந்த‌ன‌. ம‌த்வி முகா த‌ன‌து வீட்டிற்கு திரும்பி வ‌ந்த‌ பொழுது த‌ன‌து சில‌ லுங்கிக‌ளையும், வாழ்நாள் சேமிப்பான‌ ரூபாய், 2,000த்தையும், 60 அரிசி மூட்டைக‌ளையும், 20 விதை மூட்டைக‌ளும் கொண்டிருந்த‌ அந்த‌ வீடு முழுவதுமாக இடிக்கப்பட்டு குப்பை மேடாக‌ காட்சிய‌ளித்த‌து.
ஒரு வார‌த்திற்கு பின்ன‌ர் அர‌சு பாதிக்க‌ப்ப‌ட்ட‌ குடும்ப‌ங்க‌ளுக்கு அனுப்பிய நிவாரணப் பொருட்களான‌ அரிசி, ப‌ருப்பு போன்ற‌வைக‌ளும், எரிந்த குடிசைகளுக்கு ரூபாய். 3,000மும் அவ‌ர்க‌ளுக்கு வ‌ழ‌ங்க‌ப்ப‌ட்ட‌து. “இர‌ண்டு மாறுப‌ட்ட‌ அர‌சுக‌ள் இங்கு உள்ள‌ன‌வா? (ஒரு அர‌சு எங்க‌ள் வீடுக‌ளை இடித்து தீக்கிரைய‌க்குகின்ற‌து, ம‌ற்றொன்று நிவார‌ண‌மாக‌ அரிசியும், ப‌ண‌மும் கொடுக்கின்ற‌து), எப்ப‌டி இந்த‌ இர‌ண்டு அர‌சுக‌ளும் ஒன்றாக‌ இருக்க‌ முடியும்?” என்று விவ‌சாயியான‌ கௌவாசி அத்மா கேட்கின்றார்.
______________________________________________________________________________
செய்தி/படங்கள் – ந‌ன்றி : துசா மிட்ட‌ல்தெக‌ல்கா
மொழியாக்க‌ம்: ந‌ற்ற‌மிழ‌ன்.ப‌

உலகமயத்தால் சுரண்டப்படும் தலித்துகள், பெண்கள், ஏழைகள்!

தலித் மக்கள் 73 % கிராமங்களில் தலித் அல்லாதவர்கள் வீட்டில் நுழைய முடியாது, 70% கிராமங்களில் தலித் அல்லாதவர்களுடன் அமர்ந்து உண்ண முடியாது, 64% கிராமங்களில் பொதுவான கோவில்களில் நுழைய கூடாது. 36% கிராமங்களில் கடைகளில் நுழைய கூடாது





ஒரு தலைப்பட்சமே அடிப்படையாக – ஜெயதி கோஷ்

நகர சுத்தி தொழிலாளர்கள்
திருநெல்வேலி நகர சுத்தி தொழிலாளர்கள் படம்-பிரன்டலைன்
பொருளாதார வளர்ச்சி என்ற பெயரில் மேற்கொள்ளப் படும் நடிவடிக்கைகள் யாவும் சமூகத்தில் பாரபட்சமாக நடத்தப்பட்டு, விலக்கி வைக்கப்பட்டுள்ள நலிந்த பிரிவினரின் முன்னேற்றத்திற்காகத்தான் என பெரும்பாலான மக்கள் நம்ப வைக்கப்படுகிறார்கள்.  அதற்கு வைக்கப்படும் வாதம் யாதெனில் சந்தையின் சக்தியென்பது காலம் காலமாக இருந்து வரும் சமூக கட்டுப்பாடுகளையும், உடைத்தெறிந்து குறிப்பாக பாலின வேறுபாட்டினால் நீண்டகாலமாக மறுக்கப்பட்ட வாய்ப்புக்களை பெற்று தருகிறது என்பதாகும்.
துரதிருஷ்டவசமாக இந்தியாவில் யதார்த்தம் என்பது அது போலன்றி மிகவும் சிக்கல் வாய்ந்ததாக உள்ளது.  தற்போதைய பொருளாதார முன்னேற்றத்திற்கு உறுதுணையாக சொல்லப்படும் பெரிய அளவிலான முதலீடுகள், அதனுடைய சக்தியினால் அதிகமான தொழிலாளர்கள் ஈடுபடும் உற்பத்தி சார்ந்த வேலை வாய்ப்புக்கள் குறைவாகவும், பாதுகாப்பற்றதாகவும், இருக்கும் போக்கிலிருந்து மாறவில்லை என்பதுடன், பிடிவாதமாக முதலாளித்துவ நலன் சார்ந்தே உள்ளது.
குறிப்பிட்டுச் சொல்ல வேண்டுமென்றால், இந்திய கார்ப்பரேட் முதலாளிகளைப் பொறுத்தவரை முறைசார்ந்த, அல்லது முறைசாராத அனைத்து பணிகைளயும் குறைந்த கூலிக்கு வெளியில் கொடுத்து வாங்குவது என்ற முறை கடைபிடிக்கப் படுவதை சொல்லலாம்.  குறிப்பிட்ட எண்ணிக்கையை மிகுதிப்படுத்தும் அத்தகைய நடவடிக்கையில் கார்ப்பரேட் முதலாளிகளின் உற்பத்தி செலவினம் பெருமளவில் குறைகிறது என்பதோடு, உற்பத்தியில் இருக்கிற அபாயங்களை பல சாதாரண தொழிலாளர்களின் வாழ்வின் ஒரு அங்கமாக இருக்கிற சிறிய பிரிவுகளிடம் தள்ளிவிடுவதற்கும் அது உதவியாக உள்ளது.
இந்தியாவில் வெற்றிகரமான பொருளாதார நடவடிக்கைகள் என்பது, பெரிய அளவில் அங்கீகரிக்கப்படாத, முறைசாரா தொழிலாளர்களின் உழைப்பினால் கிடைக்கக் கூடிய மறைமுக உதவிகளைச் சார்ந்தே இருக்கிறது. அதிகமான பணிகளை வெளியில் கொடுத்து வாங்குவதால் நிர்ணயிக்கப்பட்ட செலவினம் என்பது கார்ப்பரேட் முதலாளிகளுக்கு பெருமளவில் குறைகிறது.
உதாரணத்திற்கு இந்தியாவில் கணினி மென்பொருள் தொழிலில் சர்வதேசங்களோடு ஒப்பிடுகையில் மலிவான கூலிக்கு திறமையானவர்கள் கிடைப்பதால், அதன் வெற்றிக்கு வழிவகுக்கிறது.
மேலும் குறிப்பிடத்தக்கவாறு செலவின குறைப்பு என்பது ஒவ்வொரு அலுவலகத்திலும் சுத்தப்படுத்துவது, அலுவலகப் பராமரிப்பு, போக்குவரத்து, காவல்/பாதுகாப்பு பணிகள், அலுவல் முடிந்தபின் நடைபெறும் இதர பணிகள், உணவு சமைத்தல், வழங்கல் போன்ற அனைத்து பணிகளும் வெளியில் சிறு சிறு குழுக்களிடம் கொடுப்பதால் ஏற்படுகிறது. பெரும்பாலும் இவை மிகக் குறைந்த ஊதியத்தில் அதிக நேரம் பணிவாங்கும் சிறிய நிறுவனங்களில் கொடுக்கப்படுகிறது.  இதில் தொழிலாளர்களுக்கான பணி பாதுகாப்பு உள்ளிட்ட எவ்வித பாதுகாப்பும் இல்லை.  இத்தகைய குறைந்த சம்பள பணியாளர்கள் மூலமான செலவின குறைவு இல்லாதிருந்தால் சிறிய கணினி மென்பொருள் நிறுவனங்கள் சர்வதேச நிறுவனங்களின் போட்டியை சமாளிக்க மிகுந்த சிரமப்பட நேரிடும்.  இதே நிலை உற்பத்தியில் இருக்கும் கார்ப்பரேட் நிறுவனங்கள் மற்றும் புதிய நிறுவனங்களுக்கும் பொருந்தி வரும் உண்மையாகும்.
கார்ப்பரேட் பிரிவில் இத்தகைய நேரடி மற்றும் மறைமுக செலவின குறைப்பு என்பதில் குறைந்த சம்பளத்திற்கு சில சமூக தன்மைகளை வைத்து தொழிலாளர்களை தீர்மானித்து திறம்பட கையாள்வதில் இந்திய முதலாளிகள் கைதேர்ந்தவர்களாக இருக்கிறார்கள்.  சாதி மற்றும் இனத்தின் வழியான பாகுபாடு காட்டும் தன்மை என்பது இந்தியாவில் நீண்ட காலமாக இருந்து வருகிறது. இந்திய சமூகத்தில் உள்ள இந்த பிரத்யேக சாதி ஏற்றத் தாழ்வுகளை வைத்துக் கொண்டு கார்ப்பரேட் தரகு முதலாளிகள் மலிவான தொழிலாளர்களை முடிவு செய்கின்றனர்.
பல்வேறு ஆய்வுகளிலிலிருந்து சமூக பிரிவினை என்பது வறுமையோடு தொடர்புடையதாக இருக்கிறது என்பதும், அதன் காரணமாக பணியும், சம்பளமும் சமூக பிரிவுகளில் மிகவும் ஏற்றத் தாழ்வாக அமைகிறது என்பதும் தெரியவருகிறது.  தேசிய மாதிரி ஆய்விலிருந்து குறைவான கூலிக்கு வேலையாட்கள் என்பது பொதுவான சாதி இந்து மக்கள் தொகையோடு ஒப்பிடுகையில் பெரும்பாலும் பட்டியலிடப்பட்ட பழங்குடியினர், பட்டியலிடப்பட்ட இனத்தவர், இஸ்லாமியர் மற்றும் பிற்படுத்தப்பட்டவர்கள் (இந்த வரிசையில்) ஆகியோரே அதிகமாக உள்ளனர் என்பது தெரியவருகிறது.  இது பெரும்பாலும் கல்வியறிவு குறைவினாலும், திறமையின் அளவுகோலாலும் தீர்மானிக்கப் படுகிறது என்பதுடன், கல்வியறிவு பெறுவதிலும் சமூகத்தில் மிகுந்த பாகுபாடுகள் உள்ளது.
அத்தகைய சாதிவாரியான வேறுபாடுகள் என்பது ஊரக மற்றும் கிராமப்புற வேலைவாய்ப்பு சந்தைகளில் நிலவுகிறது.  உதாரணத்திற்கு டெல்லி போன்ற பொருளாதாரத்தில் சிறந்த வளர்ச்சி பெற்ற மாநகராட்சியில் கூட தலித் பணியாளர்களுக்கு வேலை வழங்குவதில் பாகுபாடு கடைப்பிடிக்கப்படுவதுடன், அவர்கள் தான் பெரும்பாலும், மீள முடியாத குறைந்த கூலி பணிகளில் நியமிக்கப் படுகின்றனர்.  உற்பத்தியில் கூட இவையெல்லாம் அத்தியாவசிய பணிகள் அதாவது குப்பை பெருக்குபவர்கள், சுமைப்பணியாளர்கள், கட்டிட பணியாளர்கள், கடைகளில் விற்பனை உதவியாளர்கள் மற்றும் பாதுகாப்பு பணிகள் மேற்கொள்பவர்கள் ஆகிய தொழிலாளர்கள்.  தொடர்புகளின் மூலம் இத்தகைய குறைந்த திறனுள்ள வேலைகளுக்கான ஆட்கள் தேர்வில் வெகு காலமாக இருந்துவரும் சாதிய பாகுபாடு என்பது பிரதான பங்கு வகிப்பதுடன், அவர்களிடம் இருக்கும் ஏழ்மையை பயன்படுத்தி குறைந்த கூலிக்கான ஆட்கள் தேர்வு என்பது மேற்கொள்ளப்படுகிறது.  இந்த சமூக அமைப்பில் அவர்களுக்கான வருமானம் ஈட்டல் என்பதில் உள்ள அவசியத்தினால் அவர்கள் குறைந்த கூலிக்கு அமர்த்தப்படுகின்றனர்.
அதேபோல் ஊரக இந்தியாவில் சாதிய நடைமுறை வழக்கங்களினால் உள்ளூரில் மிகக் குறைந்த கூலிக்கு அவர்களின் ஏழ்மையை பயன்படுத்தி தாழ்த்தப்பட்ட சாதியினரை வேலைக்கு முதலாளிகளிடம் அமர்த்தும் பழக்கம் என்பது தொடர்ந்து கொண்டிருக்கிறது.  திரு கன்ஷ்யாம் ஷா என்பவர் எழுதியுள்ள ஊரக இந்தியாவில் தீண்டாமை என்ற புத்தகத்தில் பஞ்சாப், உத்திரப்பிரதேசம், பீஹார், மத்திய பிரதேசம் (சத்தீஸ்கர் உட்பட) ராஜஸ்தான், மகாராஷ்டிரா, ஒரிஸ்ஸா, ஆந்திர பிரதேசம், கர்நாடகா, கேரளா மற்றும் தமிழ்நாடு ஆகிய 11 மாநிலங்களில் தீண்டாமை அதிக அளவில் இருந்து வருகிறது என்பதும், இங்குள்ள பெரிய அளவிலான சமூக பழக்க வழக்கங்களினால் தாழ்ந்த சாதியினர் மற்றும் தலி்த் பிரிவினரின் பொருளாதார முன்னேற்றம் என்பது கட்டுப்படுத்தப் பட்டு அதன் காரணமாக அவர்கள் கடுமையான நிபந்தனைகளுடனான மிகக் குறைந்த கூலிக்கு தமது உழைப்பை விற்க வேண்டி நேருகிறது.
இந்த ஆய்வில் 73 சதவீத கிராமங்களில் தலித் மக்கள் தலித் அல்லாதவர்கள் வீட்டில் நுழைய முடியாது என்பது தெரியவருகிறது.  70 சதவீத கிராமங்களில் தலித்துக்கள் தலித் அல்லாதவர்களுடன் அமர்ந்து உண்ண முடியாது.  64 சதவீத கிராமங்களில் தலித்துக்கள் பொதுவான கோவில்களில் நுழைய கூடாது. 36 சதவீத கிராமங்களில் தலித்துக்கள் கடைகளில் நுழைய கூடாது.  ஏறக்குறைய இந்த ஆய்வு மேற்கொண்ட கிராமங்களில் 3ல் ஒரு பங்கு கிராமங்களில் உற்பத்தி பொருட்களை வாங்கி பொதுவாக பயன்படுத்தும் பொருட்களை விற்கும் பணியில் தலித்துக்கள் வியாபாரிகளாக செயல்படுவதை அனுமதிப்பதில்லை என தெரியவருகிறது.  இத்தகைய பழக்க முறைகளினால் தலித்துக்கள் தங்களின் விருப்பப்படி சம்பாதிக்கும் முறையை தேர்வு செய்து கொள்ள முடிவதில்லை என்பதால் கூலி உயரும் காலங்களில் கூட மலிவான கூலி வேலைக்கு அவர்கள் ஆட்பட நேரிடுகிறது. இந்தியாவில் அபரிமிதமான பொருளாதார வளர்ச்சியை கண்டுகொண்டிருக்கும் சூழலிலும் இத்தகைய வழக்கங்கள் தொடர்ந்து கொண்டுதானிருக்கிறது.
ஆனால் முக்கியமாக இங்கே கவனத்தில் கொள்ள வேண்டியது என்னவெனில் அத்தகைய பழக்கங்கள் தொடர்ந்து கொண்டிருக்கிறது என்பதோடல்லாமல், பொருளாதாரம் ஓரிடத்தில் குவியும் நடவடிக்கைக்கு அடிப்படையாகவும் அது இருக்கிறது என்பதுதான்.  மற்றொரு வார்த்தைகளில் சொல்வதானால், இந்தியாவில் முதலாளித்துவம் என்பது, குறிப்பாக உலகளாவிய சமீபத்திய  சூழலில், ஏற்கனவே இருந்து வந்த தற்போதும் இருக்கிற சாதிய பாகுபாடுகளை பயன்படுத்தி தாழ்த்தப்பட்டவர்களை தமது சொந்த நலனுக்காக தள்ளி வைப்பதும், அவர்களின் ஏழ்மையை பயன்படுத்தி மிகக் குறைந்த கூலிக்கு அழைப்பதுமான போக்கில் தொடர்ந்து கொண்டுதானிருக்கிறது.
எனவே சமூக பிரிவினைகள் என்பது பொருளீட்டும் நடவடிக்கையில் சுதந்திரமாக இல்லை.  மாறாக கூடுதலாக பணி வாங்குவதும், குறைந்த கூலிக்கு அதிக ஆட்கள் கிடைக்கும் வண்ணம் வழக்கத்தை அதிகரிக்கும் விதமாகவும் உள்ளது.
இதேமாதிரியான பாகுபாடு பார்க்கும் பழக்கம் என்பது பாலினத்திற்கேற்பவும் வேறுபடுவது கண்கூடான ஒன்று.  பெண்களிடம் வேலை வாங்குவது என்பதில் வெளிப்படையாக இந்த நான்கு முரண்பாடுகள் தென்படுகிறது.  கூலி வழங்கப்படும் தொழிலாளி, குறைந்த கூலி வழங்கப்படும் தொழிலாளி, கூலி மறுக்கப்படும் தொழிலாளி மற்றும் வேலை மறுக்கப்படும் தொழிலாளி என்பதாகும்.   வேலைவாய்ப்பு அதிகரித்து, வேலையின்மை என்பது குறையும் போது, அல்லது கூலி பெறுபவர் எண்ணிக்கை அதிகரித்து கூலி பெறாதவர்கள் எண்ணிக்கை குறையும் போது ஏற்படுகிற இது ஒரு முரண் நிலையாகும்.
ஊரக பெண்களைப் பொறுத்தவரை அவர்களின் வழக்கமான வேலை என்பது அதிகரித்து வருவதுடன் குறிப்பாக வீட்டு வேலைகள் மற்றும் உற்பத்தி சார்ந்த வேலைகளில் முக்கியமாக குறைந்த சம்பளத்திற்கு வேலை செய்யும் நிலை என்பது ஏற்படுகிறது.  உற்பத்தி என்பதைப் பொறுத்தமட்டில் சமீபத்திய பல பெரிய நிறுவனங்கள் தமது உற்பத்தி சங்கிலியில் அது சார்ந்த பணிகளை சிறிது சிறிதாக வெளியில் கொடுத்து வாங்கும் தன்மையினால், வீட்டிலிருந்து கொண்டே குறைந்த கூலிக்கு வேலை செய்வது என்பது பெண்களிடம்  அதிகரித்திருக்கிறது.
ஆனால் ஏற்றுமதி சார்ந்த வேலைகளில், சமீபத்தில் அமைக்கப்பட்டுள்ள சிறப்பு மண்டலங்களில் கூட ஊரக இந்தியாவில் பெண்களை வேலைக்கு அமர்த்துவது என்பது மிகக் குறைந்த அளவிலேயே உள்ளது.  இதன் நடுவில் ஊரக இந்தியாவில் சம்பளத்திற்கு வேலை கிடைப்பதில் உள்ள சிரமத்தின் காரணமாக பெண்களிடம் விவசாயம் சாராத சுய வேலை வாய்ப்பு என்பது அதிகரித்திருக்கிறது.
இந்த பொருளாதார வளர்ச்சி காலத்தில் பெண்களுக்கு வழங்கப்படும் சம்பளம் என்பது 1993-94-லிருந்து 2004-05-க்கு இடைப்பட்ட 10 ஆண்டு காலத்தில் சிறிது கூடியிருக்கிறது.  ஆனால் அதே சமயம் தேசிய தனிநபா் வருவாய் என்பது பெண்களை விட மிக அதிகமாக வளர்ச்சியடைந்திருக்கிறது (ஊரக பட்டதாரிகள் மற்றும் கிராமத்து படிக்காத பெண்கள்),  உண்மையான சம்பளம் என்பது குறைந்திருக்கிறது.  இன்னும் குறிப்பாகச் சொல்லப்போனால் ஆண்களுக்கும் பெண்களுக்குமிடையிலான சம்பள வித்தியாசம் என்பது அதிகரித்துள்ளதுடன், உலகிலேயே இங்குதான் அதிகமாக உள்ளது.
பொதுப் பணிகள் என்பது மிகுதியாக குறைந்த கூலி வாங்கும் பெண்களை சார்ந்து இருக்கிறது.  மாதிரி நிர்வாகி என்று செயல்பட வேண்டிய அரசுத் துறை பணிகளில் பெண்களுக்கான வேலை வாய்ப்பு என்பது இன்னும் குறைவாகத்தான் உள்ளது.  அத்தியாவசிய பொதுப்பணிகள் என்பது நிச்சயமற்ற ஒப்பந்த முறையில் குறைந்த கூலி மற்றும் பயன்களுக்கு பெண்களை வேலைக்கமர்த்தும் போக்குதான் நீடிக்கிறது.
இது பள்ளிக் கல்வி போன்ற அரசுப் பணியில் அப்பட்டமாக தெரிகிறது. (அதாவது பகுதிநேர ஆசிரியர்கள் நியமனத்தினால்)  அதே போல் சுகாதாரம் மற்றும் ஊட்டச்சத்து (அங்கன்வாடி மற்றும் சமூக நலப்பணிகள்) சார்ந்த பணிகளில் பெண்கள் பகுதி நேர பணியாளர்களாக நியமிக்கப்படுகிறார்கள்.
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உத்திரவாத திட்டம் என்பது ஒன்று வந்தபின் தான் இத்தகைய பாலின வேறுபாடுகள் என்பது குறைந்துள்ளது ஊரகப் பணிகளில் இந்த திட்டம் செயல்படுவதை பார்க்கும் போது தெரிகிறது.  சுய வேலைவாய்ப்பில் பெண்களுக்கான நிபந்தனைகள் என்பது, சம்பளத்திற்கான பணியில் உள்ள நடத்தைப் பாங்கினை சிரமப்படுத்தும் விதமாக உள்ளது.  வருமானம் தொடர்பான குறைந்த எதிர்பார்ப்பின் அடிப்படையில் பெண்களின் விவசாயம் சாராத சுய வேலைவாய்ப்பு தீர்மானிக்கப்படுகிறது என்ற போதிலும் அந்த குறைந்த பட்ச எதிர்பார்ப்பினை கூட பூர்த்தி செய்வதில்லை என்பதுதான் யதார்த்த நிலையாக உள்ளது. தொழில்துறையிலும், சிறு வணிகத்துறையிலும் உயர் வருவாய் என்பது ஏற்பட்டுள்ள போதிலும், ஏற்றுக் கொள்ளக் கூடிய நிலையில் போதிய வருவாய் ஈட்டும் வாய்ப்பு என்பது குறைவாக இருப்பதால், சுயவேலை வாய்ப்பு என்பது சிரமத்துடன் கொண்டுசெல்லும் ஒரு நடவடிக்கையாகவே உள்ளது.
குறிப்பிட்ட பகுதியில் பொருளாதார வளர்ச்சி மேலோங்கியிருந்தாலும், வீட்டு வேலைகள் சார்ந்த பணிகளில், அது பெருவாரியாக ஒரு வேலைக்கு ஒரு கூலி என்று இருப்பதால், குறிப்பாக பெண் தொழிலாளர்களின் வருமானத்தின் பெரும்பகுதி இத்தகையதே என்பதால், அந்த தொழிலிலும், அதனால் வரும் இந்த கூலியும், பெரிய நகரங்களில் வெகுவாக குறைந்து வருகிறது என்று தேசிய மாதிரி கணக்கெடுப்பு எடுத்த ஆய்வும், பல ஆராய்ச்சிக் கட்டுரைகளும் வெளிப்படுத்துகிறது.
அது போல் பெண் தொழிலாளர்களின் பணிக்கு கூலியே கொடுப்பதில்லை என்பதும் அதிகமாகி வருகிறது.ஏனென்றால் பெண்கள் நலனுக்காக ஒதுக்கப்படும் செலவினங்கள் குறைக்கப்படுவதும், அல்லது தனியார் மயமாக்கப்படல், அல்லது வலுவிழந்த பொது சொத்துக்கான கட்டுமானம், மனைகளுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களின் கிடைப்பதற்கான கால நீடிப்பு ஆகும் வகையில் உள்ள பற்றாக்குறை கட்டுமான வசதியும், அல்லது தெளிவாக சொல்லப் போனால், நல்ல நோக்கமுள்ள பல திட்டங்கள் கூட (உதாரணம்- வன அழிப்பு) பாலினம் சார்ந்ததாக உள்ளது என்பதுமே ஆகும்.
மீண்டும் இந்த பாலின வேற்றுமை தற்போதும் இருந்து கொண்டு இருக்கிறது என்பது அச்சாரமான குறிப்பு என்பதோடு மட்டுமின்றி, (இந்தியாவில் இந்த நிலைப்பாடு மேல்மட்டத்திலும் எடுக்கப்படுகிறது) இது மூலதன குவிப்பிற்கான வழிமுறையில் பிணைந்துள்ளது. எனவே, தற்போதைய வளர்ச்சி, நிலவி வரும் சமூக வேற்றுமையை உடைப்பதற்கு பதில் அதனை சார்ந்திருந்தே வளர்ச்சி பற்றிய கருத்தை முன்னெடுத்து செல்லப்படுகிறது.
_________________________________________________________________
-தமிழில் – சித்ரகுப்தன்